Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்ததாக வீரவன்சவின் கூத்து

Featured Replies

புலிகளுக்கு வெள்ளைபூச இணைத்தலைமை நாடுகள் முயற்சி தமிழரை பாதுகாக்குமாறு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

[01 - June - 2006] [Font Size - A - A - A]

-இணைத் தலைமை நாடுகளின் அறிக்கையால் விமல் வீரவன்ச ஆவேசம்

இலங்கையின் பிரச்சினையை இந்த வகையில் தான் தீர்க்க வேண்டுமென ஆணையிடும் அதிகாரம் இணைத் தலைமை நாடுகளுக்கு கிடையாது. அவர்கள் எமக்கு ஆணையிட ஆளுநர்கள் அல்ல என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அதன் பொதுச் செயலாளரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ரீதியான இலங்கை அரசாங்கத்தின் மீதும், நாட்டின் இறைமை மீதும் நிபந்தனைகளுடனான அச்சுறுத்தலை இணைத்தலைமை நாடுகள் விதித்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

புலிகளை பயங்கரவாத பட்டியலில் இணைத்த நாடுகளும், இணைத்தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அதே

நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாதிகளைப் போன்று தீர்ப்புச் சொல்லியுள்ளதோடு நிதி வேண்டுமென்றால், புலிகளுடன் இணைந்து சமாதானத்தை ஏற்படுத்துங்கள் என்று நிபந்தனையும் விதித்துள்ளது.

ஜனநாயக அரசியலில் கலந்து அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யை கட்டுப்படுத்துமாறும் இதன் மூலம் ஈ.பி.டி.பி.யை வன்முறையாளார்களென்றும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா. இதுவொன்றே போதும் புலிக்கு வெள்ளைச் சாயம் பூசுவதற்கு இணைத் தலைமை நாடுகள் முயற்சியெடுக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட.

தமிழ், முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டுமென்று வெள்ளைக்காரர்கள் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை. எமது ஆட்சியாளர்களுக்கு அது தெரியும்.

அத்தோடு, ஒரு பயங்கரப் பின்னணியுடனான கருத்தும் கூறப்பட்டுள்ளது. அது தான் தமிழ் முஸ்லிம் மக்களின் சட்டரீதியான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென இணைத்தலைமை நாடுகளிடம் நாம் கேட்கிறோம். அந்த சட்டரீதியான எதிர்பார்ப்புக்கள் என்ன? இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசாங்கத்தாலும் - புலிகளாலும் யுத்தத்தை வெற்றிபெற முடியாதென கூறியிருப்பதும் வியப்பை அளிக்கின்றது. புலிகளை எமது படையினர் தோல்வியடையச் செய்யும் ஒவ்வொரு தடவையும் அதற்கு தடைபோட்டது இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும், சர்வதேச தலையீடுகளும், பொட்டு அம்மானுக்கு தகவல்களை வழங்கும் முக்கியஸ்தர்களுமே ஆவார்கள்.

யுத்தத்தில் வெற்றிபெற முடியுமா முடியாதா என்பதையும், தமிழ் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதையும் இலங்கை அரசாங்கம் தீர்மானிக்கும்.

தோல்வியடைந்த நாடு என இலங்கையை வெளிப்படுத்தி ஐ.நா. படையை இங்கு கொண்டுவருவதற்கான புறச் சூழலையே இணைத்தலைமை நாடுகள் மேற்கொண்டு வருகின்றன என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

டாக்டர் குணதாச அமரசேகர தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவர்

புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை வரவேற்கின்றோம். காலம் கடந்தாவது இதனை மேற்கொண்டமைக்காக நன்றி தெரிவிக்க வேண்டும். அதைவிட முக்கியமானது புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டுமென தடை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளமை கவனத்திலெடுக்கத்தக்கது. ஒருபோதும், இது போன்று விதந்துரைக்கப்படவில்லையென இங்கு உரையாற்றிய டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

சமாதான பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் தள்ளிவிட்டு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதைப் போன்று முதலில் புலிகளிடமிருந்து ஆயுதக் களைவை மேற்கொள்ள வேண்டும் என்றும் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

தம்பர அமில தேரர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை முழுமையாக நம்பிக் கொண்டிருக்காது அதில் விதந்துரைக்கப்பட்டுள்ள ஆயுதக் களைவை மேற்கொள்ள வேண்டும். வரலாற்றில் நாம் யுத்தங்களை வென்றுள்ளோம். சோழ, பாண்டிய இராஜ்ஜியங்களின் ஆக்கிரமிப்புக்களையும், முறியடித்துள்ளோம். எனவே, எமக்கு எவரும் கற்பிக்கத் தேவையில்லையென்றும் இங்கு உரையாற்றிய தம்பர அமிலதேரர் தெரிவித்தார்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலருடைய கருத்துக்களை வாசிக்கும்போது இதனையும் நகைச்சுவைப் பகுதியில் இணைத்திருக்கலாம் போல் தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.