Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எழுச்சி நிகழ்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  Germany-Anton-seithy-3-20121224-150.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராய் இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 12.14.2006 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட கொடிய நோயினால் லண்டன் மாநகரில் மரணத்தை தழுவிக்கொண்டார். தேசியத்தலைவர் அவர்கள் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு 'தேசத்தின் குரல்' என்ற அடைமொழியை வழங்கி கௌரவித்தார். அந்த வகையில் இன்று அவரின் 6 ஆம் ஆண்டு நினைவோடும் , பாரிஸ் நகரத்தில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 45 வது நாட்கள் நினைவோடும் , ஆழிப்பேரலையில் காவிச் செலப்பட்ட மக்களின் 8 வது ஆண்டு நினைவோடும் யேர்மனி பெர்லின் நகரத்தில் நினைவு வணக்க நிகழ்வு யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சுடர் ஏற்றப்பட்டு , தமிழீழ தேசிய கீதத்துடன் தேசியக்கொடியை மாவீரர், வீரவேங்கை திருமாறன் அவர்களின் சகோதரனால் ஏற்றப்பட்டது. இதனை அடுத்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் , கேணல் பரிதி மற்றும் ஆழிப்பேரலையில் காவிச் செலப்பட்ட மக்களின் நினைவுத் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் தியாக செல்வங்களுக்கு மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தி , அகவணக்கம் செலுத்தினார்கள் .

  

அதைதொடர்ந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு ஆற்றிய உன்னதமான சேவையை ஆவணமாக தொகுத்து திரையிடப்பட்டது .அக் காணொளியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் முன்னைய உரையாற்றலை கேட்டு மக்கள் கண் கலந்து நின்றார்கள். சங்கிலியன் சிலை தொடக்கம் சங்கரின் நினைவோடு மலர்ந்த கல்லறைகள் அனைத்தும் அழிக்கப்பட்டாயிற்று.கண்ணீர் மல்கி கண்டது என்ன? கையேந்தி வாழ்வதில் என்ன பயன் . இரந்து கேட்பதற்கு நாமொன்றும் இழிந்தவர் அல்ல .தோற்றுப்போனவர் எல்லாம் கௌரவத்தை கைவிட்டு துவண்டு போயிருந்தால் நேற்றோடு முடிந்திருக்கும் நிமிர்ந்தவர் வரலாறு எனும் கூற்றுக்கு இணங்க இளையோர்களால் , எழுச்சி பாடல் , நடனம் , நாடகம் , கவியரங்கம் என பல நிகழ்வுகள் அரங்கேறின. புலம் பெயர் நாடுகளில் தாயகம் நோக்கிய மக்களின் ஏக்கத்தை எடுத்துக் காட்டும் ஒரு சிறு நிகழ்வு "எதிலிகளின் பயணம்" -எனும் குறு நாடகம் நினைவு வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட மக்களுக்கு ஆழமான கருத்தை வெளிக்காட்டியது. அடுத்து எமது இனப்படுகொலையை வேற்றின மக்களிடம் கொண்டுசெல்லும் முகமாக வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen.." Massaker an Tamilen 1956-2008" எனும் தலைப்பில் மீள் வெளியிடப்பட்டது .

 

தொடர்ந்து புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது மாவீரர்களுக்காக வெறுமனே அஞ்சலியை செலுத்திவிட்டு செல்லாமால் அவர்களின் கடமையை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக 2012 ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் ,ஆவணங்களுடன் திரையில் காண்பிக்கப்பட்டது .அத்தோடு ஈழத்தமிழர் மக்கள் அவை முன்னெடுக்கும் அரசியல் வேலைத்திட்டம் சிறப்பாக இன்றைய நாட்களில் மாணவர்ளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக செய்யப்படும் அரசியல் சந்திப்புக்கள் விடையமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இறுதியாக தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்தை அனைத்து மக்களும் இணைந்து உரத்துக்கூறி "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் " பாடலுடன் நிகழ்வினை நிறைவேற்றினர்.

 

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.