Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழுத்தம் மூலம் தமிழர் தரப்பை அடிபணிய வைக்க முடிந்ததா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தம் மூலம் தமிழர் தரப்பை அடிபணிய வைக்க முடிந்ததா?

நோர்வே சந்திப்புக்களை முடித்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நாடு திரும்பிய கையோடு பலரும் எதிர்பார்த்தபடி இலங்கைத் தீவில் வன்முறை மோசமாக வெடித்தி ருக்கின்றது.

தீவிரமடைந்து வரும் வன்முறைகள், தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் மென்தீவிர யுத்தத்தை ஒரு முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வைக்கப் போகின்றன என்பதற்குக் கட்டியம் கூறும் நிகழ்வுகள் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

கள யதார்த்த நிலைகளை நிலைமைகளை கவனத்தில் எடுக் காமல் இவ்விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்புகள் கையாள்வதே நாடு இத்தகைய மோசமான கட்டத்தை நோக்கி நகர்வதற்கான முக் கிய காரணமாகும்.

தமது இனத்தின் இருப்புக்காகவும், வாழ்வியல் உரிமைகளுக்கா கவும் முதலில் சாத்வீக முறையிலும் பின்னர் இப்போது ஆயுதப் புரட்சி வழியிலும் போராட்டம் நடத்தி வரும் தமிழர் தரப்பின் அடிப் படை மன ஓட்டங்களை தமது அபிலாஷைகளை அடைவதில் அவர்களுக்கு உள்ள பற்றுறுதியை விடுதலை வேணவாவுடன் கூடிய அவர்களின் திடசங்கற்பத்தை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் தென்னிலங்கைச் சிங்கள அரசும் அந்த அரசின் சமாதான விரோத செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சர்வதேச சமூகத்தின் வலுவுள்ள சக்திகளும் மேற்கொண்ட கையாண்ட தவறான அணுகு முறைகளே இன்றைய இக்கட்டுக்கும், சிக்கலுக்கும் முக்கிய காரணங்களாகும்.

ஒஸ்லோ சந்திப்பு முயற்சிகள் பலனளிக்காமல் போனமைக்கும் கூட இந்த அடிப்படைதான் காரணமாகும்.

அமைதி முயற்சிகள் பயனுள்ள திசையில் முன்னெடுக்கப்பட வேண்டுமானால் அவற்றுக்குள்ள பிரதான தடை களையப்பட வேண் டும். அது என்ன வகையான தடை வழிமறிப்பு என்பதை இப்பத்தியில் ஏற்கனவே திரும்பத் திரும்ப நாம் சுட்டிக் காட்டி வந்தோம். அதையே இப்போது ஒஸ்லோ சந்திப்பை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனும் விளக்கமாக விஸ்தாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைமையை அச்சுறுத்தல் மூலம் அடி பணிய வைக்கவே முடியாது என்பதை திரும்பத் திரும்ப இப்பகுதியில் குறிப்பிட்டுக் காட்டியிருந்தோம்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியத் துருப்புகள் அமைதிப் படை என்ற பெயரில் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற போது விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பின் முதுகையே முறித்து நின்றபோது கூட, தமது கொள்கை நிலைப்பாட்டில் தளராத விடுதலைப் புலிகளின் தலைமையை சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாமல் கையாள முற்படுவது குறித்து இப்பத்தியில் விசனமும், ஆச்சரியமும் தெரிவித்திருந்தோம்.

உத்தேச ஐரோப்பிய ஒன்றியத் தடை, உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகளின் கடுமையான நிலைப்பாடு என்ற கத்திகளைப் புலிகளின் தலைக்கு மேலே கட்டித் தொங்க விட்டுக்கொண்டு, அந்த மிரட்டல்களின் பெயரில் அமைதி முயற்சிகளை அழுத்தம் போட்டு முன்நகர்த்த முயல்வீர்களாயின் தோற்றுப் போவீர்கள் என்ப தைக் கடந்த மாத இறுதிவரை தெளிவாக வெளிப்படுத்தி வந்தோம். அழுத்தத்துக்கு அடிபணியவே மாட்டார் பிரபாகரன் என்பதை அப்பட்டமாக எடுத்து விளக்கியிருந்தோம்.

இப்போது, ஒஸ்லோ சந்திப்புக்களை புலிகளின் பிரதிநிதிகள் கையாண்ட முறைமையைக் கண்டு மலைத்து, விசனித்து, அதிருப்தி நிலைக்கு உள்ளாகியிருக்கும் தரப்புகளுக்கு நாம் குறிப்பிட்டு வந்த மேற்படி விடயங்கள் தற்சமயம் புரிய ஆரம்பித்திருக்கும் என நம்பலாம்; எதிர்பார்க்கலாம்.

ஒஸ்லோவிலிருந்து மீண்ட பின்னர் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துகளும் இதனையே உறுதிப்படுத்துகின்றன.

""அர்த்தமற்ற வகையிலான தடைகளாலோ அல்லது முரட்டுத் தனமான அழுத்தங்களாலோ தமிழர் தரப்பை புலிகளை அடிபணிய வைத்துவிட முடியாது. நியாயமான, நீதியான அணுகுமுறைகளும் நடுநிலையான செயற்பாடுகளும் தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய முன்னெடுப்புகளுமே புலிகளின் தலைமையை தமிழர் தரப்பை சமரச நிலைக்கு வழிப்படுத்தும்.''

என்று தமது பேட்டியில் தெரிவித்திருக்கிறார் தமிழ்ச்செல்வன்.

ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னர் நோர்வேத் தரப்பினர் புலிகள் மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிக்கும் உத்தியைக் கையாளுகின்றார்களோ என்ற சந்தேகம் தங்களுக்கு எழுந்திருப்பதையும் இந்தப் பேட்டியில் தமிழ்ச்செல்வன் சூசகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட தரப்புகளான சர்வதேச சமூகமாகட்டும் அல்லது அனுசரணைத் தரப்பான நோர்வேயாகட்டும் அல்லது தமிழர்களை அடக்கி ஆளும் சிங்கள அரசாகட்டும் அவை அமைதி முயற்சிகளை ஆக்கபூர்வமான திசையில் நகர்த்த விரும்பினால் முதலில் தமிழர் தரப்பை அழுத்தம் அச்சுறுத்தல் போட்டு அடிபணிய வைக்கும் தமது கனவுலகத் திட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும்.

ஒருபுறம் அப்பாவித் தமிழ் மக்களும் தமது போராளிகளும் அமைதிக் காலத்தின் பெயரால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் மறுபுறம் அந்தப் படுகொலைகளுக்குக் காரணமான இலங்கை அரசுத் தரப்போடு புலிகளின் தலைமை கைலாகு கொடுத்து, ஒன்றாக அமர்ந்திருந்து பேசும் வாய்ப்பே இல்லை என்பதையும், அப்படிப் பேசுவதற்கு சாம, பேத, தான, தண்ட வழிகளில் அழுத்தம் போடுவதை விடுத்து, பேச்சுக்கான முயற்சிகளுக்கான உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துமாறு தென்னிலங்கை அரசுக்கு வற்புறுத் தல் கொடுப்பதே இன்றைய நிலையில் சரியான நடவடிக்கையும், உத்தியுமாகும் என்பதையும் தரப்புகள் உணர்ந்து கொள்வது நல்லது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.