Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அதுமூடியே இருக்கட்டும் ஹத்துருசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் வருவார் என்ற கனவில் மாணவர்களை வழிநடத்தினார்கள் பிரிகேடியர்கள் சொலமன் - தர்ஸானந்- இயக்கினார்கள் - நெடியவன் - ருத்ரகுமாரன் - விநாயகம்

 

 

பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். 

 

இன்று காலை வடக்கின் யாழ் பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை அறுதியிட்டு கூறியுள்ளார மஹிந்த ஹத்துருசிங்க.

பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரத்னத்துடன் கூட்டத்தில் சமூகமளித்திருந்த ஒரு சில பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மற்றும் 4 மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர் பிரபாகரன்

 

வருவார் மீண்டும் ஈழவிடுதலைப் போராட்டத்தை நடத்துவார் என்ற கனவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களான சொலமன் தர்ஸானந் ஆகியோர் மாணவர்களை வழிநடத்திய பிரிகேடியர்கள் எனவும், இவர்களை நெடியவன் - விநாயகம் - ருத்ரகுமாரன் ஆகியோரின் கும்பல்கள் பின்னிருந்து இயக்குவதாகவும் கடுமையான தொனியில் தெரிவித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு 1983ன் பின்னான இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த குறுக்கு வெட்டு முகத்தை தெளிவுபடுத்திய போதும் அவற்றை கணக்கில் எடுக்காத அவர் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்ட 4 மாணவரின் பெற்றோர்களையும் வெளியேற்றி புனர்வாழ்வுக்கு முன்னர் மாணவரின் விடுதலை என்ற பேச்சிற்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். 

 

பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடியான அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக இராணுவத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86803/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான புனர்வாழ்வின் பின்னரே பல்கலை மாணவர்கள் விடுவிக்கப்படுவர்: ஹத்துருசிங்க

 

(சுமித்தி)

'பல்கலைக்கழக செயற்பாடுகள் நடைபெறுவதற்கும், மாணவர்களின் விடுதலைக்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எவ்வாறாயினும், நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது' என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

”கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு முற்றாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இன்று முற்பகல், பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும், கைது செய்யப்பட்டுள்ள பல்கலை மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு கருத்து வெளியிட்ட ஹத்துருசிங்க மேலும் தெரிவிக்கையில், 

'வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்ற நிபந்தனையை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

பல்கலைக்கழக செயற்பாடுகள் நடைபெறுவதற்கும், மாணவர்களின் விடுதலைக்கும், கல்விக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. 30 வருடத்திற்கு முன்னிருந்த நிலைமையை மீண்டும் கொண்டுவர தம்மால் அனுமதிக்க முடியாது. 

சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும் இம்மாணவர்கள் முயற்சி செய்தார்கள் என்ற அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்றனர். 

முற்றாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடனும் பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் கலந்துரையாடப்படும்' என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/55262-2012-12-21-09-44-41.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.