Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னுடைய அப்பாவி தமிழ்ச் சகோதரனின் மரணம்:தமிழ் சசி,

Featured Replies

மனிதாபிமான அரசியல்

ஈழத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் தொடர் கதை பலக் காலங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதும், அவ்வாறு நிகழும் பொழுதெல்லாம் அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் தொடங்கி உலகின் பல ஊடகங்களும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக நடக்கும் கதையாகி விட்டது.

அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்கு கொல்லப்படும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் உயிர்களை விட மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே நான் கருதுகிறேன். இத்தகைய செயல்களை புலிகள் செய்தாலும், வேறு எந்த அமைப்பு செய்தாலும் அது படு பயங்கரமான "பயங்கரவாத", "மனித உரிமை" மீறலாகவே நான் பார்க்கிறேன்.

அவ்வாறே அங்கு கொல்லப்படும் என்னுடைய அப்பாவி தமிழ்ச் சகோதரனின் மரணத்தையும் நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சகத் தமிழன் பாதிக்கப்படும் பொழுது எனக்கு சற்று அதிகமான உணர்ச்சி ஏற்படுகிறது.

இதனைச் செய்யும் இனவாதிகளின் வெறியை விட அதனை மூடிமறைக்கும் ஊடகங்களை அதனை விட வெறிப் பிடித்த இனவெறியர்களாகவே நான் பார்க்கிறேன். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை வெளியிட "தனி செய்தியாளரை" கொண்டிருக்கும் ஹிந்து இதனை ஒரு செய்தியாக கூட வெளியிடவில்லை என்பது ஹிந்து எந்தளவுக்கு ஒரு "இனவெறிப்" பத்திரிக்கையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. புலிகள் ஆளுமையில் இருக்கும் பகுதிகள் மீது இலங்கை அரசு குண்டு வீசிய பொழுது எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டதையும், இடம்பெயர நேரிட்டதையும் குறித்து BBC போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலைமையில், Sri Lanka defends air strikes என்று அந்த குண்டு வீசுதலை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்ட ஹிந்து, தற்பொழுது எந்தச் செய்தியையும் வெளியிடாமலேயே இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துகிறது. ஹிந்து என்றில்லாமல் இன்று இருக்கும் ஊடகங்கள் அனைத்துமே "வெள்ளைத் தோல்" அல்லாத ஆப்ரிக்க, ஆசிய சாமானிய மக்களுக்கு வழங்கும் மதிப்பு இவ்வாறு தான் உள்ளது.

புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று கூறும் சர்வதேச நாடுகள், இலங்கை அரசின் இத்தகைய தொடர் வன்முறைகளை, Amnesty போன்ற மனித உரிமை அமைப்புகள் கூட வெளிப்படையாக கண்டித்த மனித உரிமை மீறல்களை எந்தக் கோணத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை பார்க்கும் பொழுது எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்த சர்வதேச நாடுகள் தான் தங்களை மனித உரிமை காவலர்களாக சித்தரித்து கொண்டிருக்கின்றன. புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை அரசின் "பயங்கரவாத செயல்களுக்கு" இராணுவ உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன.

ஈழத்தில் சமீபகாலங்களில் நடந்து வரும் படுகொலைகள் மிக மோசமான இனவாதம் என்பது மட்டுமல்ல. ஊடகங்கள் வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும் இந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுவது மிக மோசமான இனவாத வன்முறையாக, பேதமாக நான் கருதுகிறேன். அங்கு நடத்தப்படும் சாமானிய மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் மிகக் கொடூரமாக நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஒரூ பீதியை ஈழத் தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சியை சிறீலங்கா இராணுவம் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.

இரண்டு வயது கூட நிரம்பாத ஒரு குழந்தையை, தான் தமிழன் என்றோ, சிங்களன் என்றோ அல்லது ஏதோ ஒரு எழுவு பிடித்த இனம் என்றோ கூட அறியாத ஒரு குழந்தையை குத்தி கொடூரமாய் கொலை செய்யும் படுமோசமான இனவாத வெறிக்கு ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து இலக்காகி கொண்டிருக்கின்றனர். நேற்று நடந்த படுகொலை படங்களை பார்க்க முடியாமல் வேகமாக அந்தப் பக்கங்களில் இருந்து வெளியேறி விட்டேன். இதனை பார்க்கும் மனவலிமை கூட எனக்கு இல்லை. ஆனால் இத்தகைய பல நிகழ்வுகளுடன் தங்கள் வாழ்க்கையை நடத்தும் பல ஈழத் தமிழர்களின் வாழ்க்கை எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.

வேதனை என்பதே ஒரு சுயவிளம்பரம் தான். இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும், வேதனை மட்டுமே நம்மிடம் இருந்து வெளிப்படுவதும் வெறும் இயலாமையாகத் தான் எனக்கு தெரிகிறது.

தெருவொன்றில் பயணித்தபோதோ

தூங்கும்போதோ

கனிந்து பொழியும் கனவுகளில்

முழுகும் போதோ

காணாமற் போனீர்கள்.

உறவுகளின் இழைகள் ஈய்ந்து

அறுபட்ட புண்களிடை

துயரொழுகத் துயரொழுக

சிறகுகள் கிழியுற்ற வலுவீனராய்

கொலைக்கருவி முனைகளாற் கொழுவுண்டு

கடத்தப்பட்டீர்கள்.

உங்களுடைய ஆண்குறிகள்

பிதுக்கிச் சிதைக்கப்பட்டிருக்கலாம்

திறக்க மறுத்த பெண்குறிகள்

திரண்ட முனைகளின்

மூர்க்கத் துளாவல்களால்

பிளக்கப்பட்டிருக்கலாம்

வித வித வதைகளால் விகாரித்து

சிறையிருளில் நெரியுண்டு

மரித்திருக்கலாம் நீங்கள்.

பெருவெட்டையொன்றின் ஆழமோ

மலக்குழிகளோ

பாழடைந்த கிணறுகளோ

இன்னும் என்னவென்னவோ

உங்களை விழுங்கி

மெளனித்திருக்கலாம்.

உங்கள் வீடுகளின் வெற்றிடங்கள்

இனி யாரால் நிரப்பப்பட முடியும்

அந்நியக் கொடூரர்களின் பிடுங்குதலில்

உங்களை இழந்தோரின்

புண்களை ஆற்றும் தகமை

யாருக்குண்டு

துயர்களின் உராய்வுகள் பெருக

அவர்களிடையே மூளும்

மையத்தழல்களைத் தணிக்கும் வலு

யாருக்கு வரக்கூடும்?-அமரதாஸ்

(நன்றி: செம்மணி, http://elanko.net/pathivu/?p=185)

Pathivu Toolbar ©2005thamizmanam.com

தமிழ் சசி, 9:31 AM,

8 மறுமொழிகள்:

Sasee

Nan oru eelathamilan "emmakuu aluvathukuu kaneerumm illaii irrupathukkuu edamumm illai"

ellapathukuuu onrum illai emathuu savaa pettikalai thaveera Anonymous, at 9:42 AM என்ன கொடுமை இது...

/*நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும், வேதனை மட்டுமே நம்மிடம் இருந்து வெளிப்படுவதும் வெறும் இயலாமையாகத் தான் எனக்கு தெரிகிறது*/

இதே எண்ணம் தான் எனக்கும். ஆனால் ஊடகங்களின் மௌனம் தான் இதில் அநியாயம்.

..aadhi Anonymous, at 10:06 AM இப்படியான கொலைகளை முன்னர் புலிகள் எதிர்கொண்டவிதம் கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று சிங்களவர்களுக்கு அதே வலியை கொடுத்துத்தான். இப்போது இவர்கள் அதனைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் புலிகள் அதே வழிமுறையைக் கையாண்டால் வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுக்க எல்லா ஊடகங்களும் நாடுகளும் பின்னிற்கப்போவதில்லை. புலிகள் இதை அவதானமாக கையாளவேண்டும். Anonymous, at 10:13 AM அண்மையில் நடந்த வங்காலைப்படுகொலையின் பயங்கரத்தை இணையத்தளங்களுடாக பார்த்தபோது சிங்களக்காடையரின் கொலைவெறியையும் வக்கிரபுத்தியையும் புரிந்துகொள்ளமுடிகிறது. எந்தவொரு ஆத்திரமூட்டல் சம்பவங்கள் நடக்காதநிலையில் இவ்வாறு கொலைவெறியோடு அலையும் இவர்களை என்ன செய்யமுடியும். இந்த சிறுவர்களை இப்படி கொல்லும் இவர்களை எந்தவகையில் சேர்ப்பது?

அதனைவிட நீங்கள் சொல்வதுபோல இவ்வாறான செய்திகளை வேண்டுமென்றே மறைப்பவர்களும் இனவெறி கொண்டவர்களே.

இதற்கு முன்தினம் கோப்பாயில் இந்துக்குருக்கள் ஒருவரின் உடல் இராணுவ முகாமுக்கு அருகில் புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து அப்பகுதிக்கு சென்று அப்பகுதிமக்கள் தோண்டி எடுத்தனர். அப்போது மேலும் இரண்டு சடலங்கள் அப்பகுதியில் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டுகொண்டனர். இதன்போது அப்பணியில் ஈடுபட்ட கிராமஅலுவலர் அடுத்தநாள் வீதியில் வைத்து சுடப்பட்டுஇருக்கிறார். தமிழ்வாணன், at 10:48 AM The gruesome pictures remind me of those we saw in early 80s. The complete black out of the news of these atrocities on unarmed civilians in Indian/Tamil media, and stoic silence of Tamil Nadu leaders are appalling.

"We will have to repent in this generation not merely for the hateful words and actions of the bad people but for the appalling silence of the good people."

- Rev. Martin Luther King, Jr. மு. சுந்தரமூர்த்தி, at 9:38 PM பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் நோர்வே அமைச்சர் எரிக்சொல்கெய்ம் "மன்னாரில் நடந்த படுகொலை சம்பவத்தின் படங்களை இணையத்தளத்தில் பார்த்தபோது தான் மிகவும் அதிர்ச்;சி அடைந்ததாக கூறியிருக்கிறார்.

உண்மையில் சிங்கள அரசின் கொடூரமுகத்தை சர்வதேசம் இனங்கண்டிருக்கிறது. ஆனால் புலிகளின் ஆயுதபோராட்டம் உலகநாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில்தான் அமெரிக்கா கூட சிறிலங்கா அரசு;ககு உதவுகிறது.

அதேபோல்தான் இந்தியாவில் பகத்சிங்கை மறக்கடித்துவிட்டு அண்ணல் காந்திக்கு மட்டும் இந்தியசுதந்திரபோராட்டத்தில

  • தொடங்கியவர்

பிரபல மலையாள-ஆங்கில எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான ஓ. வி. விஜயன் மாத்ருபூமியில் எழுதிய ஒரு தொடர் கட்டுரையில் ஈழப்பிரச்சினை பற்றி எழுதிய கருத்தின் சாராம்சம் (கேரள நண்பர் ஒருவர் மொழிபெயர்த்துச் சொன்ன வரிகள் என்னுடைய நினைவிலிருந்து எழுதுகிறேன்):

//ஈழப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரான செயல் பாடுகளையே எப்பொழுதும் கொண்டிருக்கும். ஏனெனில் ஈழப்பிரச்சினை என்பது ஒருவிதத்தில் ஆரிய - திராவிடர் பிரச்சினை. மத்திய அரசை ஆளும் வர்க்கம் ஆரியர்கள், எனவே அவர்களுடைய இனமாகிய சிங்கள இனத்தின் இனவெறியையும், வன்முறையையும் விட அந்த வன்முறையிலிருந்து தம்மை பாது காத்துக்கொள்ள உருவாகும் தமிழ் இனவாதமும், வன்முறையும்தான் இந்திய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் உறுத்தும். அப்பொழுது தமிழர்களின் வன்முறையை ஒழிக்கிறேன் என்ற போர்வையில் சிங்களப் பேரினவாதத்துக்கு இந்திய அரசு துணை போகும்.//

அப்பொழுது எனக்கு அது ஒரு மிகைப் படுத்தப் பட்ட அல்லது வீண் பயங்கொண்ட சிந்தனையாகப் புலப்பட்டது. அவர் எழுதியது 1986 என்று நினைக்கிறேன், ஈPKF இந்தியா போகும் முன்பு. இரு சிங்களக் கட்சிகளும் பல ஒப்பந்தங்களைக் குழி தோண்டி புதைத்து தமிழர்களின் மேல் பிரிவினை வாதத்தை திணித்து அரசு வன்முறையின் மூலம் போராளி இயக்கங்களை உருவாக்கி விட்டிருந்த வேளையில் தமிழர்களுடைய நியாயங்களை இந்திய அரசு புரிந்து உதவ முன் வரும் என்று எல்லாத் தமிழரும் நம்பிய காலம்.

இந்திய அரசைப் பற்றிய ஓ. வி. விஜயனின் தீர்க்கதரிசனம் என்றோ நிரூபணமான உண்மை என்பதை சொல்லத் தேவையில்லை. இரட்டை வேடம் போடும் பத்திரிகைகளையும் இப்படி பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் வந்து விட்டது என நினைக்கிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.