Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவில் பயங்கர வான்வழி தாக்குதல். உணவிற்காக கியூவில் நின்றிருந்த பெண்கள்,குழந்தைகள் உள்பட 200 பேர் சாவு.

Featured Replies

சிரியாவில் நேற்று வான்வழி தாக்குதலில் உணவுக்காக கியூவில் நின்றிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாலைகளின் நடுவில் உட்கார்ந்து அலறிய வீடியோ காட்சி வெளியானதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

 

சிரியாவில் நேற்று, வான்வழியே குண்டுமழை பொழிந்து சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரட் உணவுகளை வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 200 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் காயம் அடைந்தனர்.

 

  இறந்தவர்களது உடல்கள் சாலைகளின் நடுவே, ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள், சிரியாவின் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதைப்பார்த்த உலகநாடுகள் அதிர்ச்சி அடைந்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உலக மனித உரிமை கமிஷன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய ராணுவத்திற்கு மனித உரிமை கமிஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

தாக்குதலில் மரணமடைந்த பொதுமக்களின் புகைப்படங்கள் பார்க்க....

  • கருத்துக்கள உறவுகள்

இதனை சிங்கள அரசு எம்மீது செய்திருந்தால்.. யாரும் செய்திகளில் மூச்சே விட்டிருக்க இருக்கமாட்டார்கள். மேலும் இங்குள்ள சிலர் அங்குள்ள மக்கள் இவற்றை பதிவு செய்து அனுப்பினால்.. பிண அரசியல் செய்கிறார்கள் என்றும் எழுதி இருப்பார்கள். யாழும் அதை மாற்றுக் கருத்தென்று காவி நின்று கொண்டிருக்கும். அரச பயங்கரவாதங்களுக்கு சிறீலங்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போலிக் கூக்குரலின் கீழ்.. உதவி அளித்தவர்களே இந்தக் கொலைகளுக்கும் பொறுப்பு. இந்தக் கூக்குரலே ரஷ்சியாவும் சீனாவும் உக்ரைனும் சொலவாக்கியாவும் பாகிஸ்தானும்.. ஹிந்தியாவும் இஸ்ரேலும் பிரிட்டனும் அமெரிக்காவும் ஆயுதங்களை அள்ளி வழங்கி தமிழர்களை சிங்களம் இன அழிப்புச் செய்ய உதவின.  அதையே சிரியாவில் ரஷ்சியா இப்போதும் செய்கிறது.  :(:icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.