Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை படையெடுப்பு மீண்டும் தோல்வி. அழகிரி அப்செட்.

Featured Replies

ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர், அதற்கான தேர்தல் வந்தால், நானே அவர் பெயரை முன்மொழிவேன் என்று கருணா​நிதி அறிவித்தது, தி.மு.க. வட்டாரத்தை உற்சாகம் அடையவைத்து இருக்கிறது.

'பொதுக் குழுவில் தனிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைத் தால், தி.மு.கழகத்தின் தலைவராக ஸ்டாலினைத்தான் முன் மொழிவேன்’ என்று கருணாநிதி சொன்னது தற்​செயலானதா, திட்டமிட்டதா... என்பதுதான் அனைவர் மனதையும் அரித்துக் கொண்டு இருந்தது. 6-ம் தேதி காலையில் அந்தப் பேட்டியை முடித்துவிட்டு கருணாநிதி வீட்டுக்குப் போனபோது அவரது மகள் செல்வி வாசலில் நின்று வரவேற்றுக் கைகொடுத்தார். 'எல்லாப் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வெச்சுட்டீங்கப்பா’ என்பது அவருடைய கருத்து. அதன்பிறகு, தன்னைப் பார்க்க வந்தவர்கள் அனைவரிடமும் 'நான் சொன்​னது சரிதானய்யா?’ என்ற தொனியில் கருணாநிதி கேட்டுள்ளார். தான் ஏதாவது முடிவு எடுத்து அறிவித்தால், அதை அனைவரும் ஏற்றாக வேண்டும் என்பது மாதிரியான விவாதங்களைக் கிளப்புவது கருணாநிதியின் வாடிக்கை. இந்த நிலையில்தான் வீரமணியின் அறிக்கை வெளியானது. அதைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்து இருக்கிறார் கருணாநிதி!''

 

 

''வீரமணி தனது அறிக்கையில் கருணாநிதியின் முடிவைப் பலமாக வரவேற்று, ஸ்டாலினையும் ஏகத்துக்கும் பாராட்டி இருந்தார். 'தி.மு.கழகத்தின் தலைவராக ஸ்டாலினை முன்மொழிவேன் என்ற கலைஞரின் அறிவிப்பு நாட்டுக்கு அளிக்கப்பட்ட செப்பேடு- சிலாசாசனம்’ என்கிறது வீரமணியின் அறிக்கை. அதை உடனடியாக முரசொலிக்கு அனுப்பிய கருணாநிதி, 'முக்கியத்துவம் கொடுத்துப் போடுங்க’ என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகுதான் கருணாநிதி தனது அறிவிப்பில் உறுதியாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸும்  கோபண்ணாவும் கருணாநிதியை திடீரெனச் சந்தித்தனர். 'நீங்கள் எடுத்த முடிவு திராவிட இயக்கத்தின் எதிர்காலத்துக்கு நல்லது’ என்று கோபண்ணா சொல்ல... 'நேரம் காலம் பார்க்காமல் அலைகிறார்... உழைக்கிறார்... இனிமேல் எல்லா​வற்றையும் ஸ்டாலின்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். 8-ம் தேதி அன்று கருணாநிதிக்கு முன்னால் ஒரு தொழிற்சங்கப் பஞ்சாயத்து வந்துள்ளது. தொ.மு.ச. பேரவையில் உள்ள இருவருக்குமான தனிப்பட்ட பிரச்னை அது. அதில் நடுநாயகமாக கருணாநிதிதான் உட்கார்ந்து இருந்துள்ளார். 'ரிடையர்டு ஆக வேண் டியதுதானய்யா.... நானே ஆகப்போறேன்ல’ என்று போகிறபோக்கில் கமென்ட் அடித்தாராம் கரு ணாநிதி. ஒருவிதமான ரிலாக்ஸ் மூடுக்கு கருணாநிதி வந்து விட்டார் என்பதற்கு உதாரணமாக இதைச் சொல்கிறார்கள் கட்சியில்!''

 

 

 

''அழகிரிக்குத்தான்  ஆத்திரம் இன்னமும் அடங்க வில்லை. 4 மற்றும் 5-ம் தேதிகளில் கருணா​நிதியைச் சந்திக்க அவர் மதுரையில் இருந்து வந்து சென்னையில் தங்கி விரக்தியாக வெளி யேறியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  மதுரைக்குப் போனவருக்கு இருப்பு கொள்ளவில்லை. இந்த மாதிரி ஏதாவது அறிவித்தால், அழகிரியைத் திருப்திப்படுத்துவது மாதிரி ஏதாவது ஒன்றைக் கருணாநிதி செய்வார். அந்த இயல்புக்கு மாறாக தன்னைப் புறக்கணித்தது, பார்க்க மறுத்தது, ஏதாவது தகவல் சொல்லி விடாதது ஆகியவை அழகிரி மனதைப் பாதித்தது. இதற்கு என்ன ரியாக்ஷன் காட்டுவது என்றும் அழகிரிக்குப் புரியவில்லை. ஏதோ தனித்து விடப்பட்டதாக உணர்ந்தார். அவருக்கு இன்று இருக்கும் இரண்டு ஆறுதல்கள்... மன்னனும் மூர்த்தியும். 'தலைவரைப் போய்ப் பாருங்கள். பிரச்னை சரியாகிவிடும்’ என்றுதான் சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். கோபப்பட்டு நின்றால் சமாதானப்படுத்த யாரும் வர மாட்டார்கள் என்பதே நிலைமை என்பதால், சென்னைக்கு மீண்டும் வர அழகிரி திட்டமிட்டார். அவருக்கு மொத்த வினையே மதுரை ஏர்போர்ட், சென்னை ஏர்போர்ட் ஆகிய இரண்டும்தான். இங்கே ஏதாவது கமென்ட் அடித்தாக வேண்டிய சிக்கல் இருப்பதால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுரையில் இருந்து காரில் சென்னை வரத் திட்டமிட்டார் அழகிரி. அவரோடு மன்னன், மூர்த்தி, மகன் துரை தயாநிதி ஆகிய மூவரும் வந்துள்ளனர். வழக்கம்போல நண்பரின் தி.நகர் ஹோட்டலில் தங்கினார். கருணாநிதியைப் பார்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கோபாலபுரத்தில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.''

 

 

''அழகிரி தன்னை அறிவாலயத்திலோ, கோபால​புரத்திலோ வந்து சந்திக்கலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டதால், கருணாநிதிக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அழகிரியின் வருகை பத்திரிகையாளர்களுக்கும் தெரிந்து இருந்ததால், அவர்கள் கேமராக்களோடு கோபாலபுரத்தை முற்றுகையிட்டனர். அவர்களைப் பார்த்த கருணாநிதி, 'அப்பாவை மகன் வந்து சந்திப்பது அதிசயமா?’ என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு சி.ஐ.டி. காலனி வீட்டுக்குப் போய்விட்டார். அங்கு அழகிரி வர மாட்டார், வந்தாலும் ஃப்ரீயாகப் பேச முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். இப்போதும் தனக்கு வாசல் அடைக்கப்பட்டது அழகிரியை அப்செட் ஆக்கியது. அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு கருணாநிதியின் அக்காள் மகன் அமிர்தம் திடீரெனப் பிரசன்னம் ஆனார். அவர்கள் இருவரும் நள்ளிரவைத் தொடும் வரை பேசிக்கொண்டு இருந்தார்களாம்.''

 

 

 

''பேச்சின் சாராம்சம் இதுதான்... 'ஸ்டாலின்தான் அடுத்தத் தலைவர் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது? யாரைக் கேட்டு அறிவித்தார்? எதற்கெடுத்தாலும் பொதுக்குழு, செயற்குழு என்று சொல்பவர் இதை மட்டும் தனிப்பட்ட முறையில் எப்படிச் சொன்னார்? ஸ்டாலினுடன் இருக்கும் ஆட்கள் நல்லவர்கள் இல்லை. அவர்கள் செய்யும் தவறுகளை நான் கண்டித்தேன். அதனால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஸ்டாலினால் கட்சியை நடத்த முடியாது. அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவரை ஏமாற்றி விடுவார்கள். எனக்கு உயிரைக் கொடுக்க ஒரு பட்டாளம் இருக்கிறது. அவ்வளவு நல்லது செய்துள்ளேன். அவர் யாருக்கும் எதையும் செய்துகொடுப்பது இல்லை’ -இப்படிப்பட்ட புகாராக இருக்கிறதாம் அழகிரியின் எண்ணங்கள். மறுநாளாவது கருணாநிதியைச் சந்திப்பார் அழகிரி என்று நினைத்தனர். ஆனால், அதுவும் தோல்வியாகி, மதுரைப் படையெடுப்பு பணால் ஆனது. மன்னனையும் மூர்த்தியையும் மதுரைக்குப் போகச் சொன்னவர், துரை தயாநிதியை சென்னையிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, டெல்லி விமானத்தைப் பிடித்தார் அழகிரி!''

 

 

ஸ்டாலின் வாரத்துக்கு இரண்டு ஊர்கள் போனவர் இனி நான்கு ஊர்களுக்குச் செல்லலாம். அழகிரி - அமிர்தம் சந்திப்பு நடந்தபோது அவர் கோவையை நோக்கி விமானத்தில் போய்க்கொண்டு இருந்தார். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர் கூட்டம் மறுநாள் நடந்தது. 'நமக்கு என்றைக்கும் தலைவர் கலைஞரே! ஓய்வுக்கே ஓய்வு கொடுத்துவிட்டு தொடர்ந்து உழைக்கும் தலைவர் கலைஞர், என் பெயரை முன்மொழிவேன் என்றது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெருமை’ என்று சுருக்கமாகப் பேசி அடக்கமாகக் காட்டிக்​கொண்டார்.

 

 

இந்த செய்தி குறித்த படங்கள் பார்க்க....

 

 

நன்றி ஜூனியர் விகடன்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகிரி ஏற்கெனவே.... அவுட். இனி, அப்செற்றாகி... பிரயோசனமில்லை. தம்பி, ஸ்டாலினுடன்... கருணாநிதியின் கொள்கைகளை, கனிமொழியின் ஆதரவோடு கொண்டு சென்றால்.... டமிழ் நாட்டுக்கு விடிவு பிற‌க்கும். அறிஞர் அண்ணாவின், செல்லத்ததம்பி கருணா, பெரியாரின் பேரன் அவருக்கும்... ஓய்வு வேணுமில்லையா.... பாவம் அவர், எத்தனை... தமிழ் நாட்டுக்காக, சக்கர நாற்காலியிலில்... ஒடிக் கொண்டே இருக்க வேணும். இதுக்குள்ளை.... இழவு விழுந்த ஈழத்துக்கும், உண்ணாவிரதமிருந்த உன்னத புருசர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.