Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி.

Featured Replies

இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நான்கு விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் குக் 75 ரன்களும், பெல் 85 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.

 

 

 

326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் யுவராஜ்சிங் 61 ரன்களும், சுரேஷ் ரெய்னா 50 ரன்களும் எடுத்தனர். மிக அற்புதமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகள் எடுத்த JC Tredwell ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 

போட்டியின் மிக அற்புதமான படங்கள், மற்றும் முழு ஸ்கோர் விவரங்கள் பார்க்க....

Edited by easyjobs

Indian-cricketers-1-336_93.jpg

 

கொச்சி: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி கொச்சியில் நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி "பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் டிண்டா நீக்கப்பட்டு, ஷமி அகமது வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் பிரஸ்னனுக்கு பதில் கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தார்.
இந்திய அணிக்கு காம்பிர் (9), ரகானே (4) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. யுவராஜ் சிங் 32, விராத் கோஹ்லி 37 சற்று ஆறுதல் தந்தனர். ரெய்னா (55), தோனி (72), ஜடேஜா (61) அரைசதம் அடித்தனர். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது. 
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பெல் (1), குக் (17), பீட்டர்சன் (42), ரூட் (36) என, யாரும் நிலைக்கவில்லை. பின் வரிசையில் மார்கன், வோக்ஸ், ஸ்டீவன் ஆகியோர் "டக் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி 36 ஓவரில் 158 ரன்னுக்கு சுருண்டு, 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர், அஷ்வின் தலா 3, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு ஒரு ஆறுதல்  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் பரிசு  :mellow:

ராஞ்சி: ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச தீர்மானித்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ரூட் 39 ரன்களும், பெல், பிரஸ்னன் ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும், அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் பின்னர் 156 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரராக வந்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். காம்பீருடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். இந்தியா 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காம்பீர் 33 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் கோஹ்லி அரைசதமடித்தார். அதிடியாக விளையாடிய யுவராஜ் சிங் 30 ரன்னில் போல்டானார். கோஹ்லியும் தோனியும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இந்தியஅணி 28.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629651

 ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.இந்தியா-இங்கிலந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிகவும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கியது.டாஸ் ஜெயித்த இந்திய அணியினர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியினரால் இந்திய அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 155 ரன்களை மட்டுமே எடுத்தனர்.இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தார். 3 பேர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். இந்தியவீரர் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இசாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். புவனேஸ்குமார், ஷாமி அகமது, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்திய அணிக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதுகேப்டன் தோனி முதல் முறையாக தனது சொந்த ஊரில் நடைபெறும் போட்டியில் விளையாடினார் என்பதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு உருவானது. கடந்த சில போட்டிகளில், தோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருப்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் இங்கிலாந்தை வீழ்த்தியது தோனி தலைமையிலான இந்திய அணி. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 156 ரன்களை 28.1 ஓவரில் எளிதாக அடித்து வெற்றி பெற்றனர்.முதலில் பேட் செய்த கவுதம் கம்பீர் 53 பந்தில் 4 பவுண்ட்ரிகளை அடித்து 33 ரன்களை எடுத்தார். பின்னர் ட்ரட்வெல்லின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு முன்னதாக ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் 4 பந்துகளில் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் களம் இறங்கிய விராட் கோஹ்லி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 79 பந்துகளில் 77 ரன்களை எடுத்தார். இதில் 2 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். அவருடன் ஜோடியாக ஆடியாக யுவராஜ் சிங் 21 பந்துகளில் 30 ரன்களை அதிரடியாக குவித்தார். 6 பவுண்டரிகளை விரட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினால் ஆனால் அவரும் ட்ரெட்வெல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.அவருக்குப்பின்னர் வந்த தோனி கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார். 12 பந்துகளில் 10 ரன்களை எடுத்த தோனி தன்பங்குக்கு 2 பவுண்டரிகளை விளாசினார். இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 156 ரன்களை எளிதில் எட்டியது. 28.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இங்கிலந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2க்கு1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.