Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுப்பிலுள்ள மாணவர்கள் தொடர்பில் - பல்கலை நிர்வாகத்தினர் இராணுத்தினர் பலாலியில் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தடுப்பிலுள்ள மாணவர்கள் தொடர்பில் - பல்கலை நிர்வாகத்தினர் இராணுத்தினர் பலாலியில் சந்திப்பு! 
[Friday, 2012-12-21 09:52:44]
 
யாழ். பல்கலைக்கழக நிரவாகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று(21.12.2012)காலை 10 மணியளவில் பலாலி படை தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பீடாதிபதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்துவதற்காகவேதாம் இச்சந்திப்பு என ஏற்பாடு செய்துள்ளதாக பல்கலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
  
எனினும் இந்தச்சந்திப்பில் தாம் கலந்துகொள்வது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் சில விரிவுரையாளர்கள் தாம் இந்தச் சந்திப்பை புறக்கணிக்கப்போவதாகவும், இராணுவத்தினருடனான இச் சந்திப்பானது மாணவர்களின் கைதினை நியாயப்படுத்துவதினை நோக்கமாக கொண்டே இராணுவத்தினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
மேலும் இச்சந்திப்பில் ஊடகவியலாளர்களினையும் கலந்து கொள்ளுமாறு இராணுவத்தினர் கேட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து இச்சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் தொடர்பில் இறுதியான முடிபு எடுக்கப்படவில்லை. எனினும் தான் கடிதம் மூலம் அனைவருக்கும் அறிவித்தள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கனவு காணவேண்டாம்; யாழ் கட்டளை தளபதி

 

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மாணவர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

 

யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் அமையும் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்

 

இதனாலே இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவே பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படும் என மாணவ்ர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது எனவே விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இல்லை என அவர்களை சந்திக்கப் போகும் போது எடுத்துக் கூறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=634181715821712921

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.