Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்க்கான நிரந்தரத் தீர்வு எத்தனை கூட்டத்தொடருக்குப் பின்? - தாயகத்தில் இருந்து எழுவான்.

Featured Replies

[size=4]

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தொடர்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழர்க்கான தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்பதற்கப்பால், ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக உலகளாவிய போர்ச் சட்டத்தின் முன் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதையே தமிழர்களைப் பொறுத்த

வரையில் எதிர்பார்ப்பாகவுள்ளது.[/size][size=4]

ஆனால், ஒவ்வொரு கூட்டத்தொடர்களின் இறுதி முடிவானது ஏமாற்றத்தையே கொடுக்கிறது. போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் மனித குலத்திற்கெதிரான குற்றச் செயல்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் ஒரு சடலமாவது மீட்ககப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மீட்கப்படும் சடலத்திற்குக் காவல்துறை ஏதாவது ஒரு கூற்றைத் தெரிவித்துவிடுகிறது.[/size][size=4]

இந்நிலையில், இடதுசாரி அரசியல் கட்சிகள் உட்பட தமிழ் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் இடம்பெற்றுவரும் சிறீலங்காப் படையினரின் அடாவடித்தனங்கள், கொலைகள் மற்றும் அத்துமீறல்களைப் பட்டியல் போட்டு ஐ.நா வரைக்கும் அனுப்புகின்றன. அவையெல்லாம் எழுத்துவடிவில் சென்றாலும் நடைமுறையில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.[/size][size=4]

un%20tk%2001.jpg[/size][size=4]

இன்றைய நிலையில் வடக்கு, கிழக்கு பகுதியில் முக்கியமாக இடம்பெற்றுவருவது படையினரின் அடாவடித்தனங்கள். தமிழர்களின் பூர்விக நிலங்களில் அத்தமீறிய குடியேற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் படைமயமாக்கல் மற்றும் சிறீலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை போன்றன பேசப்படும் விடயமாக உள்ளது.[/size][size=4]

இவ்வாறான நடவடிக்கையினால் சிறீலங்காவில் தனித்துவமாக தமிழினம் என்று ஒன்றில்லை என்று நிரூபிக்க சிங்கள ஆட்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழர்களின் தனித்துவத்தைக் குறைப்பதற்காக தமிழர் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.[/size][size=4]

ஆனால், இந்த விடயங்களைப் பிற்காலத்தில் எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது என்ற கவலை அனைவரினது மனத்திலும் எழுந்துள்ளது. முப்பது வருடகால ஆயுதப் போராட்ட காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதியில் முகாமிட்ட படையினர் அப்பகுதியில் சிறிய வெள்ளரச மரத்தையும், சிறிய பௌத்த விகாரையையும் அமைத்துவிட்டு தற்போது, இது சிங்களவர்கள் குடியிருந்த பகுதியென உலக நாடுகளுக்கு படம் காட்டமுற்படுகிறது.[/size][size=4]

இன்றும் ஐந்தோ அல்லது பத்து வருடங்கள் கடந்த பின்னர் தற்போது அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்கள் சொல்வார்கள் இப்பகுதி எங்களின் சொந்தப் பூமி என்பர். புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மாத்திரமல்ல உள்ளூரிலும் இடம்பெயர்ந்து வசிப்பவர்களும் தமது சொந்த இடங்களை மறந்து வாழவேண்டிய சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது.[/size][size=4]

வடக்கைப் பொறுத்தவரையில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகமாகயிருந்தாலும் கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சிங்களவர்கள் மற்றும் சில முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களினால் தமிழர்களின் பூர்வீக பூமி பறிபோய்க்கொண்டிருக்கின்றது. தமிழர் பகுதியில் அத்துமீறிக் குடியேறும் சிங்களவர்களுக்கு அரசாங்கம் அனைத்து பாதுகாப்பும் சலுகைகளையும் வழங்கிவருகிறது. அதுபோன்று முஸ்லீம்களுக்கு அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் மூலமாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.[/size][size=4]

போராட்டத்தில் தோற்றுப் போன சமூகத்தை வெற்றி பெற்ற சமூகம் தமது அடிமைகளாக வைத்துக் கொள்வது போன்று தமிழர்களைச் பயன்படுத்த சிங்கள தேசம் முயன்றுவருகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதெனலாம். எனினும், தமிழீழத்திற்கான போராட்டம் சிறீலங்காவில் மௌனிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், உண்மையில் ஆயுதப் போராட்டத்தினால் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எவ்வளவு உயிரிழப்பு, பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டதோ, அதே போன்றதொரு இழப்பை ஏற்படுத்தக்கூடிய போராட்டந்தான் தற்போது புலம்பெயர் நாடுகளில் தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.[/size][size=4]

சிறீலங்கா அபிவிருத்தியடையாமல் இருப்பதற்கு புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையும், யுத்த நிலையுமே காரணமென கூறிய ஆட்சிக்கு வந்தது சிறீலங்கா அரசாங்கம். இன்று சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச அமைதியின்மைதான் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.[/size][size=4]

உலக வல்லரசுகளின் அனைத்துவகையான உதவியுடன் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டோம் என்று மார்பு தட்டிய சிறீலங்காவின் மமதை பிடித்த ஆட்சியாளர்கள் இன்று அடுத்த நிலை என்ன என்றளவுக்கு நிலைமை மாறியுள்ளதென்றால் அதற்குக் காரணம் எமது புலம்பெயர்ந்த தமிழர்கள் தான்.[/size][size=4]

ஆனால், புலம்பெயர் மக்களையும் உலக நாடுகள் ஏமாற்ற முற்பட்டுள்ளதா என்ற எண்ணம் தற்போது எல்லோரினதும் மனங்களில் எழுந்துள்ளதெனலாம். காரணம், போர் முடிவடைந்த ஒரு வருடகாலத்தில் சிறீலங்கா அரசு எதைத் தெரிவித்தாலும் அதுதான் சரி என்ற உலகநாடுகள், அதற்குப் பின்னர் சிறீலங்காவினால் தெரிவிக்கப்படும் மனிதாபிமான படை நடவடிக்கை எவ்வாறு நடைபெற்றது என்பதற்கான ஆதாரங்களை பார்வையிட்ட பின்னர்தான் சிறீலங்கா அரசாங்கத்தின் கபட நாடகம் வெளிவரத் தொடங்கியது. [/size][size=4]

அவ்வாறான, ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இன்னும் விட்டுவைத்திருப்

பதுதான் எல்லோர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் நியமனம் செய்த நிபுணர் குழு அறிக்கை, சனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இரண்டு ஆவணப் படங்கள், மனித உரிமைகளை பாதுகாக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இன்னும் கேள்வி கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.[/size][size=4]

இங்குதான் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். சிறீங்காவுக்கு எதிராக ஐ.நா சபையின் பாதுகாப்பு சபை யில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஐ.நாவில் இருக்கும் விசேட அதிகாரம் (வீட்டோ) பயன்படுத்தி முடியடிக்கப்பட்டது.[/size][size=4]

சிறீலங்கா அரசாங்கம் இந்த இரு நாடுகளையும் நம்பித்தான், உலக நாடுகளை எதிர்க்குமளவுக்கு துணிந்துவிட்டது. எந்த நாடாகயிருந்தாலும் சரி, எந்தச் சபையாக இருந்தாலும் சரி நாங்கள் எதனையும் எதிர்கொள்ளத் தயார் என்ற நிலைப்பாட்டிற்குள் சிறீலங்கா அரசாங்கம் உள்ளது. இதனை முறியடிக்க உலக நாடுகளினால் என்ன திட்ட

முள்ளதென்பதை முன்வையுங்கள். [/size][size=4]

சிறீலங்கா அரசாங்கம் அனைத்துத் துறைகளையம் படைமயமாக்கிக் கொண்டு வருகிறது. குறைந்தது ஓரிரு ஆண்டுகளில் படையாட்சி வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. அதற்கான அனைத்து ஆரம்பக் கட்ட வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறான நிலை தோன்றினாலும், உலக நாடுகளில் எதனையும் செய்வதற்கில்லை. காரணம், 1994ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் படையாட்சி இடம்பெற்றது. அவ்வாறு தற்போதைய மியன்மாரில் (பர்மா) படையாட்சி நடைபெற்றது. இவற்றுக்கெல்லாம் உலக நாடுகளினால் என்ன செய்ய முடிந்தது? காலத்திற்கு காலம் உலக நாடுகளினால் ஒரு அறிக்கை மாத்திரம் விடப்பட்டதே தவிர வேறு எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.[/size][size=4]

அவ்வாறானதொரு ஆட்சி முறை பிரகடனப்படுத்தப்படுமாயின் சிறீலங்காவில் எஞ்சியுள்ள தமிழர்களும் தாமாகவே புதைகுழிகளை வெட்டிக் கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டியதுதான். அதன் பின்னர் சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் நினைப்பது போன்று பௌத்த நாடு, பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தம் நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்றெல்லாம் புதிய புதிய சட்டங்களை உருவாக்கி தமிழர்களை அடியோடு அழித்துவிடுவார்கள்.[/size][size=4]

இன்று உலக நாடுகளில் குறிப்பாக பர்மாவில் முஸ்லீம்கள், பௌத்தர்களினால் விரட்டியடிக்கப்படுகிறது. அதேபோன்று திபெத்தில் திபெத்தியர்கள் சீனர்களினால் துரத்தப்படுகின்றார்கள். பாகிஸ்தானிலிருந்து இந்துக்கள் விரட்டப்படுகின்றார்கள். இவ்வாறு எதிர்காலத்தில் சிறீலங்காவிலிருந்து தமிழர்கள் விரட்டப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை.[/size][size=4]

தங்களை ஜாம்பவான்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி காலத்தை இழுத்தடிக்கும் நாடுகள் எதிர்காலத்தில் தமிழர்கள் விரட்டியடிக்கப்படும் போதும் முதலாவது கூட்டத்தொடர், இரண்டாவது கூட்டத் தொடர் என எண்ணிக் கொண்டு வேடிக்கை பார்க்கத்தான் போகின்றார்கள் என்பதுதான் உண்மை.[/size][size=4]

நன்றி : ஈழமுரசு[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.