Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணை இராணுவக் குழு ஆயுதக்களைவு: அரசாங்கம் மீது அமெரிக்கா அதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துணை இராணுவக் குழு ஆயுதக்களைவு: அரசாங்கம் மீது அமெரிக்கா அதிருப்தி

சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களை அரசாங்கத்தால் களைய இயலாதமை குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஒருநாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்த தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

சொல்லிலும் செயலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையைக் கைவிட்டு செயற்பட வேண்டும். இந்த உலகம் முழுமையுமே பயங்கரவாதத்தை ஒழிக்க ஓரணியில் திரண்டுள்ளதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் 9 ஆண்டுகளாக புலிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் உண்மையிலே அந்த முத்திரைக்குத் தகுதியானவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையை வரவேற்கிற அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.

சிறிலங்கா அரசாங்கமானது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களைச் செயற்படுத்த வேண்டும் என்பது ஒரு ஜனநாயகப்பூர்வ அரசாங்கத்திடமிருந்தான எமது அதிக எதிர்பார்ப்பாகும். ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் போது அது வன்முறைச் செயலாக மாறக் கூடாது.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் இல்லாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ஜெனீவா ஒப்பந்தத்தை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழுவினரது ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கத்தால் களைய இயலாமல் இருப்பது குறித்து அமெரிக்கா கவலையடைகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடனான உறவுக்கு மறுபரிசீலனை செய்வோம் என்றார்.

இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் உள்ளிட்ட மேலதிக விவரங்களை பௌச்சர் வெளியிடவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுகும் இடையே இராணுவ ஒத்துழைப்பு ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு வழிகள் முடக்கப்படும் என்றும் பௌச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை அமெரிக்காவோ இணைத் தலைமை நாடுகளோ திணிக்காது என்றும் இருதரப்பினரும் பேச்சு மேசையில் உட்கார்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் பௌச்சர் கூறினார்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தொடர்பாக அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரியாவிட்டாலும் அரசாங்கம் தொடர்பான அபிப்பிராய மாற்றம் ஒரு நல்ல சமிஞ்சை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா உறுதிமொழியை அரசு நிறைவேற்றவில்லை; அமெரிக்க வெளிவிவகார உதவியமைச்சர் பௌச்சர்

ஜெனீவாவில் அளித்த உறுதிப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டதாக கருத்துத் தெரிவித்துள்ள தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரிச்சட் ஏ. பௌச்சர் அமெரிக்கா துணைப்படையினரின் நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தனது ஆயுதப்படையைச் சேர்ந்த எவரும் துணைப்படையினருக்கு ஆதரவளிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் வியாழக் கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அவர்களது நடவடிக்கைகளினாலேயே சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது நிதி வளங்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிடாவிடில் மேலும் தடைகளையும் தனிமைப்படுத்தலையும் எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிட்ட பௌச்சர் மேலும் தெரிவித்ததாவது;

இலங்கைக்கான எனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பின்போது அரசியல் இராணுவ விடயங்கள் குறித்தும் இரு தரப்பு விவகாரங்கள் பற்றியும் ஆராய்ந்தோம். ஈரான் போன்ற விடயங்கள் பற்றியும் பேசினோம். அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொறுமையைப் பாராட்டினேன்.

அமெரிக்கா முற்று முழுதாக இலங்கை அரசாங்கத்தின் பக்கமுள்ளது.

விடுதலைப் புலிகள் வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் கைவிட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.

அரசாங்கம் தனது பகுதிகளில் சட்டமொழுங்கையும் மனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டும்.

நோர்வேயின் அனுசரணைக்கும் கண்காணிப்புக் குழுவின் பணிகளுக்கும் எமது ஆதரவு எப்போதுமுண்டு.

இலங்கைக்கு அரசியல், பொருளாதார விடயங்களில் உதவுவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளோம்.

சமாதான சூழ்நிலையில் மாத்திரம் அபிவிருத்தி சாத்தியம். சகல தரப்பும் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

மோதல்களை, நெருக்கடிகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். வெளிநாடுகள் முடிவுகளைத் திணிக்க முடியாது.

விடுதலைப் புலிகளை அவர்களது செயற்பாடுகளை அடிப்படையாக வைத்தே தடை செய்தோம்.

இந்தத் தடையை நீக்குவதற்கான காரணங்கள் எதுவும் தென்படவில்லை.

துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மாறவில்லை. அவர்களது செயற்பாடுகள் மாறியுள்ளதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. பயங்கரவாதம் என்பது எங்களது அக்கறைக்குரிய விடயம். அவர்கள் மாறினால் நாங்கள் தடையை அகற்றுவோம்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான துயரங்கள், பிரச்சினைகள் உள்ளன. நான் சில தமிழ் உறுப்பினர்களைச் சந்தித்தேன்.

தமிழ் மக்கள் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டும். எனினும், இதனையும் விடுதலைப் புலிகளுடன் பேசுவதையும் ஒன்றாக இணைத்து குழப்ப விரும்பவில்லை.

நல்ல ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் எங்கள் முடிவுகளை எடுப்போம்.

2003 ஆம் ஆண்டு வரை பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்தே சமாதான முயற்சிகளை நகர்த்த வேண்டும்.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலும்போது தீவிரமான புதிய அணுகுமுறை அவசியம். அரசாங்கம் இவ்வாறான தீர்வை முன்வைக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கக் கூடிய அரசியல் கட்டமைப்பு அவசியம். தமிழ் மக்களின் அபிலாஷைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவிற்கே தான் என்ன பங்களிப்பு செய்வது என்பது குறித்த சரியான பதிலில்லை.

எனினும், அவர்கள் தமது கருத்துகளை எம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர். எங்களின் பங்களிப்பை புரிந்து கொள்கின்றனர்.

எனினும், இந்தியாவின் பங்களிப்பை சம்பந்தப்பட்ட தரப்பினர் பயனுள்ளதாக கருதுகின்றனரா என்பதே முக்கியம்.

அரசாங்கம் எல்லை மீறி தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் பதில் நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையுள்ளது. எனினும் இது சமாதானத்தை நோக்கி நகரும் அதன் இலக்கை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதே முக்கியமானது.

நாங்கள் அரசாங்கத்தை பல வழிகளில் ஆதரிக்கின்றோம். இராணுவ ரீதியாக பலப்படுத்துவதும் அதில் அடங்கும். இது நியாயபூர்வமான விடயம்.

விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளாலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

-தினக்குரல்

¯Åí¸û ¯ôÀ¢Êò¾¡ý..............

«Ãº¡í¸òÐìÌ º¡Á¡¾¡É ¸¡Äò¾¢ø ÒÄ¢¸ÙìÌ ±¾¢Ã¡

±ôÀÊ ¿¢Æø Ôò¾õ ¦ºö¢ÈÐ ±ôÀÊ ÅÌôÒ ±Îò¾Ðõ

þÅí¸§Ç¾¡ý........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.