Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம் : அமெரிக்க நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்சவினை விடாதுதுரத்தும் வழக்கு எண் Docket# 12-4081 !

Featured Replies

- சிறிலங்கா அரசுத் தலைவரின் இரகசிய அமெரிக்க பயணத்தின் பின்னணி !

- பிரதமர் வி.உருத்திரகுமாரனின் வலுவான வாதங்கள் !

- அமெரிக்க நீதித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வாதங்கள் !

வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நியூ யோர்க் மாநிலத்தின் தென் மாவட்டத்துக்கு உரிய ஐக்கிய அமரிக்க கூட்டாட்சி நீதிமன்றமானது, கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி அவர்கள், தனது மேன்முறையீட்டு வழக்கை அமரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் 2வது சுற்றில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் வழக்கிற்கான செலவு எதைனையும் அவர் கொடுக்கத் தேவையில்லை எனவும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், சட்டவாளருமாகிய வி.உருத்திரகுமாரன் அவர்கள் மனுதாராரின் சார்பில் இந்த வழக்கினை நடாத்துகின்றார்.

இராஜீகரீதியிலான சிறப்புரிமை பிரகாரம், ஓரு நாட்டின் அரசுத் தலைவருக்கு எதிராக அமெரிக்க நீதி மன்றங்களில் விசாரிப்பதற்கெதிராக விலக்கினை சுட்டிக்காட்டும் பரிந்துரையினை, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவ்வழக்கு தொடர்பில் தனது நிலைப்பாட்டினை சமர்பித்திருந்த நிலையில், நியூ யோர்க் மாவட்ட நீதிபதி றயோமி றீஸ் பூசுவர்ட் அவர்கள், கடந்த செப்ரெம்பர் மாதத்தில் வழக்கினை தள்ளுபடி செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, தற்போது நியூ யோர்க் - ஐக்கிய அமரிக்க கூட்டாட்சி நீதிமன்றமானது, குறித்த வழக்கினை மேன்முறையீட்டு நீதிமன்றின் 2வது சுற்றில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

சித்திரவதை, கொடுமை, மானிடத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் என்பவற்றை இழைத்தமைக்காகவும், வேண்டுமென்றே உளரீதியான அவலங்களையும் ஏற்படுத்தியமைக்காகவும் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், வெளிநாட்டவர்க்கான குற்றங்கள் சட்ட விதிகளுக்கமையவும், சித்திரவதையினால் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாக்கும் சட்டம், குடியுரிமை அரசியல் உரிமை பற்றிய அனைத்துலக உடன்படிக்கை, ஆயுத போராட்டங்களின் போது பின்பற்றப் படவேண்டிய வழக்கிலுள்ள அனைத்துலக சட்டங்களுக்கு முரணாகவும் இழைக்கப்பட்ட இந்தக் குற்றங்களுக்காகவும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்விற்கு எதிராக இந்த வழக்கைத் தொடுக்கப்பட்டுள்ளது.

(1)அரசுத் தலைவருக்கு விதிவிலக்கு அளிப்பதற்குரிய சட்டவாக்க அதிகாரம் நிர்வாகத் துறைக்கு உள்ளதா?

(2)நீதித் துறைக்குரிய அதிகாரத்தை நிர்வாகத் துறைக்குக் கையளிப்பது அதிகாரப் பிரிவு எனும்

கோட்பாட்டை மீறுவதாகாதா?

(3)அனைத்துலக மட்டத்தில் இடம் பெறும் பாரிய குற்றங்களான இன அழிப்பு , மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் என்பன அரசுத் தலைவருக்கான பாதுகாப்பு எனும் திரையைக் கிழித்தெறிய மாட்டாதா?

ஆகிய வாதங்கள் மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

'நீதித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வாதங்கள் மனுதாராரின் சார்பில் முன்வைக்கப் பட்டுள்ளன' என மாவட்ட நீதிமன்றம் கருத்து வெளியிட்டுள்ளது.

இதேவேளை அரசுத் தலைவராக உள்ளவர்களுக்குக் கூட விதிவிலக்கு வழங்கக் கூடாது எனும் புதியதோர் நீதி முறைமை தோன்றி வருவது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் எனவும் நீதிமன்றம் தனது கரு;தில் தெரிவித்துள்ளது.

நாதம் ஊடகசேவை

http://youtu.be/M0vnSed-gHU

[size=4]

(1)அரசுத் தலைவருக்கு விதிவிலக்கு அளிப்பதற்குரிய சட்டவாக்க அதிகாரம் நிர்வாகத் துறைக்கு உள்ளதா?[/size]

[size=4](2)நீதித் துறைக்குரிய அதிகாரத்தை நிர்வாகத் துறைக்குக் கையளிப்பது அதிகாரப் பிரிவு எனும்

கோட்பாட்டை மீறுவதாகாதா?

(3)அனைத்துலக மட்டத்தில் இடம் பெறும் பாரிய குற்றங்களான இன அழிப்பு , மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் என்பன அரசுத் தலைவருக்கான பாதுகாப்பு எனும் திரையைக் கிழித்தெறிய மாட்டாதா?

ஆகிய வாதங்கள் மனுதாரர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

[/size]

[size=4]நன்றிகள், தொடர்ந்து முயற்சிப்பது நிச்சயம் பயனளிக்கும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.