Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஷிராணியை விசாரிக்க தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை"

Featured Replies

இலங்கையின் தலைமை நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என, இலங்கை அரசியல் சாசனத்துக்கு நாட்டின் உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கத்தின் மூலமாக, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க தொடுத்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.

 

நீதி பரிபாலனை அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பினால் மட்டுமே நீதிபதி எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என்று விளக்கமளித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழிமுறை பின்பற்றப்படவில்லை என்றால் நாட்டுடைய மொத்த நீதித்துறையின் அதிகாரத்துக்குமே பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

 

நிர்வாக உத்தரவு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவே தலைமை நீதிபதியை விசாரித்துள்ளது என்றும், நிர்வாக உத்தரவு என்பது சட்டம் ஆகாது என்ற சூழலில், தலைமை நீதிபதியை விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நீதி பரிபாலனை அதிகாரங்கள் இல்லை என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது பல்வேறு முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் மீது கண்டன பதவி நீக்க நடைமுறை ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்திருந்தது.

 

இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த பெரும்பாலும் ஆளுங்கூட்டணி உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, நீதிபதிக்கெதிராக ஒரு சில குற்றச்சாட்டுகளை உறுதிசெய்திருந்தது.
ஆனால் தெரிவுக்குழுவின் விசாரணையும் முடிவும் நீதித்துறைக்கெதிரான அச்சுறுத்தல் என்ற விமர்சனங்கள் இருந்துவருகின்றன.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130103_courtonpsgshirani.shtml

  • தொடங்கியவர்

நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெறமாட்டாது: அரசாங்கம்

 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

 

 

இலங்கைக்கு எதிரான சில வெளிநாட்டு சக்திகள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் அரசாங்கத்தை கலக்கமடையச் செய்யாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக 117 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதேவேளை பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் திட்டமில்லை எனவும் தெரிவித்தார்.

 

மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2373

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

U-Turn அடிக்க போகினம் போலை.

  • தொடங்கியவர்

சட்டமா அதிபரை திங்களன்று ஆஜராகுமாறு அழைப்பு

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுத்தொடர்பில் நடைபெறவிருக்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்கு உதவிபுரிவதற்காக ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு வருமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  நேற்று அறிவித்தல் அனுப்பியுள்ளது.

 

ஒரு நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையின் செயன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்துள்ள வியாக்கியானத்தை தொடர்ந்து இந்த விடயத்தின் அவசர தன்மை பற்றி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட கருத்தினை தொடர்ந்தே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுமம் வாதப்பிரதிவாதங்ளை ஜனவரி மாதம் 7 ஆம் திகதிவரையிலும் ஒத்திவைத்தது.


நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்த எதிர்;க்கட்சிகளின் அங்கத்தவர்கள் நான்கு பேரும் அந்த குழுவிலிருந்து வெளிநடப்பு செய்ததையடுத்து அந்த தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அரசாங்க உறுப்பினர்கள் ஏழுபேர்; மட்டுமே செயற்படுவது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் வலுவற்றதாகும். என மனுதாரரான பிரதம நீதியரசர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56134-2013-01-03-15-44-02.html

 

  • கருத்துக்கள உறவுகள்
ரீட் மனுவுக்கு எதிரான இரண்டு இடையீட்டு மனுக்களும் நிராகரிப்பு

 

index32.jpgபிரதம  நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவுக்கு எதிரான இரண்டு இடையீட்டு மனுக்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை நிராகரித்துவிட்டது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுவொன்று நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

 

பிரதம நீதியரசரின் ரீட் மனுவை செல்லுப்படியற்றதாக்க வேண்டும் எனக்கோரியே இந்த இடையீட்டு மனுவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்க சம்மேளனம் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்திருந்தது.

இந்த ரீட் மனுவுக்கு எதிராக சட்டத்தரணி ஒருவரும் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

 

தனக்கு எதிராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை வலுவற்றதாக்குவதற்கான கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி பிரதம நீதியரசரினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு எதிராகவே இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 

அந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அந்த மனுக்களை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

 
  • கருத்துக்கள உறவுகள்


8826575111227998535anura-yapa-A.jpg

தொலைபேசி சாவடியில் இருந்து அழைப்பெடுத்தே அமைச்சரை அச்சுறுத்தியுள்ளனர்

 

பிரதம நீதியரசர் விடயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் வீதியில் உள்ள தொலைபேசி சாவடி (telephone booth) ஒன்றில் இருந்து அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த தொலைபேசி சாவடி எது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். 

ஷிராணி விடயத்தில் தலையிட வேண்டாம் என தனது மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து யாரோ அச்சுறுத்தியதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணையை விசாரிக்கவென அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு இவரே தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

(அத தெரண - தமிழ்)

மஞ்சுள திலகரத்தினாவின் ஆதரவாளர்கள் மந்திரி பிரியதர்சன யாப்பாவை மிரட்டினார்களா? தீர விசாரிக்கப்படவேண்டும். பீரியட்! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.