Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருதரப்பு சமநிலையை ஏற்காவிட்டால் அந்நிலையை உருவாக்குவோம்

Featured Replies

இருதரப்பு சமநிலையை ஏற்காவிட்டால் அந்நிலையை உருவாக்குவோம்: சு.ப.தமிழ்ச்செல்வன்

[புதன்கிழமை, 14 யூன் 2006, 16:27 ஈழம்] [ம.சேரமான்]

இருதரப்பு சமநிலையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்காவிட்டால் அந்நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

நோர்வேக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தமிழீழ சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உள்ளடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் கிளிநொச்சியை வந்தடைந்தனர்.

தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம், தளபதி வீமன், புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி உட்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சென்று வரவேற்றனர்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்:

நோர்வே அரசின் அழைப்பை ஏற்று அதற்கு மதிப்பு கொடுக்கும் முகமாகத்தான் நாங்கள் சென்றிருந்தோம்.

எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடுகளையும் சில முக்கியமான தீர்மானங்களையும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதுதான் எமது பயணத்தின் நோக்கம். எமது பயணத்தின் நோக்கத்தை நிறைவு செய்து திரும்பியிருக்கிறோம்.

எமது பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று சொல்ல முடியாது. எமது நிலைப்பாடுகளை நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் தெரியப்படுத்தவே சென்றோம்.

இந்தப் பயணத்தை அவர்கள் தங்களுக்குச் சாதகமான ஒரு சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அதற்கு இணங்கவில்லை.

எங்கள் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற போதும் எமது பிரதேசங்கள் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையிலும் பேச்சுக்களை நடத்துவதற்காக நாங்கள் நோர்வே செல்லவில்லை.

சிறிலங்கா அரசாங்கத் தூதுக் குழுவினருடன் பேசும் நடத்தும் சூழல் இன்று இல்லை. பேச்சுவார்த்தைக்கான உகந்த சூழலை உருவாக்காமல் அரசாங்கத் தரப்போடு நேரடிப் பேச்சுக்களை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது.

இதை தெட்டத் தெளிவாக நோர்வே அனுசரணையாளர்களுக்கு தெரிவித்துள்ளோம்.

நோர்வேயில் நாங்கள் நிற்கும்போது குழந்தைகள், மக்கள் என வயது வேறுபாடின்றி கொல்லப்பட்டனர்.

எங்களது போராளிகள், தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கே ஒரு யுத்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தம், அமைதி முயற்சிகள் அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளது.

நோர்வேக்கு நாங்கள் செல்வதற்கான காரணத்தை விளக்கியிருந்த போதும் கூட எப்படியாவது ஒரு பேச்சுவார்த்தையை நடத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று நோர்வே முனைந்தது. ஆனால் அந்த முயற்சிக்கு நாங்கள் இடம்கொடுக்கவில்லை.

எம்முன் உள்ள முட்டுக்கட்டைகள், தடைகள் நீக்கப்படாமல் நாங்கள் பேச்சுக்குச் செல்ல மாட்டோம்.

ஐரோப்பியத் தடைக்குப் பின்னால் எம்மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உத்தியைக் கையாள்கின்றனர். இத்தகைய அழுத்தங்களைத் தருவதன் மூலம் தமிழர் தரப்பானது பணியும் நிலையில் இல்லை.

நோர்வேத் தரப்பானது இருதரப்பினருக்கும் அனுப்பியுள்ள 5 கேள்விகளுடன் எமது தேசியத் தலைவருடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர்தான் முடிவெடுக்கப்படும்.

அர்த்தமற்ற அழுத்தங்கள் தமிழர் தரப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒருபோதும் அடிபணியச் செய்துவிட முடியாது.

நியாயமான நீதியான அணுகுமுறைகளும் நடுநிலையான செயற்பாடுகளும் எமது மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய முன்னெடுப்புகளும்தான் தமிழர் தரப்பை சமரச முயற்சிகளுக்கு கொண்டு செல்லும்.

நோர்வேக்கு அதிகாரமற்ற-அனுபவமற்ற- நிதானமற்ற- சமரச முயற்சிகளுக்குப் பக்குவமற்ற ஒரு குழுவை சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் அனுப்பி வைத்திருந்தனர்.

அவர்கள் அரை நாளுடன் ஓடிவிட்டனர். இவ்வளவு கால சமரச முயற்சிகளில் ஒரு அநாகரீகமான செயற்பாடு இது. அதுபற்றி எங்களுக்கு பிரச்சனையில்லை. எங்கள் பணியை நாங்கள் முடித்துவிட்டோம்.

அமைதி முயற்சிகளை சீர்குலைத்து எம்மீது போரைத் திணிப்பதற்கான செயற்பாடுகளையே சிறிலங்கா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

நாங்கள் சமரச முயற்சிகளை விரும்பினாலும் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு கொடிய யுத்தத்தை- இனப்படுகொலையை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். இதை நோர்வேயில் நாம் அம்பலப்படுத்தினோம்.

கடந்த 4 வருட காலத்தில் எமது தலைமைப்பீடம் மேற்கொண்ட நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கியமான அறிக்கையை நாங்கள் நோர்வேயில் வெளியிட்டோம். அதேபோல் இப்போது நாம் எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியுள்ளோம்.

நோர்வேயைப் பொறுத்தவரை இருதரப்பையும் பேச்சு மேசையில் இருத்தி நற்பெயரை அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் நோர்வேயிடம் பேச்சு மேசையில் எங்களை இருத்துவதை விட்டு விட்டு தடைகளை நீக்குவதற்கு முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகாலத்தில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்ட எதனையுமே சிறிலங்கா அரசாங்கம் செய்யாதிருப்பதுதான் இன்றைக்குப் பிரச்சனையே. இன்று இந்த உச்சகட்டத்தை அடைந்த நிலையிலும் அது செய்யப்படவில்லை. ஆகவே சிறிலங்கா அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அப்படியான ஒரு நிலையில் இல்லை.

இன்று நாங்கள் விமான நிலையதிற்கு வந்த போது நீண்ட நேரம் எம்மை காத்திருக்க வைத்து சிரமப்படுத்தி அநாகரீகமாக நடந்துகொண்டனர்.

இப்படியான செயற்பாடுகள் எல்லாம் இனி சமாதான முயற்சிகள் நடைபெற உதவாது.

இருதரப்பு சமநிலையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காவிட்டால் நாங்கள் அந்த நிலையை உருவாக்குவோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

http://www.eelampage.com/?cn=26850

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.