Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரை உடனடியாக விலக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை! - AFP கட்டுரை!!

Featured Replies

[size=4]யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பினரை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.[/size]

[size=4]சிறிலங்கா படைத்தரப்பினரால் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் இவ்வூடகம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.[/size]

[size=4]இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்ற போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும், சிறிலங்கா படைத்தரப்பினர் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், அங்கு நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பினரை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.[/size]

[size=4]யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலின் போது காயமடைந்த 20 வரையிலான மாணவர்களில் ஏழு பேர் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நிலையிலுள்ளனர்.[/size]

[size=4]மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படைத்தரப்பினர் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியதாகவும், இதனால் அங்கு மீண்டும் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]இதனை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட போது, சிறிலங்கா படைத்தரப்பினரும், பொலிஸாரும் அவர்கள் மீது கொடுரமான தாக்குதல்களை மேற்கொண்டனர். இத்தகைய மோசமான சம்பவங்களை தடுப்பதற்காகவே யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பினரை உடனடியாக வில்க்கிக் கொள்ளுமாறு தாம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாக சரவணபவன் கூறினார்.[/size]

[size=4]அதிக தமிழ் மாணவர்களைக் கொண்ட யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் ஊடகவியலாளர்கள் சிலரும் தாக்கப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.[/size]

[size=4]இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த சிறிலங்கா படைத்தரப்பினர் பேர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச சமூகம் தெரிவித்திருந்தது.[/size]

[size=4]யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த புதன்கிழமை மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்கில் சிறிலங்கா படைத்தரப்பினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் ஊடக சுதந்திரத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.[/size]

[size=4]சட்டத்துக்குப் புறம்பான வகையில் மாவீரர்களை நினைவுகூர யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டிருந்ததாக சிறிலங்கா படைத்தரப்பினர் கூறுகின்றனர். அத்துடன், யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை பொலிஸார் அகற்றிய போது, அங்கு செய்ற படையினர் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என சிறிலங்கா படைத்தரப்பின் குரல்தரவல்ல அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.[/size]

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கட்டுப்படுத்த முயற்சித்த பொலிஸாருக்கு உதவியாக படையினரை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு மிகக் குறைவானவர்களே இருந்ததால் படையினரை அனுப்ப வேண்டிய தேவையேற்படவில்லை என சிறிலங்கா படைத்தரப்பின் குரல்தரவல்ல அதிகாரி பிரிகேடியர் றுவாண் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களால் வீசப்பட்ட கற்களே நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் வாகனத்தை சேதப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிறிலங்கா படைத்தரப்பினராலேயே தனது வாகனம் சேதமாக்கப்பட்டதாக சரவணபவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டம் கடந்த ஆண்டு நீக்கப்பட்ட போதிலும், பொலிஸாருக்கு ஆதரவாக படைத்தரப்பினர் மற்றும் துணை ஆயுதக்குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டம் அனுமதித்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பினரை விலக்கி, அங்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துமாறு சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றது என இந்த செய்திக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=3425123d-e11a-46d1-99d9-f9f7d9d2cd24

[size=5]சிங்களப் பயங்கரவாதிகளின் ஒவ்வொரு அத்துமீறலின் போதும் தொடர்ந்து ஓங்கி வலியுறுத்தப்பட வேண்டிய கோரிக்கை![/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.