Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் கடந்த ஞானம் வந்துதான் என்ன பயன்?

Featured Replies

"மாதர் தம்மை இழிவு செய்யும் மூடர்களை அழித்திடுவோம்" என உணர்ச்சி பொங்கப் பாடிய பாரதியாரின் பாரத தேசத்தில் இன்று வீதிகளில் வைத்தே பெண்கள் காட்டுமிராட்டித்தனமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன பாருங்கோ...

 

 

டில்லியில் ஓடும் பஸ்ஸில் பல்கலைக்கழக மாணவி ஒருத்தி மிக வக்கிரக் குணம் கொண்ட காமுகர்களால் படுபயங்கரமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமை இந்திய நாட்டில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்குப் பாருங்கோ... ஓடும் பஸ்ஸில் நடத்தப்பட்ட மிருகத்தனமான இக்கொடூர வன்புணர்ச்சி அந்த நாட்டிலுள்ள ஒட்டு மொத்த மக்களையும் கதிகலங்க வைத்துள்ளது.


இந்தியாவின் உள்நாட்டுச் சட்ட திட்டங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. உள்ளூர் சட்ட திட்டங்களில் அதிகார வர்க்கத்தினரின் ஆதிக்கம் எவ்வளவுக்கு உள்ளதென்பது இச் சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது பாருங்கோ... இந்தியத் தலைநகர் டில்லியின் நடைபெற்றிருக்கும் இச் சம்பவத்தையடுத்து காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது பாருங்கோ....

 

 

இந்த மிருகத்தனமான பாலியல் குற்றத்தைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும் அவர்களை விடுவிக்கும் எண்ணத்தோடு பல உயர் பொலிஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகள் செயற்படத் தொடங்கியிருக்கினமாம். குற்றவாளிகளே தமது குற்றத்தை ஒப்புக் கொண்டு எங்களுக்கு மரண தண்டனை வழங்குங்கள் என நீதிமன்றில் கேட்டுள்ளார்கள். இந்திய அரசாங்கம் விசாரணை என்ற பெயரில் இந்த வழக்கை இழுத்தடிக்கப் போகிறது என நாட்டு மக்கள் அச்சப்படுகிறார்கள். .


பாலியல் வல்லுறவு செய்வோருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என நடிகர் கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார். இதற்கு முற்போக்குச் சிந்தனைவாதிகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகினம். ஆனால் பாருங்கோ, நான் கமலஹாசனின் கருத்துக்கே உடன்படுகிறேன். ஏனெண்டால் இந்த மாதிரியான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மரண தண்டனையைக் கொடுத்து உடனேயே அவர்களை இந்த உலகத்திலிருந்து அனுப்பி விடக்கூடாது பாருங்கோ... அவர்களும் இந்த உலகத்திலிருந்து தான் செய்த குற்றத்தை நினைத்து நினைத்து அணு அணுவாகச் சாக வேணும்.

 

ஆயுள் முழுவதும் தனிமையிலிருந்து விரகதாபத்துடன் வாழ் நாட்களைக் கழிக்க வேணும். அப்பதான் அவையள் தாம் செய்த கொடுமையான குற்றச் செயலை நினைத்துப் பார்க்க முடியும். இவ்வளவு மோசமான பாலியல் பலாத்காரத்தைச் செய்தவர்களை உடனே கொல்ல வேண்டும் என மனித மனங்கள் எண்ணும். அது அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தி விட்டு விடுவதுடன் முடிந்து விடும்.


அத்தோடு அந்த சம்பவமும் இந்த உலகத்திலிருந்து மறைந்து விடும். இது குற்றத்தை குறைக்க வழி செய்யுமா...? குற்றம் செய்தவன் இரத்தக் கண்ணீர் வடிக்கும் வரை இந்த உலகத்திலேயே துன்பங்களை அனுபவிக்க விடவேண்டும் பாருங்கோ....

 

இதுபோல எத்தனையோ பல பாலியல் கொடுமைகள் எங்கட நாட்டிலயும் நடந்து வருது பாருங்கோ... வாராவாரம் பொலிஸ் வெளியிடும் அறிக்கைகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது பாலியல் குற்றங்கள்தான் பாருங்கோ... செய்தித் தளங்களைத் திறந்தால் முன்னுக்கு நிற்பது 60 வயதுப் பாட்டி முதல் 12 வயது சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவச் செய்திகள்தான் பாருங்கோ...

யுத்த காலத்தில் நடந்தேறும் இப்படியான சம்பவங்கள் யுத்தம் முடிந்து சமாதான காலம் என்ற இந்த காலப் பகுதியில் நடப்பதுதான் மிகக் கொடுமையான துன்பியல் நிகழ்வு. யுத்த காலத்தில் கட்டுக்கோப்பாக இருந்த தமிழ் மக்களின் சமூகக் கட்டமைப்புக்கள் யு.பி.க்குப் பின் (யுத்தத்திற்குப் பின்) தலைகீழாகவே மாறிவிட்டன.

 

பலம் குறைந்த சட்டங்களால் இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லைப் பாருங்கோ.... இது தான் இந்த நாட்டில் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள வழி விடுகிறது. ஒரு குற்றம் நடந்தால் அந்தக் குற்றத்தை ஒத்த மேலும் ஓரிரு குற்றங்கள் அந்தக் காலப் பகுதியிலேயே வெவ்வேறு இடங்களில் நடந்தேறுவது இப்ப வழக்கமாகிப்போச்சுப் பாருங்கோ....


இப்படியான யுத்தச் செயல்களைப் புரிபவர்களுக்கு கழுத்தி கயிறு ஏற்றி தூக்கிக் கொல்வது இறுதியான தண்டனையாக இருக்காது. அது மனிதனின் ஆத்திரத்தின் உடனடி வெளிப்பாடு. இவ்வாறானவர்களை வாழவிட்டு அணுஅணுவாகக் கொல்வதே சிறந்த தண்டனையாகும்.

 

சரி, இப்ப எங்கட நாட்டில நடக்கிற சில சங்கதிகளைச் சொல்லுகிறேன் கேளுங்கோ. ஒருகாலத்தில உலக நாடுகளை எல்லாம் கைப்பற்றி வந்த நெப்போலியன் உலகத்திற்கே அரசனாகி விடும் நிலைக்கு வந்து விட்டான். திடீரென அவனின் ஆட்சியில் வீழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொரு நாடாக இழந்து பின்னோக்கிச் சென்றான்.


மாவீரனாக விளங்கிய நெப்போலியனின் இந்தப் பின்னடைவுகளுக்குக் காரணமாக இருந்தது அவன், இறுதி நாட்களில் தன் கூடவே வைத்திருந்த சுயநலவாதிகளும் முட்டாள்களுமே ஆகும். வெற்றிக் கழிப்பில் சென்ற அவனுக்கு இந்த முட்டாள்கள் சொல்லும் அனைத்தும் வேதவாக்காகவே இருந்தன. இதனால் அவர்கள் சொல்லும் அனைத்தையும் கண்மூடிக் கொண்டே நம்பத் தொடங்கி விட்டான். இறுதியில் ஒவ்வொன்றாக அனைத்து நாடுகளையும் இழந்து தோல்வியடைந்தான்.

 

இதுபோலத்தான் பாருங்கோ, எங்கட நாட்டிலும் பல பேர் சுயநலவாதிகளையும் முட்டாள்களையும் நம்பியிருக்கிறார்கள். பெரிய பெரிய அதிகாரத்தில் இருப்போரின் பலவீனங்களைத் தெரிந்து கொண்ட சுயநலவாதிகள் அவர்களை தமது வலைகளுள்ளே விழுத்தி விடுகின்றனர். இப்படியான ஒரு நிலைமைதான் எங்கட யாழ்ப்பாண அமைச்சருக்கு ஏற்பட்டு வருகுது பாருங்கோ... அவருக்கு இருக்கும் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியிருக்கு.


யாழ்ப்பாணத்தில் அரச நியமனங்களை விழா வைத்து வழங்கி வரும் இவரின் அரசியல் திட்டம் இப்ப ஆளுநரின் கைக்கு இடம் மாறிவிட்டது பாருங்கோ.... இதனால் இவருக்கு இருந்த மக்களுக்கு உதவி செய்வதான இந்தத் திட்டமும் கைமாறிப் போச்சுப் பாருங்கோ... வட மாகாண சபைத் தேர்தலில் குறியாக இருக்கும் இவர், தைப்பொங்கலுக்கு முதல் நாளும் ஒரு பகுதியினருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறாராம். பார்ப்போம் இது நடக்குமா எண்டு சலித்துக் கொள்கிறார்கள் அந்த நியமனத்தைப் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருப்பவர்கள்.

 

 

பெரிய பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கண்மூடிக்கொண்டு சுயநலவாதிகளின், முட்டாள்களின் பேச்சுக்களை நம்புவதுதான் அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. இதை அவர்கள் உடனே அறிந்து கொள்ளமாட்டார்கள். நெப்போலியனைப் போல் இறுதியில் ஆரம்ப இடத்திலேயே போய் நிற்கும் போதுதான் உணருவார்கள் பாருங்கோ.... இந்த காலம் கடந்த ஞானம் வந்து என்னதான் பயன்.

 

http://www.yarlmann.lk/viewsingle.php?id=1373

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.