Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் 125 சிறார் கடத்தல்

Featured Replies

மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் 125 சிறார் கடத்தல்

மட்டக்களப்பு மாங்கேணிப் பிரதேசத்தில் நேற்று காலை சிறிலங்கா இராணுவத்தினரும், மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரும் சேர்ந்து திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர். இச் சுற்றிவளைப்பின் போது பாம்படி என்னும் கிராமத்தில் 14 வயதுக்குட்பட்ட 15 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு இளைஞர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை என்னும் இடத்தில் நேற்று இரவு 30 இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இச் செயற்பாடு தொடர்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் கண்டனக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன் இன்று காலை மட்டக்களப்பு புதூர், திமிலைதீவு பிரதேசத்தினை இராணுவத்தினரும், பொலிசாரும், மற்றும் விமானப் படையினரும் இணைந்து திடீர் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர். இத் தேடுதல் நடவடிக்கையின் போது ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டு ஈழநாதம்.

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் 125 சிறார் கடத்தல்

மட்டக்களப்பில் கடந்த இரு நாட்களில் மொத்தம் 125 சிறார்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராகிய கருணா குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர்.

இந்நடவடிக்கைகளின் போது துணை இராணுவக் குழுவினரையும் அழைத்துக் கொண்டு செல்லுகின்றனர். அக்குழுவினர் வயது குறைந்த சிறார்களைத் தாக்கி கடத்திச் சென்று பயிற்சி அளித்து வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளின் போது படையினரால் கைது செய்யப்படும் இளைஞர்களும் துணை இராணுவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

வாழைச்சேனை பகுதியில் பேத்தாளை,, விநாயகபுரம், கண்ணகிபுரம், பட்டியடிச்சேனை மற்றும் கல்குடாவில் 75-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரானில் இன்று காலை 27 சிறார்களும் சந்திவெளியில் 23 சிறார்களும் கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறார் அனைவரும் பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள். இந்த சிறார்களை வாகன இலக்கத் தகடு இல்லாத வெள்ளை வானில் கடத்திச்ச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் 14 முதல் 19 வயது வரையிலான 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3.30 வரையிலான தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கைது மற்றும் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக வாழைச்சேனை சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடத்தப்பட்ட 9 சிறார் விவரம்:

அமலேந்திரன் லோகாந்திரன் (வயது 14)

மகேஸ்வரன் சதீஸ்வரன் (வயது 16)

வேல்முருகு புவிராஜ் (வயது17)

காத்தமுத்து ராமேஸ்வரன் (வயது 19)

கிருஸ்ணபிள்ளை புவனேந்திரன் (வயது 15)

சதாசிவம் செல்வநாயகம் (வயது 17)

மாணிக்கம் ஞானசேகரன் (வயது 18)

நாகேஸ்வரன் சிறிதரன் (வயது 16)

திருமலை-மட்டக்களப்பு வீதியில் வாகரைக்குச் செல்லும் வழியில் மாங்கேணி உள்ளது.

மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து கருணா குழு செயற்பட்டு வருகின்றனர்.

புதினம்.

சமாதன காலத்தைல் புலிகள் வயது குறைந்தவர்களை சேர்க்கிறார்கள் என்று கினத்து தவளை மாதிரி கத்தினார்கள் இப்போது என்ன செய்கிறார்கள்??????

யுனிசெப் நித்திரை போல இருக்கு அதுதான் அறிக்கை ஒண்டையும் காணேல்லை

  • தொடங்கியவர்

யுனிசெப். கண்துடைப்பு எலலாம் நித்திரை இல்லை நித்திரை மாதிரி நடிக்கிறாங்கள்.

இனி நாளைக்கு கொஞ்ச பேரை வெளியில் விடுவாங்கள். பிறகு சிங்கள பத்திரிகை புலிகளிடம் இருந்து சிறார்கள் தப்பி இராணுவத்திடம் சரணடைவு என்று செய்திவெளியிடும்.

கொழும்புக் கடற்கரையில் நித்திரை கொண்ட(நடிச்ச) யுனிசெப் ஓடிவந்து அறிக்கைவிடும். :twisted: :twisted:

இதுதான் இப்ப நெடுக நடக்குது.

இப்ப வெய்யில் காலம் தானே மனைவி மாருடன் லீவுல போட்டினம் பாருங்கள் வருவினம் ஒரு லிஸ்ட் கொண்டு யார் யார் கடத்தப்படவை என்று :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.