Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கையின் நட்பு நாடுகள் நீக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கையின் நட்பு நாடுகள் நீக்கம்!

[sunday, 2012-11-18 20:36:34]

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சுழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ஜேர்மனி, அயர்லாந்து, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசாகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, ரஸ்யா, கியூபா ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்க மாட்டாது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதன் போது இலங்கைக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நட்பு நாடுகளின் ஆதரவில்லாத இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும். அத்துடன், இம்முறை பாகிஸ்தான் தெரிவாகியிருப்பது மட்டுமே, இலங்கைக்கு ஆறுதலளிக்கக் கூடிய ஒரே விடயம் ஆகும்.

http://seithy.com/breifNews.php?newsID=70409&category=TamilNews&language=tamil

[size=1]

[size=4]அரசியல் நகர்வுகள் மிக கடினமானவை. நீண்ட பயணம். பொறுமையும் விடாமுயற்சியும் தேவை. [/size][/size]

[size=4]சத்தமின்றி உழைக்கும் புலம்பெயர் தனிப்பட்டவர்களுக்கு அமைப்புக்களுக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உழைத்து வரும் தொடரில் ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா இரகசிய வாக்கெடுப்பில் அமெரிக்கா தெரிவு

index88.jpg

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 131 வாக்குகளை பெற்று அமெரிக்கா தெரிவாகியுள்ளதுடன் அதிகப்படியான வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த இரகசிய வாக்கெடுப்பு நியுயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அமெரிக்காவை தவிர ஜேர்மனி, அயர்லாந்து, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன.

இலங்கைக்கு நெருங்கிய நாடுகளான சீனா, ரஸ்யா, கியூபா ஆகிய நாடுகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காது. ஆமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ஜேர்மனி 127 வாக்களையும், அயர்லாந்து 124 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதேவேளை பெலாஸ், இலங்கை, ஈரான் மற்றும் அஸர்பைஜன் அடங்களாக மனித உரிமைகள் பேரவையில் இடம்பிடிப்பதற்காக முன்னர் போட்டியிட்ட நாடுகளுக்கு எதிரா வெற்றிகரமான பிரசாரத்தை மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுத்துள்ளனர் என்று அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

u%20n.jpg

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு புதிதாக 18 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்க மாட்டா.

இதனால், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அமைய, இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்கள் குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதக் கூட்டத்தொடரில் மீண்டும் விவாதிக்கப்படும் போது, இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் நடந்த இரகசிய வாக்கெடுப்பில் அமெரிக்கா 131 வாக்குகளுடன் தெரிவானது. ஜேர்மனி 127 வாக்குகளுடனும், அயர்லாந்து 124 வாக்குகளுடனும் தெரிவு செய்யப்பட்டன.

இவை தவிர, ஆஜென்ரீனா, பிரேஸில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கஸகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன.

இம்முறை பாகிஸ்தான் தெரிவாகியிருப்பது மட்டுமே, இலங்கைக்கு ஆறுதலளிக்கக் கூடிய ஒரே விடயம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

http://www.onlineuth...431622519485940

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.