Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடம்பெயர்தோருக்கான உணவு வழங்கல் - யாழ்.மாவட்டத்தில் புதிய நடைமுறை அறிமுகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WFP-world-food-program.jpg

சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் cash/voucher (C/V) திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என உலக உணவு நிகழ்ச்சித் திட்ட அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

"யாழ்ப்பாணத்தில் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 15,000 ற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பயன்பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் அடுத்த இரு ஆண்டுகளில் 45,000 பேர் இதில் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது" என உலக உணவு திட்டத்தின் சிறிலங்காவுக்கான பதில் பிரதிநிதி மட்ஸ் பொல்வல் தெரிவித்துள்ளார். 

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் ஒரு மாதத்திற்கு 11 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சான்றுச் சிட்டை பெற்றுக் கொள்வர். இது ஆறு மாதகாலத்திற்கு பயன்படுத்தக் கூடியது. இச்சான்றுச் சிட்டைகளை வடக்கில் உள்ள 815 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் வழங்கப்படும் போது பயனாளிகளுக்கான உணவுப் பொருட்கள் வழங்கப்படும். 

இச்சிட்டை மூலம் பயனாளி ஒருவர் 21 விதமான அடிப்படை உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இதில் தானியங்கள், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணை மற்றும் சுவையூட்டிகள் என்பன உள்ளடங்கும். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது இதன் மாதிரித் திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இது விரைவில் சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். 

பாரம்பரிய உணவு வழங்கல் திட்டத்தை விட தற்போது நடைமுறையிலுள்ள C/V திட்டமானது நன்மை பயக்கக் கூடியதாகும் எனவும், சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி மக்கள் வெவ்வேறு விதமான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வல்லுனர்கள் நம்புகின்றனர். 

"நான் இந்தத் திட்டத்தை விரும்புகிறேன். தற்போது நான் எனக்கு விரும்பிய பொருட்களை வாங்க முடியும்" என அண்மையில் தனது சொந்த இடத்திற்கு திரும்பிய, யுத்தத்தால் இடம்பெயர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் இடம்பெற்ற நீண்ட பத்தாண்டு உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் இடம்பெயர்ந்த மக்களில் 440,000 பேர் வரை தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாக ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, வடக்கு பிரதேசத்தின் உணவுப் பாதுகாப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது. 2011ல் உணவு வசதிகளின்றி காணப்பட்ட 60 சதவீதமானவர்களின் எண்ணிக்கையானது தற்போது அதாவது 2012ல் 40 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அதாவது இந்த மக்களின் வறுமை நிலையானது தற்போது குறைவடைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. 

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பெரும் கடினங்களை எதிர்நோக்குவதுடன், ஏனையோரில் தங்கியிருக்க வேண்டிய நிலையில் வாழ்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

 

http://www.puthinappalakai.com/view.php?20121221107476

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.