Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகி சிவகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலையில் நாளை

தியாகி சிவகுமாரனின்

நினைவு நிகழ்வு

தமிழின விடுதலைக்காய் முதல் முதலில் வீரச்சாவடைந்த தியாகி பொன்.சிவகுமா ரனின் நிகழ்வும் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வும் நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை யரங்க முன்றிலில் நடைபெறவுள்ளது

இதேவேளை

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட அனைத்து பல் கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற் பாட்டில் நேற்று முகமாலை முன்னரங்கள நிலைகளுக்குச் சென்ற மாணவர்கள் முன் னரங்க நிலைத் தளபதிகள் போராளிகளைச் சந்தித்ததுடன் தாம் கொண்டு சென்ற உண வுப் பொருள்களையும் அவர்களுக்கு வழங் கினர்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாகி சிவகுமாரன் குறித்து கருத்துக் கூற

ஈ.பி.டி.பிக்கு எவ்வித அருகதையுமில்லை

அடித்துக்கூறுகின்றது தமிழ் மாணவர் ஒன்றியம்

ஆயுதப் போராட்டமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்று கூறியவர் தியாகி பொன். சிவகுமாரன். இத்தகைய தியாகியைப் பற்றியோ அல்லது அவரது தியாகத்தைப் பற்றியோ கருத்துத் தெரிவிப்பதற்கு ஈ.பி. டி.பி. அமைப்புக்கு எவ்வித அருகதையும் இல்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளது யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம்.

இதுதொடர்பாக மேற்படி ஒன்றியம் விடுத்த அறிக்கையில்

தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது மாணவப் பருவத்திலேயே ஆயுதப் போராட் டத்தை ஆரம்பித்து முதல் வீரச்சாவைத் தழு விக் கொண்ட எங்கள் முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரன்.

அகிம்சைப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் விடுதலையைப் பெற முடியாது. ஆயுதப் போராட்டமே விடுதலையைப் பெற் றுத் தரும் என்று திடமாக நம்பி அந்த வழியி லேயே வீரச்சாவைத் தழுவிக்கொண்டவர் தான் எங்கள் சிவகுமாரன்.

எதிரியின் கையில் உயிருடன் பிடிபடக் கூடாது என்பதற்காகவே தியாகி சிவகுமாரன் அவர்கள் தன்னை அழித்துக்கொண்டார். ஆனால், இன்று எதிரியின் அடிவருடிகளாக வும் காட்டிக்கொடுப்பவர்களாகவும் தமிழின துரோகிகளையும் எதிரியுடன் இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பி.யினரும் ஏனைய குழுக்களும் முடிந்தால் திருந்திக்கொள்ளுங் கள்.

அதை விடுத்து அரசியல் நடத்துகின்றோம். ஜனநாயகம் பேசுகின்றோம் என்று கூறி அர சின் அடிவருடிகளையும் தமிழின விடுதலைப் பாதையின் தடைக்கற்களாகவும் இருக்கவேண் டாம் எனக் கூறிக்கொள்கின்றோம்.

அதுவே முதல் மாவீரர் தியாகி பொன். சிவகுமாரன் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர் களுக்கு அவர்களின் தியாகங்களுக்கு தாங் கள் கொடுக்கும் மதிப்பாக இருக்கும் என் பதை தியாகி பொன்.சிவகுமாரன் மரணித்த இந்நாளில் தமிழ் மாணவர் சமுகமாகிய நாம் தெரிவித்துக்கொள்கின்றோம். என்று அதில் உள்ளது.

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரிமைப் போராட்டத்திற்காக உயிர் கொடுத்த முதல் மாவீரன் சிவகுமாரன் எமது உரும்பிராய் மண்ணின் மைந்தன். பொன்.சிவகுமாரனும், ஏனைய மாவீரர்களும் செய்த தியாகங்களை இன்றும், என்றும் நினைவு கொள்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் சயனைட்டை

அறிமுகப்படுத்திய மாவீரர்

தியாகி பொன்.சிவகுமாரனின் 32 ஆவது நினைவு தினம் இன்றாகும். அதையொட்டி இந்த ஆக்கம் வெளியாகிறது.

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சயனைட்டையும் அதனால் விளையும் தற்கொடையையும் அறிமுகப் படுத்திய மாவீரர் பொன். சிவகுமாரனின் 32 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதி யின் மகனான உரும்பிராயில் பிறந்தவர் சிவகு மாரன். யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.

அக்கால கட்டத்தில் ஸ்ரீலங்காவின் இன வாத அரசுகள் தமிழினத்தின் மீது ஏவி விட்ட அடக்கு முறைகள் சிவகுமாரனின் எழுச்சிக்கு வித்தாகின. குறிப்பாக தமிழ் மாணவர்களின் உயர் கல்விக்கு உலைவைக்க சிறிமாவோ வின் அரசு அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் முறை மாணவப் பருவத்தில் இருந்த சிவ குமாரனின் போராட்ட நெருப்புக்கு நெய்யானது. அஹிம்சை வழி புரியாத இனவாதிகளுக்கு ஆயுத வழியில் புரிய வைக்கும் உத்வேகம் தமிழ் இளைஞர்களிடையே முளைவிட்ட காலமது. இந்நிலையில், தமிழ் மாணவர் பேர வையில் தன்னை 1971 ஆம் ஆண்டு சிவ குமாரன் இணைத்துக்கொண்டார். எண்ணங் கள் ஒன்றாய்க் கொண்ட சில துணைகள் சிவ குமாரனுக்கு அங்கு கிடைத்தன.

தரப்படுத்தலை எதிர்க்கும் தமது உணர்வை இனவாதிகளுக்கு புரிய வைக்கத் தீர்மானித் தார் சிவகுமாரன். அப்போதைய துணை அமைச் சர் சோமவீர சந்திரசிறி உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வந்தவேளை அவரை இலக்கு வைத்து குறித்த நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டை வைத் தார் சிவகுமாரன். அதில் அமைச்சர் தப்பிய போதும் இக்குற்றச்சாட்டில் சிவகுமாரன் கை தானார். ஆயினும், தகுந்த சாட்சியங்கள் இல் லாததால் அவர் விடுதலையானார்.

பின்னர் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புணர்வை இனவாத அரசுகளுக்கு உணர்த்தும் பல நடவடிக்கைகளை சிவகுமாரன் மேற்கொண்டார்.

யாழ். இரண்டாம் குறுக்குத் தெருவில் அப்போதைய மேயர் அல்பிரட் துரையப்பாவின் கார் வெடித்துச் சிதறியமை தமிழர்களின் மீதான அடக்கு முறையின் அடையாளமான பொலீஸ் அதிகாரி சந்திரசேகர மீதான கையெறி குண்டுத் தாக்குதல் போன்றவை சிவகுமாரனின் போராட்ட உணர்வின் விளைவுகளே.

போராட்ட முறையானது கொள்கைகளை நிலைநாட்ட, இலக்குகளை அடையப் பயன்படுத்தப்படும் மார்க்கமே தவிர போராட்ட முறையே கொள்கை அல்ல என்பதை வலியுறுத்தியவர் பொன்.சிவகுமாரன். ஆயுதப் போராட்டத்தை தனது வழியாக வரித்துக்கொண்ட பொன்.சிவகுமாரன் தமிழ்மக்கள் எழுச்சிகொண்டு அஹிம்சை வழியில் நடத்திய போராட்டங்களை பெரிதும் மதித்தார்.

தமிழர்களின் விடுதலைப் போரின் ஆரம்ப கால வித்தான சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 5ஆம் நாள் ஸ்ரீலங்கா பொலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டார். தப்ப முடியாது, இனி பிடிபடுவது நிச்சயம் என்ற நிலையில் பேனாவிற்குள் மறைத்து வைத்திருந்த சயனைட்டை உட்கொண்டார் தியாகி சிவகுமாரன். நீர்வேலி கரந்தன் மண்ணில் சாய்ந்து தற்கொடை தந்தார் தியாகி சிவகுமாரன்.

ஆனால், அன்று விஸ்வரூபம் எடுத்தது ஈழத்தமிழரின் சுதந்திரப் போர்.

தமது போராட்டப் பாதையில் தியாகி சிவகுமாரன் நடத்திய தாக்குதல்கள் வேண்டு மானால் இலக்கை அழிக்காமல் போயிருக்கலாம். ஆனால், இன்று நம் மண்ணில் விதைக் கப்பட்ட ஆயிரக்கணக்கான மாவீரர்களில் மூத்தவரான தியாகி சிவகுமாரன் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு ஊற்றுக்கண் என்பது அழியாத உண்மையாகும்.

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவகுமாரன் தனது தந்தையார் திரு பொன்னுத்துரை ஆசிரியர் தலைமை ஆசிரியராக கடமையாற்றிய உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் (தற்போது உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் என்று அழைக்கப்படுகின்றது) தனது ஆரம்பக்கல்வியைக் கற்றார். தனது உயர்கல்வியை யாழ்.இந்துவில் கற்றார். அப்போதைய துணை கலாச்சார அமைச்சர் சோமவீர சந்திரசிறி உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் உள்ள திறந்தவெளியரங்கில் (உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அல்ல) நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு தனது மோட்டார் வண்டியில் ஏறி அமர்ந்து புறப்பட்ட சமயம் அதன் கீழே வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. மோட்டார்வண்டிக்கு மட்டும் சிறிது சேதம் ஏற்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற விருந்துபசாரத்தின்போது துணை அமைச்சர் "எனக்கு இங்கே ஏதாவது தீங்கு நடந்திருந்தால் கொழும்பில் உள்ள அத்தனை தமிழர்களும் ~பார்சலில்~ தான் யாழ்ப்பாணம் வந்திருப்பார்கள் என்று கூறினாராம். இதனைக் கேட்டதும் மாணவர்களாகிய நாமெல்லோரும் மிகுந்த ஆத்திரம் அடைந்தோம். தமிழ் மக்கள் மீதான தனது வெறுப்பை அப்போதே காட்டிவிட்டார் அந்த அமைச்சர்.

அன்று நடந்தவை எல்லாம் அப்படியே மனதில் இருக்கின்றன. அன்று நடந்த கலை நிகழ்வுகளில் நானும் ஒரு நாடகத்தில் நடித்திருந்தேன். அங்கு வந்த நண்பர் சிவகுமாரன் தான் மடியில் வைத்திருந்த ஒரு குண்டை எமக்குக் காட்டினார். தான் என்ன செய்யப்போகிறேன் என்று கூறியபோதும் நாம் அதனை நம்பவில்லை. ஆனால் பின்னர்தான் அவர் சொன்னதைச் செய்வார் என்று நம்பினோம்.

ஒருநாள் மாணவர்கள் அனைவரும் பலாலி வீதியின் இருமருங்கிலும் இன்னொரு அமைச்சரின் யாழ்ப்பாண வருகையை வரவேற்கக்கூடியிருந்தோம். அப்போது சிவகுமாரன் எம்மிடம் வந்து ஒருவரைக் காட்டி "நான் போகுமிடமெல்லாம் அவரும் வருவார்" என்று கூறினார். அவர் வேண்டுமென்றே பாதையில் இரண்டு மூன்று தடவைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவர் குறிப்பிட்ட நபரும் ஒரு 20 யார் இடைவெளியில் நடந்துகொண்டேயிருந்தார். அப்போதுதான் "அவர் என்னைப் பின்தொடரும் ஒற்றன்" என்றார். அந்த ஒற்றன் ஒரு சிங்களவர். நெற்றில் திருநீறும், சந்தனமும் அணிந்து ஒரு பக்தன்போல் வேடமிட்டிருந்தார். அவரைப்பற்றி சிவகுமாரன் முன்னரே அறிந்து வைத்திருந்தது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

இலண்டனில் சிவகுமாரனுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவரின்மேல் கொண்ட பாசத்தினால் தோண்டன்கீத் (Thornton Heath)என்னும் இடத்தில் "சிவகுமாரன் நினைவுப் பாடசாலை" என்ற ஒரு தமிழ்ப் பாடசாலையை நிறுவி கடந்த சில வருடங்களாக நடாத்திவருகிறார் என்பதையும் உறவுகள் அறியவேண்டும். இப்பாடசாலை ஆரம்பித்தபோது அவருக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்துகொடுத்ததை இப்போது எண்ணும்போது மனம் மகிழ்வாகவும் இருக்கின்றது.

இப்படியான சில நிகழ்வுகள் இக்கட்டுரையைப் படித்ததும் மனதிலே எழுந்தன. இன்றைய இந்த நினைவுநாளிலே இவற்றை உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் ஒரு திருப்தியும் இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவகுமார் பற்றிய செய்திகளினை பகிர்த்துகொண்ட செல்வமுத்து ஆசிரியருக்கு நன்றி

¬º¢Ã¢Â÷ ¦ºøÅÓòÐìÌ ±ÉÐ ¿ýÈ¢¸û

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாதத்தில் வந்த கட்டுரை

http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060609.htm

கந்தப்புவிற்கும், செல்வமுத்து ஐயாவிற்கும் மிக்க நன்றி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.