Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தகைய இடர்களில் இருந்தும் மீண்டெழும் வல்லமை தமிழருக்கு உண்டு! - கூட்டமைப்பு உறுப்பினர் ரதன் உரை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எத்தகைய இடர்களில் இருந்தும் மீண்டெழும்  வல்லமை தமிழருக்கு உண்டு! - கூட்டமைப்பு உறுப்பினர் ரதன் உரை!!

 

'காலத்திற்குக் காலம் எமது வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தில் எத்தனையோ துயரமான நிகழ்வுகளை எமது தமிழினம் சந்தித்த போதிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவையும், 2009ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் புரிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் எமது இனம் மறக்கத் தயாரில்லை. இவ்வாறான இடர்களிலிருந்து மீண்டெழும் வல்லமை படைத்த இனமே தமிழினம்.'

 

- இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

 

ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்த மக்களின் எட்டாம் ஆண்டு நிகழ்வு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் நகரசபையின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்ற போது தலைமை உரை ஆற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். உயிர் நீர்த்த மக்களுக்காக விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரதன் மேலும் தெரிவித்தவை வருமாறு:

 

'இலங்கையிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு இணைந்த எமது தாயக பகுதியில்தான் ஆழிப்பேரலையின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்; பல கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன் பலர் அங்கவீனராகினர்.

 

2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலை பாதிப்பின் பின்னர் வெளிநாடுகளில் இலங்கைக்கு பெரியளவில் நிதி உதவிகள், பொருளுதவிகள் புரிந்தன. ஆயினும் அந்த உதவிகள் இங்கு ஆட்சியில் இருந்த அரசினால் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசத்தை சென்றடையவில்லை.

 

சுனாமி மீள்கட்டுமானப்பணி சார்ந்த குழுவொன்று அமைக்கப்பட்ட போதிலும் அக்குழு இனவாதிகளினால் அன்று தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் எமது மக்களுக்கு வந்தடைய வேண்டிய உதவிகள் யாவும் இல்லாமல் போனது. ஆயினும், மக்கள் தங்கள் சுய முயற்சியால் புலம்பெயர்ந்தவர்களின் உதவியாலும் ஓரளவேனும் மீண்டெழுந்தனர்.

 

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது தாயகத்தில் நடப்பவையெல்லாம் அதர்ம வழி சார்ந்த விடயங்கள். திட்டமிட்ட காணி அபகரிப்புக்கள், புத்தர் சிலை நிறுவுதல், இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை, கைது செய்தல் எனப் பல அக்கிரமங்கள் தொடர்கின்றன.

 

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு மிகப்பெரும் அதிர்ச்சிப்பொறி காத்திருக்கிறது. எமது மக்களின் துயரமான வாழ்விற்கும் துன்பகரமான சூழல்களும் இல்லாமல் போக விடுதலை நோக்கிய பயணங்கள் சிறந்து விளங்கும் என நம்புகின்றோம்.

 

இயற்கை அனர்த்தம் என்ற அடிப்படையில் 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தமும் செயற்கை பேரவலம் என்ற அடிப்படையில் 2009 முள்ளிவாய்க்கால் அவலமும் என்றும் தமிழர்களின் மனங்களில் மறக்க முடியாத சம்பவங்களே ஆகும். எனவே, இவ்வாறான இடர்களிலிருந்து எம்மை நாமே ஆறுதல் படுத்தி புதிய பாதையில் புதிய சிந்தனையுடன் பயணிப்போம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் ரதன் மேலும் தெரிவித்தார்.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=d7b8df39-b437-4500-82d1-a523d0a62647

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு மிகப்பெரும் அதிர்ச்சிப்பொறி காத்திருக்கிறது. எமது மக்களின் துயரமான வாழ்விற்கும் துன்பகரமான சூழல்களும் இல்லாமல் போக விடுதலை நோக்கிய பயணங்கள் சிறந்து விளங்கும் என நம்புகின்றோம்.

 

அவர்களின் நமபிக்கைக்கு புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும் உதவவேண்டும். பரப்புரைகளை அயராமல் முன்னெடுக்க வேண்டும்.

 

இல்லாவிட்டால், நம்பிக்கை வெறும் நம்பிக்கையாகவே இருந்துவிடும்.

 

ஐ.நா.மனித உரிமைகள் சபை - பங்குனி 2013: http://www.yarl.com/forum3/index.php?showtopic=112504

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.