Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றா (RAW) எனப்படும் ஆராய்ச்சிக்கும் பகுப்பாய்வுக்குமான புலனாய்வு அமைப்பு..! – மதுசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவின் வெளியகத் தகவல் சேகரிக்கும் அமைப்பு “றா” (RAW) என்ற மூன்றெழுத்தால் அறியப்படுகிறது. இந்த மூன்று எழுத்தின் விரிப்பு Research and Analysis Wing என்பதாகும். அதாவது சேகரிக்கப்பட்ட தகவலை ஆராய்ச்சி செய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பொறுப்பான அமைப்பு என்று பொருள். இந்திய நாட்டிற்கு உட்பட்ட தகவல் சேகரிக்கும் நிறுவனங்களும் வெளிநாடுகளில் தகவல் சேகரிக்கும் நிறுவனங்களும் வௌ;வேறாக இயங்குகின்றன.
 
வெளிநாடுகளில் தகவல் சேகரிக்கும் பொறுப்பு றா அமைப்பிற்குரியது. இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒட்டுமொத்தத் தேசிய நலனுக்கும் றாவின் சேவை அத்தியாவசியமானது. றா அமைப்பு செப்ரம்பர் 1968ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப் படுவதற்கு ஒரு முக்கிய உடனடிக் காரணம் இருந்தது. 1962ம் ஆண்டின் இந்திய–சீனப் போரில் இந்தியப் படைகள் அடைந்த படுதோல்விக்கு சீனப் படைகளின் பலம் பற்றிய தகவலை முன்கூட்டியே திரட்டத் தவறியதே முக்கிய காரணம்.
 
அதே போல் பாக்கிஸ்தானுடனான 1965ம் ஆண்டுப் போரிலும் எதிரி பற்றிய தகவலைத் திரட்டுவதில் இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. 1962, 1965ம் ஆண்டுப் போர்களில் தகவல் திரட்டுவதற்குப் பொறுப்பாக “ஐபீ” (IB) எனப்படும் இன்ரர்லிஜன்ஸ் பியூறோ (Intelligence Bureau) பொறுப்பாக இருந்தது. உள் நாட்டு வெளி நாட்டுத் தகவல் திரட்டும் பணிகளை ஐபீ செய்தது.
 
அதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்குப் பொறுப்பான தனியொரு அமைப்பு தேவைப்பட்டது. உலக நாடுகள் அனைத்திலும் உள்ளக வெளியகத் தகவல் திரட்டுவதற்கு வௌ;வேறு அமைப்புகள் இருக்கின்றன. இந்த ஒழுங்கைப் பின்பற்றும் தேவையும் இந்தியாவுக்கு இருந்தது.
 
மேற்கூறிய ஐபீ என்ற புலனாய்வுத் தகவல் திரட்டும் அமைப்பு இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு அது போதுமானதாக இருந்தது. றா உருவாக்கப்படுமுன் 1947 -1968 காலப்பகுதியில் ஐபீ ஒற்றை அமைப்பாகச் செயற்பட்டது.
 
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஐபீ அமைப்பின் நிர்வாகப் பொறுப்பை சஞ்சீவிப் பிள்ளை என்ற இந்தியர் பொறுப்பேற்றார். அவருடைய பணி திறம்பட அமைவதற்குப் போதுமான பயிற்றப்பட்ட அதிகாரிகள் அவர்வசம் இருக்கவில்லை. ஏனென்றால் திறமையான பிரிட்டிஷ் அதிகாரிகள் அனைவரும் தமது நாட்டிற்குச் சென்று விட்டனர்.
 
சஞ்சீவிப் பிள்ளை ஐபீயை விரிவுபடுத்த முனைந்தார். ஐக்கிய இராச்சியத்தின் எம்ஐ6 (MI6) அமைப்பின் பாணியில் செயற்பட அவர் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை. 1962ம் ஆண்டுப் போரில் தோல்வி ஏற்பட அது காரணமாகியது.
 
அந்தப் போர் காலப் பிரதமர் நேரு வெளி நாட்டுத் தகவல் சேகரிப்பிற்குப் பொறுப்பான ஒரு பிரத்தியேக அமைப்பின் தேவையை உணர்ந்தார். ஆனால் அப்படியான அமைப்பை அவர் உருவாக்கவில்லை. அவர் 1964ல் இறந்த பிறகு பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியாலும் அதைச் செய்ய முடியவில்லை. றாவை 1968ல் உருவாக்கியவர் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்.
 
இந்திரா காந்தி கேட்டதற்கு இணங்க ஐபீயின் பிரதி இயக்குநர் ஆர்.என்.காவோ (R.N.Kao, Deputy Director, Intelligence Bureau) பிரதமரிடம் ஒரு திட்ட வரைவை அளித்தார். புதிய வெளியகத் தகவல் சேகரிக்கும் பிரத்தியேக அமைப்பிற்கான வரைவாக அது அமைந்தது.
 
அதன் அடிப்படையில் றா உருவாக்கப்பட்டது. றா அமைப்பின் முதலாவது இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். அமெரிக்க சிஐஏ (CIA – Central Intelligency) அமைப்பை ஒட்டி றா அமைக்கப்பட்டது. றாவின் இயக்குநர்கள், அதிகாரிகள், முதன்மை நிர்வாகிகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இஸ்ரேயில் ஆகிய நாடுகளில் பயிற்சி பெறுகின்றனர்.
 
றா அமைப்பின் பொறுப்புக்கள் பின்வருமாறு –
 
1)  மனித வளம், தொழில்நுட்ப வளம் ஆகியவற்றின் உதவியோடு வெளிநாடுகள், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், போராட்டக் குழுக்கள், கடத்தல் கும்பல்கள், ஆயுத தயாரிப்பு மற்றும் ஆயுத வர்த்தக நிறுவனங்கள், கப்பல் போக்கு வரத்துகள் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகள் பற்றித் தகவல் சேகரித்தல்.
 
2)   அயல் நாடுகள், வெளி நாடுகளில் தேவை ஏற்படும் போது திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடுதல். உள்நாட்டுப் போருக்கு உதவுதல்.
 
3)   தேவைப்படும் போது இந்திய நலனுக்குக் குந்தகமான அமைப்புக்கள், அரசுகள் போன்றவற்றைக் கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
 
4)   இந்திய இராணுவ நடவடிக்கைக்கு முன்னோடியாக அயல் நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்குள் ஊடுருவலை மேற்கொள்ளுதல்.
 
5)   நுட்ப்பமான பிரசாரத்தின் மூலம் வெளி நாடுகளில் இந்தியாவுக்குச் சார்பான நிலைப்பாடுகளை உருவாக்குதல்.
 
6) இந்தியாவின் வெளிநாட்டுத் தூதரகங்களில் இராசதந்திர அந்தஸ்து வகித்தவாறு தகவல் சேகரிப்பும், அந்த நாட்டு உள்விவகாரங்களில் நுளைந்து இந்திய நலனைப் பாதுகாத்தல்.
 
7) றா அமைப்பின் தலைவர் இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் நாயகத்துடன் (Directorate General of Military Intelligence) இணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். அமைச்சரவைச் செயலகம் (Cabinet Secretariat) றா அமைப்பு, ஐபீ, பாதுகாப்பு புலனாய்வுத் தகவல் திரட்டும் அமைப்பு (Defence Intelligence Agency –Dia) ஆகிய மூன்றின் நடவடிக்கைகளை ஒன்றிணைக்கிறது.
 
 eelampress1@gmail.com
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.