Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி, நியாயம் கேட்பதற்கு அருகதையற்ற தரப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் கனவான்களின்

சிறுமைத் தனச் செயற்பாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது ஈழத் தமி ழர்களை மட்டுமல்லாது புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களைக்கூட விசனத்திலும், எரிச்சலிலும், சீற்றத்தி லும், தாங்கொணாக் கோபத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது.

ஈழத் தமிழருக்கு நியாயம் செய்யவேண்டிய கடப்பாடும், பொறுப்பும், கட்டாயமும் உடைய ஒரு தரப்பே இந்த அநீதி யைத் தமக்கு எதிராக இழைத்தது என்ற ஆதங்கமும், குமைச் சலும் ஈழத் தமிழர்களின் மனதை ஆழ நெருடிக்கொண்டி ருப்பதை இங்கு குறிப் பிட்டேயாக வேண்டும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெற்றுள்ள இருபத்தியைந்து நாடுகளையும் அவை இத்தடை வருவதை விரும் பியோ, விரும்பாமலோ உள்ள நிலையில் ஈழத் தமிழருக்கு எதிரான இத்தகைய ஒரு முடிவுக்கு தீர்மானத்துக்கு வரு வதற்குக் கட்டாயப்படுத்தி, அழுத்தம் கொடுத்து, நெருக்கு தல் தந்த தரப்பு சர்வதேசப் பொலீஸ்காரனான அமெரிக் காவே என்பது உலகறிந்த இரகசியம்.

"வீடெரிக்கும் இராசாவுக்கு நெருப்பெடுத்துக் கொடுக் கும் மந்திரி போல' இந்த விடயத்தில் அமெரிக்காவின் பின் னால் நின்று, தூண்டி விட்டுக் கொண்டிருந்தது பிரிட்டனே என்பதும் தெரிந்த சங்கதியே.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஒரு நாடான பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய் யும் தீர்மானத்துக்கு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தான் அத்தகைய ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டு, அதே வழியில் ஐரோப்பிய ஒன்றியத்தைத் திருப்புவதற்குத் தலைகீழாக நின்று முயற்சித்து இப்போது அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது.

உண்மையில் ஈழத் தமிழர்கள் இன்று சிங்கள பௌத்த பேரினவாதிகளினால் இவ்வாறு கொடூரமாக அடக்கப்பட்டு, அதிலிருந்து மீளுவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, இன்று அது பெரும் ஆயுதப் போராட்டமாக வன் முறைச் சுழலாக வெடித்து, பல்லாயிரக் கணக்கான உயிர் களையும் காவுகொண்டு, பல கோடி ரூபா உடைமைகளைத் துவம்சம் செய்து, பேரழிவுகளைத் தந்து நிற்கும் நிலைமை உருவாகியிருக்கின்றது என்றால் அதற்கு காரணகர்த்தா மூலம் பிரிட்டன்தான்.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தீவின் மீது அந்நியர் முதல் முதலில் போர்த்துக்கேயர் காலடி எடுத்து வைத்தபோது இந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் தமக்கெனத் தனித்தனியாக வரையறை செய்யப்பட்ட தாயக பூமியில், தனியான பண்பாடு, கலா சாரம், வாழ்வியல் முறைகள், மொழி, ஆட்சி முறைமை ஆகிய தனித்துவப் பண்புகளோடு, தனித் தனி இராச்சியங்களின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர்.

பிற்காலத்தில் தென்கிழக்காசியப் பிராந்தியத்தைத் தனது காலனித்துவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரிட் டிஷ் சாம்ராஜ்யம், தனது நிர்வாக வசதிக்காக இந்தத் தீவின் இரு பெரும் இனங்களும் காலங்காலமாகத் தனித்தனியாக வைத்திருந்த இராஜ்ஜியங்களை ஒன்றாக்கியது. கோல் பு×க் கமறொன் திருத்தங்கள் மூலம் 1833 இல் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தினால் சிறுபான்மை இன மக்களின் தாயகம், பெரும்பான்மைச் சிங்களவர்களின் தாயகத்தோடு பலவந்த மாக ஒன்றிணைக்கப்பட்டது.

இந்த இணைப்பின் அடிப்படையில், சுமார் 115 ஆண்டு கள் இலங்கையைத் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் ஒற்றை ஆட்சி முறைமைக்கு அமைய வைத்திருந்த பிரிட் டன், உலகப் போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் தனது காலனித்துவப் பிடியை விட்டு விட்டு ஓடியபோது, தனது நிர்வாக வசதிக் காகத் தான் ஏற்படுத்திய இணைப்பை அப்படியே விட்டு விட்டுச் சென்றதால் சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல், வாழ்வியல், இனப் பண்பியல் உரிமைகள் அனைத் தும் சிங்களப் பெரும்பான்மையினரின் அதிகார அடக்குமுறைத் தனத்தின் கீழ் அடிமை வசமாயிற்று.

அதிலிருந்து மீளுவதற்குத்தான் ஈழத் தமிழர்களின் உயிர்த்தியாகமும், உயர் ஈகமும் நிறைந்த இந்தப் போராட் டம்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தினால் பலவந்தமாக ஈழத் தமிழர்களின் தன்னாட்சி இறைமை பறிக்கப்பட்டு பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட் டது.

இலங்கைத் தீவைச் சூறையாடிச் சுரண்டும் நோக்கோடு தாங்கள் ஆக்கிரமித்தபோது விட்ட தவறின் பெறுபேறையே, இன்று இலங்கைத் தீவு அனுபவித்துக் கொண்டிருக்கின் றது என்பது பிரிட்டிஷாருக்குத் தெரியாத ஒன்றல்ல.

தாங்கள் விட்ட தவறைத் திருத்தி நிவர்த்தி செய்வதற்கா கவே ஈழத் தமிழர்கள் இந்த இரத்தம் சிந்தும் நியாயப் போரை உன்னதச் சிறப்போடு முன்னெடுக்கிறார்கள் என்பதும் பிரிட்டனுக்குப் புரியாததல்ல.

ஈழத் தமிழர்களுக்குத் தாம் இழைத்த அநீதியே இன்று இலங்கைத் தீவை பெரும் சாம்பல் மேடாக்கியுள்ளது என்ற உண்மை பிரிட்டிஷாருக்குப் புரிந்திருந்தும் கூட, இந்த இறு திச் சமயத்தில் தன்னும், முன்னர் ஈழத் தமிழர்களுக்குத் தாங் கள் இழைத்த தவறை நிவர்த்தி செய்யும் விதத்தில் தாங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வராமல் போனதும்

அதற்கு மாறாக, ஈழத் தமிழர்களின் நியாயப் போராட்டத் தைப் "பயங்கரவாதமாக' கொச்சைப்படுத்தி, அந்த மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வைக்க தலைகீழாக நின்றதன் மூலமும்

"வெள்ளைக் கனவான்கள்' என்று முன்பு ஆங்கிலேய ருக்கு வழங்கப்பட்ட மதிப்பை சிறுமைப்படுத்திக் கெடுத் திருக்கின்றது பிரிட்டன்.

பிரிட்டன் இழைத்த கெடுதியின் மேலும் விவரத்தை நாளையும் இப்பத்தியில் பார்ப்போம்.

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களைக் கொண்ட கட்டுரையை இணைத்தமைக்கு நன்றி கந்தப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதி, நியாயம் கேட்பதற்கு அருகதையற்ற தரப்புக்கள்

தனி நாடாக இருக்காத இலங்கையைப் பலவந்தமாக ஒன்றுபடுத்தி, 1833 இல் அப்போதைய காலனித்துவ ஆதிக்க நாடான பிரிட்டன் செய்த திருகுதாளமே இன்றைய இலங்கையின் அவல நிலைக்குக் காரணம் என்பதை நேற்று இப்பத்தியில் பார்த்தோம்.

தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில் தன் நிர்வாக வச திக்காகத் தான் திணித்த வலோற்கார இணைப்பு நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாதது என்பதை "வெள் ளைக் கனவான்களான' பிரிட்டிஷாருக்கு ஆரம்பத்திலேயே உறைப்பாகப் புரியத் தொடங்கி விட்டது என்பதுதான் உண்மை.

பிரிட்டிஷார் தமது ஆட்சியதிகாரத்தைக் கைகழுவி விட் டுப் புறப்படப்போன போதே இந்திய உபகண்டம் கலவரக் காட்சிகளைக் கண்டது. வெள்ளைக்காரக் காலனித்துவ நாடான இந்தியா, அங்கு இரு தனித்தனித் தாயகங்களை நாடுகளை கண்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என் றும் பிரிந்தது.

மலாயாவுக்கும் அதே கதி. ஒருபுறம் மலேசியாவாகவும் மறுபுறம் இலங்கையின் முப்பதில் ஒரு பங்கு அளவு கொண்ட சிங்கப்பூராகவும் அது பிளந்தது.

அதன் பின்னர் கூட அது நிற்கவில்லை. சுமார் இரண் டரை தசாப்த காலம் கடந்த பின்பும் பாகிஸ்தான், இரண் டானது. மேற்குப் பாகிஸ்தான் பாகிஸ்தானாகவும், கிழக் குப் பாகிஸ்தான் பங்களாதேஷாகவும் உருவெடுத்தன.

இப்படி காலனித்துவ காலத்தில் ஒன்றாக்கப்பட்ட ஆட்சி அதிகார மையங்கள் தத்தமது தனித்துவங்களுக்கு அமைய தாயகங்களுக்கு இணங்க துண்டாகி தனி அரசுகளா னமை புதுமையான ஒன்றல்ல. கண்டிக்கப்பட வேண் டிய ஒன்றுமல்ல.

இலங்கைத் தீவின் விவகாரத்தில் இந்த விடயம் சற்று தாமதமாகி யிருக்கின்றது. அவ்வளவே.

அதற்கு அடிப்படைக் காரணம் சிங்களப் பெரும்பான்மை யினர் மீது நமது முன்னைய தமிழ்த் தலைமைகள் வைத் திருந்த நம்பிக்கையும், தமிழர்களுக்கே பொதுவான சகிப் புத் தன்மையும்தான்.

பல கலாசார, பல மத, பல்லின பிராந்தியமாக விளங்கும் இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாகக் காணும் பேரினவாதிகளின் கொடூரப் போக்குக்கு இடம்கொடுக்க முடியாமல்

தமது இனத் தாயகத்தின் தனித்துவத்தைச் சிதைத்து, அதை ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும் சிங்களத் தீவிர வாதத்தின் வலோற் காரத்துக்கு இனியும் இடம்தர முடியாத இக்கட்டில்

தங்களின் மொழி உரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, கல்வி உரிமை என எல்லா இன அடிப் படைக் கட்டுமானங்களும், வாழ்வியல் உரிமைகளும் சிதைக்கப்பட்ட கையறு நிலையில்தான்

தமது இறுதித் தீர்வாகத் தேசத்தை தாயகத்தை மீட் கும் இந்த இனப்போரில் தங்களை ஆகுதியாக்கும் தீர்மானத் துக்குத் தமிழர்கள் வந்தார்கள்.

இதைக் கூட எடுத்த எடுப்பில் தமிழர்கள் செய்து விடவில்லை. மூன்று தசாப்த காலம் நீதி, நியாயம், உரிமை வேண்டி சிங்கள அரசுகளின் அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் அஹிம்சை வழியில், சாத்வீக நெறியில், காந் தீயப் பாதையில் போராட்டங்களை நடத்தினார்கள். சர்வ தேசத்தின் கவனத்தை இலங்கைத் தீவின் பக்கம் திருப் பவைத்துத் தமக்கு நியாயம் பெற முயன்றார்கள்.

ஆனால், அவை எவையும் வெற்றியைத் தரவில்லை. பயன் கிட்டவில்லை.

தமிழர்களைப் போல குடிசனத் தொகையிலும், வாழ் விடப் பிரதேசத்திலும் பல மடங்கு பருத்திருக்கும் பெரும் பான்மையினரான சிங்களவர்கள், தமிழர்கள் மீதான அடக்கு முறையைக் கைவிடத் தயாரில்லை என்பதைத் தங்களது ஆதிக்க வெறி மூலம் மீண்டும் மீண்டும் நிரூபித்தார்கள்.

இலங்கைத் தீவில் இரு இனங்களினதும் தாயகங் களையும் தமது நிர்வாக முறைமைக்காகப் பலவந்தமாகத் திணித்த பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளோ

அல்லது

இன்று தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை "பயங் கரவாதம்' எனக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி விமர் சித்து, நியாயம் பிழக்கின்ற சர்வதேச சமூகத்தினரோ

அஹிம்சை வழியில் தமது உரிமைகளுக்காகத் தமிழர் போராட்டம் நடத்தியபோது, அந்தப் போராட்டத்துக்கு நியாயமான முறையில் ஆதரவு தரவில்லை. சிங்களப் பெரும்பான்மையினரிடமிருந்து சிறுபான்மைத் தமிழர் களுக்கு நீதிபெற்றுத் தரவேயில்லை. பெரும்பான்மை இனம் என்ற பலத்தை வைத்துக் கொண்டு ஜனநாய கத்தில் உள்ள பின்னடைவான, குறைபாடான தன்மைகளைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் வாழ்வியல் உரிமைகளைத் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் சிங் களவர்களிடமிருந்து தமிழர்களுக்கு உரியதைப் பெற்றுக் கொடுக்கப் பூர்வாங்க முயற்சிகளைக் கூட எடுக்கவில்லை.

இந்த நிலைமையில்தான் தமிழர்கள் தங்களது இறுதி முயற்சியாக வேறு வழி ஏதும் இல்லாத நிலையில் தங் களையே ஆகுதியாக்கும் இந்த விடுதலை வேள்வித் தீயை ஆயுத வழிப் போராட்டமாக முன்னெடுத்தனர். இன்று அதில் கணிசமான வெற்றிகளைக் கண்டு முன்னேறியிருக்கின் றனர்.

தமிழர் தாயகத்தையும், சிங்களவர் தாயகத்தையும் ஒன் றிணைத்துத் தாம் புரிந்த தவறுக்கு சரியான பிராயச்சித் தத்தைத் தேடித் தராத பிரிட்டனும், அதனுடன் அணிவகுத்து நிற்கும் சர்வதேச சமூகமும், தமிழர்கள் தங்கள் உரிமை களைத் தாங்களே வேண்டி மூன்று தசாப்த காலம் அமைதி வழியில் போராடியபோது அதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு அதற்குப் பக்கபலமாக நின்று அதனை வலுப் படுத்தத் தவறிவிட்டு, இப்போது வேறு வழியின்றித் தமி ழர்கள் ஆயுதப் போராட்ட நெறிமுறையை நாடி, அதில் முன்னேறும்போது அதைப் "பயங்கரவாதமாக' சித்திரிப்பதற்கு எந்த உரிமையும், தகுதியும், தகைமையும் அற்றவை.

செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய சமயத்தில் செய் யத் தவறிவிட்டு இப்போது தத்துவம் பிழப்பதில் அர்த்த முமில்லை; நியாயமும் இல்லை.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.