Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிதியாக வாழ்ந்து பாருங்கள்... அந்த வாழ்தலின் அற்புதம் உங்களுக்கும் புரியும்-இசைப்பிரியா.

Featured Replies

ஒருவன் வாழ்ந்தான் எபதற்குச் சாடசியாக அமைவது அவனது மரணமும் அதன் பின்னரான நாட்களுமேயாகும். வாழ்தல் என்பதற்கும் உயிரோடு இருத்தல் என்பதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. வாழ்தல் என்பது மரணத்தின் பின்னரும் நிலைத்திருக்கும் மாண்பு கொண்டது. மரணம் உடலைச் சாய்த்த பின்னரும் மக்கள் மனங்கள் அவனது நினைவோடு லயித்திருப்பது அவனது வாழ்தலின் சாட்சியமாக உள்ளது.

பாரிஸ் நகரில் பலிகொள்ளப்பட்ட பரிதி அவர்களது வாழ்தலும் உயர்ந்த பதிவுகளையும் பல நினைவுகளையும் அவர் வாழ்ந்த தளங்களிலும் அவர் நேசித்த மனிதர்கள் மனங்களிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. பரிதி என்ற மாமனிதன் எதை எங்களிடம் விட்டுச் சென்றான்...? எதை எங்களிடமிருந்து கவர்ந்து சென்றான்...? தமிழீழ விடுதலை என்ற ஒற்றை இலட்சியத்தின் உயிரோடையாகப் பரிதியின் வாழ்வைப் பதிவு செய்யலாம். தேசியத் தலைவரின் பாதையில் இருந்து சிறிதும் விலகாத அவரது இலட்சியப் பாதையே அவர் எதிரியின் முதல் குறியாகக் காரணமானது.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் மரணிப்பது என்பது விடுதலைப் புலிகளது தெரிவாகவே இருந்தது. இலட்சியத்திற்காக உயிரை அர்ப்பணித்த வேங்கைகளின் கதைகள் பல ஆயிரமானதற்கு அவர்களது அந்த விருப்பங்களே காரணமாகவும் இருந்தது. கல்லும் முள்ளும் அல்ல... கண்ணி வெடிகளும் எதிரியின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் குறிபார்க்கும் தளங்கள் அவர்களது விருப்பமான களங்களாக இருந்தன. பரிதியும் அந்தக் களங்களில் படை நடத்தியவர் என்பதால் அவரது துணிச்சலும் நேர்மையும் தலைவன் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் அவரது புலப்பெயர்விலும் மாற்றத்தை உருவாக்கவில்லை.

எதிரிகளும் துரோகிகளும் ஈழத்தில் மட்டுமா...? இங்கும்தான் விதைக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் பரிதி அதற்கெல்லாம் அச்சப்பட்டதே கிடையாது. நான்... என் மனைவி... என் பிள்ளைகள்... என் குடும்பம்... என்பதெல்லாம் என் தேசத்திற்கும் என் மக்களுக்கும் பின்னதானது என்று உலகத்திற்கே உதாரணமான எங்கள் தேசியத் தலைவரது தளபதியல்லவா பரிதி... அந்த இலட்சிய வெறியின் உச்சம் பரிதியிடமும் நிறைந்தே இருந்ததில் வியப்பேதும் இல்லை.பரிதி எங்ற மாவீரன் தலைசாந்த பின்னர்... அவரை அஞ்சலிக்க வந்த மக்கள் கூட்டத்தை பிரஞ்சுப் பதிதிரிகையான 'லு பரிசியன்' ஆச்சரியத்துடன் குறிப்பிட்டது. அந்த மரியாதையும் கண்ணீரும் இன்னொரு மனிதனுக்குப் புலம்பெயர் மண்ணிலே சாத்தியம் இல்லை என்றே நம்பப்படுகின்றது.

பரிதியின் வாழ்தல் அவரை அவ்வாறு கவுரவப்படுத்தியுள்ளது. 

வாழ்ந்தால் பரிதி போல் வாழ்... மறைந்தாலும் வாழ்தலின் பூரணத்தை வழித்தடம் எல்லாம் பதித்துச் செல்... என்று அடுத்த தலைமுறைக்கும் உறைக்கும் வகையில் பரிதி அவர்களது மரணமும் வரலாற்றுப் பதிவாகிவிட்டுள்ளது.

பலமான எதிரிகளாலும் கொடூரங்கள் நிறைந்த துரோகிகளாலும் விடுதலைப் புலிகளைக் கொல்ல முடியும். புலம்பெயர் தேசங்களிலும் அது சாத்தியப்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளை வீழ்த்த முடியாது.

பரிதியின் படுகொலையும் அவரது மறைவும் விடுதலைத் தளத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். அதை எதிரிகள் கொண்டாடுவார்கள். துரோகிகள் எக்காளமிடுவார்கள். ஆனாலும் தமிழ்த் தேசியம் நிலை குலையாது. தமிழீழம் கனவாகிப் போகாது.

பரிதி என்ற மாமனிதன் கட்டிவைத்த கோட்டையில் அவருக்குப் பின்னரும் கன்னக்கோல் வைக்க முடியாத ஈனப்பட்டவர்களால் அவர் குறித்துப் பல விமர்சனங்களை எழுப்ப முடியும். அவரது தகுதிநிலை குறித்துக் கேள்விகள் எழுப்ப முடியும். ஆனால் அவர் மக்கள் மனங்களில் விட்டுச் சென்ற பதிவுகளையும் தனராத விடுதலை உணர்வுகளையும் எவனால் அழித்துவிட முடியும்? பரிதியாக வாழ்ந்து பாருங்கள்... பரிதியாக வீழ்ந்து பாருங்கள்... அந்த வாழ்தலின் அற்புதம் உங்களுக்கும் புரியும்.

விடுதலைப் புலிகள் விழ விழ எழுவார்கள்... அவர்கள் வீழ்ந்த இடத்திலிருந்து மீண்டும் உருவாகுவார்கள்... இன்னமும் வீறுகொண்டு தமிழீழ மீட்புக்காகப் போராடுவார்கள். அதை எவராலும் தடுக்க முடியாது!

- இசைப்பிரியா

 

www.eelampresse.com

இலட்சியத்திற்காக உயிரை அர்ப்பணித்த வேங்கைகளின் கதைகள் பல ஆயிரமானதற்கு அவர்களது அந்த விருப்பங்களே காரணமாகவும் இருந்தது. கல்லும் முள்ளும் அல்ல... கண்ணி வெடிகளும் எதிரியின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் குறிபார்க்கும் தளங்கள் அவர்களது விருப்பமான களங்களாக இருந்தன. பரிதியும் அந்தக் களங்களில் படை நடத்தியவர் என்பதால் அவரது துணிச்சலும் நேர்மையும் தலைவன் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் அவரது புலப்பெயர்விலும் மாற்றத்தை உருவாக்கவில்லை.

எதிரிகளும் துரோகிகளும் ஈழத்தில் மட்டுமா...? இங்கும்தான் விதைக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் பரிதி அதற்கெல்லாம் அச்சப்பட்டதே கிடையாது. நான்... என் மனைவி... என் பிள்ளைகள்... என் குடும்பம்... என்பதெல்லாம் என் தேசத்திற்கும் என் மக்களுக்கும் பின்னதானது என்று உலகத்திற்கே உதாரணமான எங்கள் தேசியத் தலைவரது தளபதியல்லவா பரிதி... அந்த இலட்சிய வெறியின் உச்சம் பரிதியிடமும் நிறைந்தே இருந்ததில் வியப்பேதும் இல்லை. 

www.eelampresse.com

 

 இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற தேவையான ஒரு கட்டுரையை தேடி எடுத்து இணைத்ததற்கு நன்றிகள் அன்பு ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.