Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்கள்; ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லையே... ஏன்?

Featured Replies

சிங்கள மக்கள் புரிந்து கொண்டார்கள்; ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லையே... ஏன்?

 

"இப்ப தம்பி, ஆ... ஊ ... எண்டால் எல்லாரும் கொடியைப் பிடிச்சுக்கொண்டு கிளம்பி விடுறாங்கள்’' இப்படி ஒரு வசனம் சினிமாப் படத்தில் வடிவேல் காமெடியில் வருகுது பாருங்கோ... வரும் ஆனா... வராது... என்ற அந்த காமெடியில் வரும் இந்தக் காட்சியும் எல்லாரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததோடு ஒரு நாட்டின் அரச நிர்வாக ஆட்சி எப்படி உள்ளது என்பதை எடுத்துக் காட்டி சிந்திக்கவும் வைத்தது பாருங்கோ ...


இப்படியானதொரு நிலைவரம்தான் இப்ப இலங்கையிலும் நடந்து கொண்டிருக்குப் பாருங்கோ...

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல எப்பவுமே தமிழ் மக்களை சந்தேகத்துடனேயே பார்த்துவரும் படையினரும் பொலிஸாரும் யாழ். பல்கலைக்கழகத்தில் அவசரமாக அரங்கேற்றிய அடக்குமுறை அராஜகம் இப்ப அவர்களையே ஏன் செய்தோம் என சிந்திக்க வைத்து விட்டது பாருங்கோ...

 

உலகம் முழுவதும் இந்த விஷயம் தெரிய வந்ததால் அடக்கி ஒடுக்க நினைத்தவர்களால் இதனைப் பூசி மெழுக முடியவில்லைப் பாருங்கோ... அடக்குமுறைகளால் மனித உணர்வுகளை ஒரு போதும் அடக்கி ஒடுக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும் தமிழர்கள் ஆட்சியாளர்களுக்கு எடுத்துக் காட்டி வருகிறார்கள்.


யாழ். பல்கலைக்கழகத்தில் துளிர்விட்ட அடக்குமுறைக்கு எதிரான மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் இப்ப நாட்டிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகத்திற்குமெல்லே பரவியிருக்கு. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களைப் போராட புலி ஆதரவாளர்கள் தூண்டி விடுகிறார்கள் என சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களிடையே புலி பயத்தைத் தொடர்ந்தும் நிலைநிறுத்த முயற்சித்து வருகினம்.

 

யாழ்ப்பாண மாணவர்களையும் மக்களையும் புலி சார்பானவர்கள் தான் குழப்பிவிடுகினம் எண்டால் இப்ப நாட்டிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இராணுவத் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கும் புலி ஆதரவாளர்கள்தான் காரணம் என சிங்கள ஊடகங்கள் சொல்லுமா? யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்திய இராணுவ அடக்குமுறைப் பிரயோகத்தை பேராதனையிலும் றுகுணுவிலவும் நடத்த அவர்களால் முடியுமா?


ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ நினைக்கும் தமிழ், சிங்கள் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவான சிந்தனை ஏன் ஆட்சியாளர்களிடம் இல்லாமல் போனது? அரசியலில் லாபம் தேடுவதற்காக நாட்டை எப்போதுமே குழப்பமான சூழலில் வைத்திருக்கத்தான் இவயள் விரும்புகினம் போல...

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களும் வீதியில் இறங்கிப் போராடியது, தமிழ் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவே அமைந்துள்ளது பாருங்கோ... பல்கலைக்கழக மாணவர்களின் ஒருமித்த இந்தப் போராட்டம் நாட்டைப் பிழையான வழியில் நடத்திச் செல்ல முயல்வோருக்கு விழுந்திருக்கும் ஒரு அடியாகும்.


வடக்கை எப்போது இராணுவப் பிடிக்குள்ளே வைத்திருக்க நினைப்போரின் உண்மை முகத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்தப் போராட்டங்கள் பாருங்கோ...

 

தமிழ் மக்களின் மன உணர்வுகளை சிங்கள மாணவர்களும் கல்விமான்களும் கலைஞர்களும் இப்ப நல்லாவே புரிந்து வைத்திருக்கிறார்கள் எண்டுதான் சொல்ல வேண்டும். யாழ். பல்கலைக்கழக மாணவிகளின் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் அவர்களை அச்சுறுத்தி பயமுறுத்தும் போதும் மாணவிகள் துணிந்து விளக்கேற்றியதை நேரில் பார்த்த சிங்கள மாணவி ஒருவரின் சமூக வலைத்தளத்திலான அதன் பதிவு தமிழ் மக்கள் மட்டில் அவர்கள் இப்போது கண்டிருக்கும் விழிப்புணர்வைக் காட்டுகிறது பாருங்கோ....


இதேபோலதான் பாருங்கோ, அண்மையில் ஒரு சிங்கள பட இயக்குநரும் முன்னாள் போராளி ஒருவன், இன்றைய சூழலில் வாழத் தலைப்படும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி படம் எடுத்திருக்கிறார். இதிலும் நிம்மதியாக, ’தானுண்டு தன்வேலையுண்டு’ என வாழ நினைக்கும் தமிழனை சீண்டிப் பார்ப்பதால்தான் பிரச்சினைகள் உருவாகின்றது என்பதை வடிவாகக் காட்டியிருக்கிறார் பாருங்கோ ...

 

இப்படியாக சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மன உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு ஏன் ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை...?


தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது சில பேர் நடத்திவரும் கபட நாடகம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த பல்கலை மாணவருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது வடிவாகத் தெரிஞ்சுது பாருங்கோ ...

 

பிலாப் பழத்தை இலையான் மோய்ப்பது போல இவர்கள் அன்றைய ஆர்ப்பாட்டக்காரர்களை மொய்த்து நிண்டு விதம் விதமாகப் படம் பிடிச்சதை யாழ்ப்பாண சனம் வடிவாகப் பார்த்துதுகள் பாருங்கோ...


ஆர்ப்பாட்டக்காரர்களோடும் ஊடகக்காரர்களோடும் சேர்ந்து நிண்டு பூனை கண்ணை மூடி பால் குடிப்பது போல் இவயள் செய்த திருகு தாளத்தின் ஒரு காட்சியை ஒரு படம் காட்டிப் போட்டுது பாருங்கோ... கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அவசரமோ என்னமோ? பதாதையை தலைகீழாகப் பிடித்து வைத்திருந்தார் ஒருத்தர்.

 

இன்றைக்கு நாட்டில எல்லா இடத்தையும் வீதியில் இறங்கிப் போராட வெளிக்கிட்டடுதுகள் பாருங்கோ... நீதிக்காக நீதி வேண்டிப் போராட்டம்; விரைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம்; கடலில் நிம்மதியாக தொழில் செய்ய விடுமாறு கோரிப் போராட்டம், என வீதிப் போராட்டங்கள் தான் அதிகரிச்சுப் போகுது பாருங்கோ... இப்படியாக எல்லாத்துக்கும் போராட்டங்கள் நடக்க ஆரம்பிச்சு நாளைக்கு ஒழுங்கைக்கு பெயர் வைக்கும் விவகாரத்துக்கும் போராட்டம் நடந்தாலும் நடக்கும் பாருங்கோ...

 

 



http://www.yarlmann.lk/viewsingle.php?id=1300

  • தொடங்கியவர்

இன்றைக்கு நாட்டில எல்லா இடத்தையும் வீதியில் இறங்கிப் போராட வெளிக்கிட்டடுதுகள் பாருங்கோ... நீதிக்காக நீதி வேண்டிப் போராட்டம்;

விரைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம்;

கடலில் நிம்மதியாக தொழில் செய்ய விடுமாறு கோரிப் போராட்டம்,

 

என வீதிப் போராட்டங்கள் தான் அதிகரிச்சுப் போகுது பாருங்கோ...

 

இப்படியாக எல்லாத்துக்கும் போராட்டங்கள் நடக்க ஆரம்பிச்சு நாளைக்கு ஒழுங்கைக்கு பெயர் வைக்கும் விவகாரத்துக்கும் போராட்டம் நடந்தாலும் நடக்கும் பாருங்கோ...

 

பொருளாதாரம் மேலும் சரியும்பொழுது நிலைமைகள் மேலும் மோசமடையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.