Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில் சம்பத்: கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி தந்தார் ஜெ.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.

ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.

இன்று காலை திடீரென போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற சம்பத் அதிமுகவிவில் சேர்ந்தார். அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி:

அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் நாஞ்சில் சம்பத் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், முதல்வரை சந்தித்து அதிமுகவில் இணைந்ததும் கட்சியின் கொள்கை பரப்புத் துணை செயலாளராக நியமிக்கப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்த உணர்வில் உள்ளேன். என்னை பார்த்ததும், சிறந்த சொற்பொழிவாளர் என்று முதல்வர் பாராட்டினார். அவருக்கு நன்றி தெரிவித்த நான் நீங்கள் பெருமைப்படும்படி நடந்து கொள்வேன் என்று தெரிவித்தேன் என்றார்.

இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!

அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தம்பிதுரை உள்ளார். கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியிலிருந்து பழ. கருப்பையா எம்.எல்.ஏ. கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில், கொள்கை பரப்பு துணைச் செயலாளராக சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Thatstamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இனியாவது பதவி சுகத்தையும் பண சுகத்தையும் அனுபவிக்கட்டும் இவர்கள் எல்லாம் வைகோவோடு இருந்து என்னத்தை கண்டவர்கள்....

பேசாமல் வைக்கோவும் அரசியல் கட்சி என்று இல்லமால் ஒரு இயக்கத்தை நடத்தலாம் நெடுமாறன் ஐயா மாதிரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூடத்தில பேச ஆக குறைஞ்சது ஒரு லட்சம் கொடுத்தாலும் நாஞ்சில் சம்பத் காட்டில மழை தான் அத விட அமைச்சர்களிடம் சிபாரிசு அது இதெண்டு சம்பாதிக்கலாம் :D

அத விட தொடர்ந்தும் விசுவாசமா இருந்தா mla mp பதவி எண்டு தொடர்ந்து வரும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை.

இந்நிலையில் இவர் அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது விலகல் ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

இன்று காலையில் அ.தி.மு.க.,வில் இணைந்ததும் சம்பத்துக்கு இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசின் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் தனது பிரசார பயணத்தை விரைவில் துவங்குவார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அதிமுகவில் இருப்பது எமக்கு நல்லது.

பிரச்சாரத்தில் எமக்காகவும் பேசுவார் என எதிர்பார்க்கலாம்.

 

(ஆனால் வைகோ மட்டும் தான் என் தலைவன் என்ற அதே வாய் இனி..............??? :( )

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இது போன்ற சம்பவங்கள் சகஜம்தான் இருந்தாலும் இப்படி இவர்கள் நடப்பதினால் மக்கள் எப்படி நம்பி தங்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்க்கோ பாரளுமன்றத்திற்க்கோ அனுப்ப முடியும் அவர்களிற்கு மாற்று தெரிவு கிட்டும் பட்சத்தில் அவர்கள் இதுபோன்ற குரங்குபோல் கட்சிகளுக்கிடையே பாயும் பச்சோந்தி அரசியல்வாதிகளை தூக்கி தூர வீசிடுவார்கள் என்பதுதான் நிஜம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே செய்ய முடியாது அண்ணா வைக்கோ தன்னுடை முன் கோபத்தால் ஒவொரு அணியிடம் இருந்தும் கடைசி நேரத்தில் வெளியேறி விடுவார் கொள்க்கைகளுக்கு அப்பால் பதவியையும் பணம்களையும் எதிர்பாத்திருக்கும் கட்சியினருக்கு வேற வழி இல்லை

Edited by SUNDHAL

தலைவர் வைகோ

இது தலைவி தானே

அம்மா ஜெயலலிதா.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்ததை பெருமையாக கருதுகிறேன். கட்சியில் சேர்ந்ததும் என்னிடம் அம்மா அவர்கள் பரிவுடன் பேசினார்கள். என் மீது இருக்கிற வழக்குகள் திரும்ப பெறப்படும் என்றார்கள் ! " == நாஞ்சில் சம்பத் பேட்டி .

## ஒரு முதல் அமைச்சரே யார் மீது வேண்டுமானாலும் , எந்த வழக்கும் போடலாம் ; அவர் கட்சியில் சேர்ந்தால் உடனே வாபஸ் வாங்கலாம் . இதுக்குப் பேர்தான் சட்டத்தின் ஆட்சியோ ? ##

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க.,வில் இணைந்தது குறித்து, "ஜெயா டிவி'க்கு மட்டும் சம்பத் அளித்த பேட்டி:ம.தி.மு.க.,வுக்காக, 19 ஆண்டுகள் பணியாற்றினேன். ஆனால், வைகோ என்னை பழிவாங்கி விட்டார். எனது சொந்த ஊரிலேயே என் கொடும்பாவியை எரித்து, என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர். தன்மானமும், சுயமரியாதையும் கிடைக்கும் என்பதால், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன்.தி.மு.க.,வில் நான் இணையப் போவதாக, தி.மு.க.,வே வதந்தியைக் கிளப்பிவிட்டது. அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக உள்ள, 52 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன்.ஜெயலலிதாவின் துணிச்சலும், ஆளுமைத் திறனும் பிற மாநில முதல்வர்களும் பின்பற்றக் கூடியதாக உள்ளது. அவரது தலைமையிலான ஆட்சி, சரியான திசையில் சென்று கொண்டுள்ளது.இவ்வாறு, நாஞ்சில் சம்பத் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவையும், அவரது அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்தவர் சம்பத் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு கூட்டத்திற்கு ரூ.25,000 சம்பளம்?

நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,வில் இணைந்தது குறித்து, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:ம.தி.மு.க.,வில் ஒரு கூட்டத்தில் பேசினால், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்; அ.தி.மு.க.,வில், 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியை, இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாது; மாசத்துக்கு, குறைந்தபட்சம், மூன்று கூட்டங்களாவது நடைபெறும்; அதில் பேச வாய்ப்பு கிடைக்கும்.மேலும், 40க்கும் மேற்பட்ட வழக்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது, குடும்ப உறுப்பினர்களுக்கு சில சலுகைகள் என, பல உபாயங்களை எதிர்பார்த்தே, நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.இவ்வாறு, அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

Thanks

Dinamalar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியலுக்கு அப்பால் இவரது பேச்சுக்கள் எனக்கு பிடிக்கும்,சிறந்த இலக்கியவாதி.

அரசியலில் எதிரி நண்பனாவதும்,நண்பன் எதிரியாவதும் சகஜமே ஆனால் இவரும் ஒரு சாதாரண அரசியல்வாதி போல தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது கணக்கு கூட்டல்கள் பெருக்கல்கள் கழித்தல்கள் வகுத்தல்கள் என்று வரும் போது ஒன்றுமே செய்ய முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்கப்பா இந்திய அரசியலில் இதெல்லாம்  சாதாரணமப்பா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.