Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகம் வெறிச்சோடியது'

Featured Replies

யாழ் பல்கலைக்கழகம் வெறிச்சோடியது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 டிசம்பர், 2012 - 10:57 ஜிஎம்டி
121129120802_sri_lanka_304x171_afp_nocre

சில தினங்களுக்கு முன்னதாக மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட படம்

யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் எவரும் இன்று சமூமகளிக்காததனால், பல்க்லைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்தது. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களும் அங்கிருந்து பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறியிருப்பதாகப் பல்கலைக்கழக மாணவர் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிங்கள மாணவர்களும் முன்னதாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த அதேவேளை, பல்கலைக்கழக சூழலில் பிரசன்னமாகியிருக்கின்ற படையினர் அங்கிருந்து அகற்றப்பட்டு, பல்கலைக்கழக சூழல் இராணுவ மயமாக்கப்பட்டிருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முன்வைத்திருக்கின்றது.

யாழ் பல்ககக்கழகத்தின் இன்றைய நிலைமைகள் குறித்து கூடி ஆராய்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், பல்லைக்கழக சூழல் இராணுவ மயமாக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை, கைது செய்யப்பட்டு, வவுனியா பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அவர்களது பெற்றோர் நேற்றும் இன்றும் சென்று பார்வையிட அனுமதித்திருந்ததாக மாணவர் ஒருவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

யாழ் பல்கலைக்கழக விவாகாரம் என்பது வர்த்தக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ரடிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுவதாகவும், அதனால் செயதியாளர்களிடம் தாங்கள் பேச விரும்பவில்லை என்றும் அந்தப் பெற்றார் தெரிவித்தனர்.

இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகியன ஒன்றிணைந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் யாழ் பல்கலைக்கழகச் செயற்பாடுகளில் படையினர் தலையிடுவது என்பவற்றைக் கண்டித்து நாளை யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121203_jaffnaunideserted.shtml

 

 போரில் உயிரிழந்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று நிகழ்வை நடத்த முடியும் என்றால், தமிழ் மக்களுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு தமிழ் மாணவர்கள் ஏன் அஞ்சலி செலுத்தக் கூடாது? பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர்தினம் இந்த வருடம் அனுஷ்ட்டிப்பதற்கு அனுமதிக்க கூடாதென்பதிலும், மாணவர் களால் ஈகச்சுடர் ஏற்றப்படக் கூடாதென் பதிலும் படையினர் உறுதியாக இருந்தனர்.
 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112377



 இராணுவத்தினராலும், இராணுவப் புலனாய்வாளர்களாலும் இத்துணை அட்டகாசங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தேறுகின்ற போதும், வாய்கூசாமல் யாழ்ப்பாணத்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை, சிவில் நிர்வாகம் நடக்கின்றது என்று சொல்லி இணக்க அரசியல் நடத்திவிட முடியுமா?
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.