Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமதரப்பு நிலையில் இருந்து புலிகளை அரசு நிராகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமதரப்பு நிலையில் இருந்து

புலிகளை அரசு நிராகரிப்பு!

நோர்வேக்கு எழுதும் கடிதங்களில் பிரபாவுக்கு

சமதையாக கையெழுத்திடாராம் ஜனாதிபதி

அரசுக்குச் சமதையான ஒரு தரப்பாக விடுதலைப் புலிகள் கருதப்படுவதை முற்றாக நிராகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது. இந்த விடயத்தை அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும் அது தயாராகிவிட்டது.

இந்த விடயத்தில் இலங்கை அரசின் எதிர்ப்பை உடனடியாகத் தெரிவிக்கும் முகமாக, சமாதான முயற்சிகளின் அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு எழுதும் கடிதங்களில் இனிமேல் கையெழுத்திடுவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய் துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை நேற்றுத் தெரிவித்தன. எனினும், அரசின் இந்த முடிவு போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மாறானது என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

2002ஆம் ஆண்டில் அப்போதைய ஐக் கிய தேசிய முன்னணி அரசு விடுதலைப் புலி களுடன் போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப் பந்தத்தைச் செய்துகொண்டது. அரசுக்கு சம தையான தரப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட விடுதலைப் புலிகள் சம்மதித்தனர். அதன் அடிப்படையிலேயே அரசு சார்பில் பிரதம ராக இருந்தவரான ரணில் விக்கிரமசிங்கவும் விடுதலைப் புலிகள் சார்பில் அதன் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆனால், தற்போது விடுதலைப் புலிகளைச் சமதரப்பாக நடத்தும் விடயத்தை எதிர்ப்பது என ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு திட்டவட்டமாகத் தீர்மானித்துள்ளது.

அதனை வெளிப்படுத்தும் முதல் படியாக, சமாதானத்தின் மீதான பற்றுறுதியை வெளிப் படுத்துமாறு கோரி நோர்வே அனுப்பிய ஐந்து அம்சக் கடிதத்தில் இரு தரப்பினரையும் சம தரப்புக்களாகக் கருதியமைக்கு ஆட்சேபனை தெரிவித்து எழுதவுள்ள கடிதத்திலும், நோர்வே யின் கடிதத்திற்கான பதில் கடிதத்திலும் கை யெழுத்திடுவதில்லை என்று ஜனாதிபதி தீர் மானித்துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை நேற்று "உதயன்'க்கு உறுதிப்படுத்தின.

""நோர்வே அனுப்பிய கடிதத்திற்கு விடுத லைப் புலிகளின் சார்பில் அனுப்பப்படும் பதில் கடிதத்தில் அதன் தலைவர் பிரபாகரனே கையெழுத்திடுவார். அதேபோன்று அரசு சார்பில் அனுப்பப்படும் பதில் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டாரானால் அவரும் பிரபாகரனும் சம அந்தஸ்துடையவர்களாகக் கருதப்படுவார்கள் என்ற விடயத்தை ஜனாதி பதிக்கு நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி எவ்வாறு ஓர் அமைப்பின் தலைவருக்கு சமதையாக மதிக் கப்பட முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்தே நோர் வேக்கான குறித்த இரு கடிதங்களிலும் தாம் கையெழுத்திடுவதில்லை என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.'' என்று அந்த வட்டாரங் கள் தெரிவித்தன.

சமாதான முயற்சிகள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில் அரசின் இத்தகைய முடிவு நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகின் றது. தம்மைச் சமதரப்பாக நோக்குவதில் இருந்து அரசு விலகுவதை விடுதலைப் புலி கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கைக்கு உதவும் இணைத் தலைமை களின் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்ற போது விடுதலைப் புலிகளுக்கு அதில் பங் கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. 6 சுற்றுச் சமாதானப் பேச்சுக்களில் இருந்து விடுதலைப் புலிகள் விலகிக்கொண்டபோது, வாஷிங்டன் கூட்டத்தில் சமதரப்பாகத் தாங்கள் மதிக்கப்படாமையும் அதற்கு அரசு உடந்தை யாக இருந்தமையும் காரணங்கள் எனப் புலி கள் சுட்டிக்காட்டியிருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேக்கு மகிந்த பதில் அனுப்பமாட்டார்?

இலங்கை அமைதி முயற்சிகளின் எதிர்காலம் தொடர்பாக நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அனுப்பி வைத்த கடிதத்துக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதில் அனுப்ப மாட்டார் என்று கூறப்படுகிறது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சமதரப்பாகக் கருதி எரிக் சொல்ஹெய்ம் கடிதம் அனுபிப்பியமை குறித்து மகிந்த ராஜபக்ச அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் அதை வெளிப்படுத்தும் விதமாக இத்தகைய முடிவை அவர் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

இத்தகவலை தன்னைச் சந்தித்த சிறிலங்கா அரசாங்கப் பேச்சுக் குழுவினரிடம் மகிந்த தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோருக்கு இலங்கை அமைதி முயற்சிகளின் எதிர்காலம் மற்றும் கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பு குறித்து எதிர்வரும் 20 ஆம் நாளுக்குள் பதிலளிக்குமாறு எரிக் சொல்ஹெய்ம் கடிதம் அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்தில் அமைதி முயற்சிகள் தொடர்பாக 5 கேள்விகளும் எழுதப்பட்டிருந்தது.

"நோர்வே அனுப்பியிருக்கும் கடிதத்துக்கு மகிந்த ராஜபக்ச பதில் அனுப்ப மாட்டார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அல்லது வேறு ஒரு குழு பதில் கடிதம் அனுப்பும்" என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறியுள்ளார்.

"நாங்கள் பலவீனமான சிறிய நாடாக இருந்தாலும் கௌரவமான நாடு. ஒரு அரச தலைவருக்கு மற்றொரு நாடு ஒரு கடிதத்தை அனுப்பும் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச மரபுகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் பாலித கோகென்ன சுட்டிக்காட்டினார்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம தரப்பை நிராகரித்து

போரை நோக்கிய நகர்வுகள்

ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையிலான சமாதான முயற்சிகளில் அரசுக் குச் சமதையான ஒரு தரப்பாக புலிகளை ஏற்க முடி யாது என்று இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

சமாதான முயற்சிகள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இன்றைய நிலையில், ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மோசமான நிலைமைக்குள் நாட் டைத் தள்ளிவிடப் போகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஏற்கனவே ஆட்டம் கண்டுள்ள சமாதானத்தின் அடித்தளம் தற்போது மோசமான கட்டத்தை அடைந்துள்ளது.

சமாதானத்தின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்துமாறுகோரி, அனுசரணையாளர் பணியை மேற்கொண்டுவரும் நோர்வே ஐந்து கேள்விகள் அடங்கிய கடிதம் ஒன்றை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் அனுப்பி இருந் தது.நோர்வேயைப் பொறுத்தவரை முக்கியமான கடிதங்கள் இவை. நோர்வே தனது அனுசரணைப் பணியை தொடருமா என்பது கூட இந்த இரு தலைவர்களும் அனுப்பவுள்ள பதில் கடிதத்திலேயே தங்கி இருக்கிறது.

ஆனால் நோர்வே தனக்கும் விடுதலைப்புலி கள் தலைவருக்கும்அனுப்பிய கடிதங்கள் மூலம் புலிகளை அரசுடன் சமமாக மதித்துவிட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நோர்வேக்கு காட்டமாகக் கடிதம் ஒன்றையும் அரசு அனுப்ப இருக்கிறது.

புலிகளுடன் இனி சம தரப்பு நிலையைப் பேணு வதில்லை என்ற முடிவுக்கு ஏற்ப நோர்வே அனுப்பிய ஐந்து கேள்விகளுக்கான பதில் கடிதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திடமாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் தாயகத்தில் அப்பாவி மக்கள் கொலைசெய்யப்படுவது தொடர்கிறது.படையினரின் ஆதர வுடன் இயங்கும் ஒட்டுக்குழுக்களினதும் படையி னரின் ஆழ ஊடுருவும் பிரிவினதும் நடவடிக்கை கள் அதிகரித்து வருகின்றன. வடக்குகிழக்கு மயான பூமியாக மாறி வருகிறது. மீண்டும் சமாதானப் பேச்சு களை ஆரம்பிப்பது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவாறு புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையிலான விரிசல்கள் நெருங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிலையில்தான் ஸ்ரீலங்கா அரசு மற்றொரு காய் நகர்த்தலை மேற்கொண்டிருக்கிறது. போரை நோக்கிய நகர்வுகளே அவை.

2002 பெப்ரவரியில் அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசு விடுதலைப் புலிகளு டன் போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது.

அரசுக்கு சமதையான தரப்பு என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட புலிகள் சம்மதித்தார்கள். சமதரப்பு நிலையைப் பேணும் விதத்திலேயே ஸ்ரீலங்கா அரசு சார்பாக அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் விடுதலைப்புலிகள் சார்பில் தேசியத்தலைவர் வே. பிரபாகரனும் அந்த ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் அரச தரப்புக்கும் புலிகள் தரப்புக்கும் இடையில் நடை பெற்ற ஆறு சுற்றுப் பேச்சுக்களிலும் இந்த சம தரப்பு நிலை பேணப்பட்டது. சந்திரிக்கா ஜனாதி பதியாக இருந்த காலத்தில் ஆழிப்பேரலை அனர்த்த பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட சமயமும் சமதரப்பு நிலை பேணப்பட்டது.

வடக்கு கிழக்கில் 70 சதவீதமான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடற்படை, தரைப்படை, விமானப்படை, பொலீஸ் படை, நீதி நிர்வாகத்துறை, சட்ட வாக்கத்துறை, பொருண்மியத்துறை என்று ஒரு தனி நாட்டுக்கு உரிய அனைத்துக்கட்டமைப்புகளையும் புலிகள் கொண்டு இயங்குகின்றனர். இவை மட்டும் அல்ல. தனி வானொலிச் சேவை, தனி தொலைக்காட்சிச் சேவை யும் உண்டு.

ஆகவே,ராஜபக்ஷ தலைமையிலான அரசு சம தரப்பு நிலையைப் பேணுவதில்லை என்று எடுத்த தீர்மானம் சமாதான முயற்சிகளுக்கு வைக்கப்பட்ட வேட்டு ஆகும். இவை போரை நோக்கிய நகர் வுகளே!

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.