Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் அளியுங்கள் ஒஸ்திரேலியா அரசிடம் மன்னார் ஆயர் கோரிக்கை

Featured Replies

இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலிருந்து ஒஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடி வந்தவர்களைத் திருப்பி அனுப்பாது அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்குமாறு மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை ஒஸ்திரேலியா அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


ஒஸ்திரேலியா தமிழ் ஏதிலியர் கழகத்தினூடாக அவர் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டுத் திருப்பியனுப்பப்படும் மக்களுடைய பரிதாபகரமான நிலை தொடர்பாக நான் அவசரமாக உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

வெளிநாட்டில் அரசியல் அடைக்கலம் கோரிய பின்னர் திருப்பி அனுப்பப்படுபவர்களின் அரசாங்கத்தினாலும் அதனுடைய ஆயுதப் படையினராலும் துரோகிகளாகக் கணிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டியவர்களாக இருப்பார்கள் என்பது அனைருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்களில் சிலர் படையினருக்கு தகவல் கொடுப்பவர்களாக இருப்பதற்குக் கட்டாயப்படுத்தப்படுவதால் சமூகத்திடையே பதற்ற நிலை உருவாகின்றது.

இவர்கள் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுப்பாடுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும், விசாரணைகளுக்கும், கண்காணிப்புக்கும் மற்றும் ஏனைய வகையிலான துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறானவர்களுக்கு ஒரே ஆறுதலாகவும் பாதுகாப்பாகவும் இருக்கக்கூடிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. பல சந்தர்ப்பங்களில் வேண்டப்படாதவர்கள் என அரசாங்கத்தினாலேயே அவ்வமைப்புக்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில், எமது பிராந்தியத்தில் தற்போது காணப்படும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும் போது அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியிருக்கும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்பதே எனது கருத்தாகும்.

இலங்கையிலிருந்து அடைக்கலம் கோரி வந்தவர்களை அரவணைத்துக்கொள்ளும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை பாராட்டி நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், இவ்வாறு அடைக்கலம் கோருபவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றேன்."

இவ்வாறு மன்னார் ஆயர் தெரிவித்திருக்கின்றார்.

 

http--tamilleader.com-images-stories-new

http://www.tamilleader.com/mukiaya/7882-2012-12-04-10-55-18.html

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.