Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.

- பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 07 துரநெ 2006 15:07

மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஸ்ரீலங்கா ஆழஊடுருவித்தாக்கும் படையினர் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப்புறங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து துரத்தும் நோக்கம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் கண்ணிவெடியில் சிக்கி 9 பொதுமக்கள் பலி - 14பேர் படுகாயம் - புலிகளின் நிர்வாகப்பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் சிறீலங்கா ஆழஊடுருவித்தாக்கும் படையினர் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஒன்பது அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப்புறங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து துரத்தும் நோக்கம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களை அழிக்க சிங்கள தெசம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஏன் இவ்வாறு மக்கள் பாதுகாப்பற்ற பிரதேசங்களில் கூட்டமாகத் திரிகின்றார்கள்! ஒவ்வொரு தமிழனும் ததன் பாதுகாப்பில் கூடுதல் அவதானமாக இருக்க வேண்டியது தேவையாகும்!

மரணித்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளையும் விட்டு வைக்காத கொலைகாரர்கள்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நிர்வாகப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 மாத குழந்தை மற்றும் 8 மாத குழந்தை உட்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு வடமுனைப் பகுதியில் நெடுங்கேணியில் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தோரில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினர் கிரானிலிருந்து வடமுனை கிராமத்துக்கு உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து இத்தாக்குதலை நடத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே 5 பெண்கள், ஒரு ஆண் மற்றும் 3 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான உழவு இயந்திரத்தில் 20 பொதுமக்கள் சென்றதாக குடும்பிமலை கோட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஒளியன் தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்தோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கடந்த மே 27 ஆம் நாள் விவசாயிகளுடன் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை திக்கிளிவெட்டியில் இராணுவத்தினர் தாக்கியதில் 12 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டனர்.

அண்மைக்காலத்தில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய தாக்குதல்கள் மூலம் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள எல்லையோர கிராம மக்கள் இடம்பெயருவர் என்றும் இராணுவத்தினர் கருதுகின்றனர்.

மட்டக்களப்பு - பொலநறுவ எல்லையில் உள்ளது வடமுனை கிராமம். வடமுனையிலிருந்து வடமேற்கில் 7 கிலோ மீற்றர் தொலைவில் வெலிக்கந்தையில் சந்தை உள்ளது. ஆனால் அண்மைய தாக்குதல்களால் வடமுனையிலிருந்து 28 கிலோமீற்றர் தென்கிழக்கில் உள்ள கிரானுக்குச் சென்று தங்களது பொருட்களை வடமுனை மக்கள் வாங்கி வருகின்றனர். பொருட்களை வாங்குவதற்காக சிறு, சிறு குழுக்களாக உழவு இயந்திரங்களில் பயணித்து வருகின்றனர்.

இந்தப் பொதுமக்களை இலக்கு வைத்தே ஆழ ஊடுருவும் இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தினரால் இப்பிரதேசத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் விவசாய செயற்பாடுகளுக்கும் படையினர் தடை விதித்தனர்.

வடமுனை - தரவைப் பிரதேசம் 1995 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டதையடுத்து மீண்டும் மக்கள் குடியேறினர். வடமுனையின் பல்வேறு பகுதிகளில் தங்களது விவசாய செயற்பாடுகளை மக்கள் மீளத் தொடங்கினர்.

செய்தி- புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தைகளையும் விட்டு வைக்காத கொலைகாரர்கள்!!

கொலைகளும் பழிவாங்கல்களும் தொடர்கதையாக..... . . . .

மனிதம் மரணித்த தேசத்தின் தலைவிதி என்றுதான் மாறும்

warlanka6na.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பகுதியில் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 10 பொதுமக்கள் பலி- 14 பேர் படுகாயம் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நிர்வாகப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 மாத குழந்தை மற்றும் 8 மாத குழந்தை உட்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு வடமுனைப் பகுதியில் நெடுங்கேணியில் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தோரில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினர் கிரானிலிருந்து வடமுனை கிராமத்துக்கு உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து இத்தாக்குதலை நடத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே 5 பெண்கள், ஒரு ஆண் மற்றும் 3 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளான உழவு இயந்திரத்தில் 20 பொதுமக்கள் சென்றதாக குடும்பிமலை கோட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஒளியன் தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்தோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

படையினரால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோர் விவரம்:

- சிவனேசன் சிந்துஜன் (6 மாத குழந்தை)

- சிவனேசன் மதிமலர் (வயது 24)

- சரவணமுத்து சந்திரகுமார் (வயது 10)

- சரவணமுத்து மதியழகன் (வயது 22)

- தம்பிமுத்து கவிதா (வயது 20)

- காசிப்பிள்ளை கோமதி (வயது 40)

- தளையசிங்கம் தங்கலட்சுமி (வயது 48)

- பத்தினியன் சின்னத்தம்பி (வயது 56)

- ஐயாதுரை சிறிமா (வயது 33)

காயமடைந்தோர்:

- பிரதீபன் (வயது1)

- கவிதா (வயது 2)

- சிறிதரன் அனோ (வயது 6)

- சரவணமுத்து சந்திரன் (வயது 16)

- கனகம் இராசரட்ணம் (வயது 40)

- தங்கவடிவேல் (வயது 46)

- மயில்வாகனம் ஜெயரட்ணம் (வயது 46)

- வீரக்குட்டி சின்னத்தம்பி (வயது 50)

- பத்தினியன் சின்னத்தங்கை (வயது 56).

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கடந்த மே 27 ஆம் நாள் விவசாயிகளுடன் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை திக்கிளிவெட்டியில் இராணுவத்தினர் தாக்கியதில் 12 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டனர்.

அண்மைக்காலத்தில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய தாக்குதல்கள் மூலம் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள எல்லையோர கிராம மக்கள் இடம்பெயருவர் என்றும் இராணுவத்தினர் கருதுகின்றனர்.

மட்டக்களப்பு - பொலநறுவ எல்லையில் உள்ளது வடமுனை கிராமம். வடமுனையிலிருந்து வடமேற்கில் 7 கிலோ மீற்றர் தொலைவில் வெலிக்கந்தையில் சந்தை உள்ளது. ஆனால் அண்மைய தாக்குதல்களால் வடமுனையிலிருந்து 28 கிலோமீற்றர் தென்கிழக்கில் உள்ள கிரானுக்குச் சென்று தங்களது பொருட்களை வடமுனை மக்கள் வாங்கி வருகின்றனர். பொருட்களை வாங்குவதற்காக சிறு, சிறு குழுக்களாக உழவு இயந்திரங்களில் பயணித்து வருகின்றனர்.

இந்தப் பொதுமக்களை இலக்கு வைத்தே ஆழ ஊடுருவும் இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தினரால் இப்பிரதேசத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் விவசாய செயற்பாடுகளுக்கும் படையினர் தடை விதித்தனர்.

வடமுனை - தரவைப் பிரதேசம் 1995 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டதையடுத்து மீண்டும் மக்கள் குடியேறினர். வடமுனையின் பல்வேறு பகுதிகளில் தங்களது விவசாய செயற்பாடுகளை மக்கள் மீளத் தொடங்கினர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிவெடித் தாக்குதலில் 9 அப்பாவி பொதுமக்கள் பலி

- வடமுனையிலிருந்து கிரான் சந்தைக்கு சென்றோரே உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்

வாழைச்சேனைக்கு மேற்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடமுனைப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட ஒன்பது அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பத்துப் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வடமுனையிலிருந்து, இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கிரான் சந்தைக்கு உழவு இயந்திரம் ஒன்றில் சென்று கொண்டிருந்தவர்களே நேற்றுக்காலை 10 மணியளவில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள்.

மட்டக்களப்பு - பொலநறுவை எல்லையில் வெலிக்கந்தைக்கு சமீபமாக, வாழைச்சேனைக்கு மேற்கே சுமார் 35 கிலோ மீற்றர் தூரத்தில் வடமுனை உள்ளது.

வடமுனைக்கும் மியாங் குளத்திற்குமிடையே உள்ள நெடுகல் பகுதியிலேயே நேற்றுக்காலை இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சம்பவம் நடைபெற்ற பகுதி, வெலிக்கந்தை இராணுவ முகாமிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. ஆழ ஊடுருவும் இராணுவப் படையணியே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி விடுதலைப் புலிகளின் குடும்பிமலை கோட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ஒளியன் கூறுகையில்;

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் வாராந்தம் சிறு சிறு குழுக்களாக ட்ராக்டர்களில் கிரான் சந்தைக்கு சென்று வருவது வழமை. நேற்றும் வடமுனை, ஊற்றுச்சேனை, எல்.வி. கிராம மக்கள் 20 பேர் ட்ராக்டர் ஒன்றில் கிரான் சந்தைக்குச் சென்றனர்.

இந்த மக்கள் பிரதானமாக கிரானுக்குச் செல்ல வெலிக்கந்தை பாதையையே பயன்படுத்துவர். தற்போது அது மூடப்பட்டதால் வடமுனையூடாகச் செல்வர். நேற்றுக்காலை இவர்கள் சென்ற ட்ராக்டர் நெடுகல் பகுதியில் நடு வீதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கிய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் கண்ணிவெடியில் ட்ராக்டர் சிக்கிய போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஐந்து பெண்களும் ஆணொருவரும் மூன்று சிறுவரும் உயிரிழந்துள்ளனர். பத்துப் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் 7 பேரும் பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் பல மணி நேரத்தின் பின்னரே நேற்றுமாலை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கிரான்பால இராணுவ சோதனை நிலையமூடாக கொண்டு வரப்பட்டு மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களை வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவதற்காக மாவட்ட வைத்திய அதிகாரி தலைமையில் மருத்துவக் குழுவொன்று சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றபோதும் படுகாயமடைந்தவர்களின் நிலைமை மிக மோசமாகவிருந்ததால் இவர்களை மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இங்கு 4 பெண்களும் இரு ஆண்களும் எட்டுமாதக் குழந்தையொன்றும் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கண்ணி வெடித் தாக்குதலில், காசிப்பிள்ளை கோமதி (40 வயது), சரவணமுத்து மதியழகன் (22 வயது), சரவணமுத்து தினேஸ்குமார் (11 வயது), சரவணமுத்து சந்திரகுமார் (10 வயது), தம்பிமுத்து கவிதா (20 வயது), சிவநேசன் சிந்துஜன் (6 மாதம்), சிவநேசன் மதிமலர் (24 வயது), தளயசிங்கம் தங்கலட்சுமி (48 வயது), பத்தினியன் சின்னத்தம்பி (56 வயது) ஆகியோர் உயிரிழந்தனர்.

வீரக்குட்டி சின்னத்தம்பி (50 வயது), பத்தினியன் சின்னத்தங்கச்சி (58 வயது), மயில்வாகனன் ஜெயரத்தினம் (45 வயது), கங்கான இராசலட்சுமி (41 வயது), ஐயாத்துரை சிறீமா (33 வயது), சிறிதரன் அனு (6 மாதம்), சரவணமுத்து சந்திரன் (16 வயது) ஆகியோரும் மேலும் இரு குழந்தைகளும் காயமடைந்தனர்.

கண்ணிவெடி வெடித்து ட்ராக்டர் பெட்டி சிதறியபோது அதனுள் தாயின் மடியிலிருந்த 3 மாதக் குழந்தையொன்று தூக்கி வீசப்பட்ட போதும் காயமேதும் ஏற்படாமல் தப்பியுள்ளது. இக் குழந்தையின் தாயும் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அண்மைக்காலமாக இப் பகுதிக்குள், ஆழ ஊடுருவும் படையணியினர் ஊடுருவி நடத்திய தாக்குதலில் பல பொதுமக்களும் போராளிகள் சிலரும் கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. இராணுவத்தினரே இந்த ஊடுருவல் தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். எனினும் இதனை இராணுவம் மறுத்துள்ளது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.