Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைகளும் சிங்கள ஊடகங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலைகளும் சிங்கள ஊடகங்களும்

யாழ் செம்மணியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி,புங்குடுதீவு தர்சினி படுகொலையினை,நாவலப்பிட்டி உமாதேவி படுகொலையினை, திருகோணமலை மாணவர் படுகொலையினை அல்லைப்பிட்டி பொதுமக்கள் படுகொலையினை, வடமுனையில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களை மற்றும் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் வங்காலை தோமஸ்புரியில் இடம்பெற்ற படுகொலையென வட,கிழக்கில் இடம்பெறும் படுகொலைகளை வகைதொகையின்றி அடுக்கிக்கொண்டே போகலாம்.

அவற்றை இன்று ஊடகங்களும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டனர். சம்பவமொன்றினைப் பின் தொடர்ந்து செல்லுதலே ஊடகத்தின் பொறுப்பு. இச்சம்பவங்களினூடாக அவை அக்கடமைகளிலிருந்தும் தவறிவிட்டன.எது எவ்வாறிருப்பனும் இச்சம்பவங்களின் கொலையாளிகள் இதுவரை கண்டு படிக்கப்படவுமில்லை, தண்டனை வழங்கப்படவுமில்லை.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்படாத யுத்தமொன்று வட,கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கப்படும் அதேவேளை இராணுவத்தினர் முழு வடகிழக்கையும் ரணகளமாக்கியுள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் வங்காலை தோமஸ்புரி பிரதேசத்தில் இடம்பெற்ற கோரப்படுகொலைச் சம்பவம் முழு இலங்கை மக்களையும் உலுக்கிவிட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்குறிப்பிட்ட அனைத்து சம்பவங்களிலும் தென்னிலங்கை ஊடகங்கள் தமது வழமையான உண்மைக்கு மாறுபட்ட பக்கச்சார்பான வகையில் பிரசுரித்த செய்திகளை நாம் இங்கு பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அந்த வகையில் மன்னார் வங்காலை தோமஸ்புரி என்னுமிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை தென்னிலங்கை மக்கள் அப்படியொரு சம்பவம் இடம்பெற்றதா? என்ற கேள்வியினை கேட்குமளவிற்கு சிங்கள ஊடகங்களின் செய்திப் பொக்கு அமைந்துள்ளது.

அங்கு இடம்பெற்ற சம்பவத்தினை சரியான முறையில் செய்தியறிக்கையிடாததினால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சிங்கள சமூகத்தினர் அறியாதுள்ளனர். வடக்கு கிழக்கில் இடம்பெறும் அனைத்து கொலைகளையும் புலிகள் மீது சுமத்தும் இராணுவத்தினருக்கும் தென்னிலங்கை ஊடகங்களுக்கும் எவ்வித வேறுபாடுகளுமில்லை. இப்பாரிய சம்பவத்தின் போது சிங்கள நாளிதழ்களில் லங்காதீப,தினமின ஆகிய இரு பத்திரிகைகள் மட்டுமே முன் பக்கத்தில் மட்டும் சிறு செய்திகளாக பிரசுரித்திருந்தன.ஆனால் தனியே இவ்விரு பத்திரிகைகளும் கொலையுண்டவர்கள் இராணுவத்தினருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் அதனால் இக்கொலைகள் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை மூடி மறைக்கும் தென்னிலங்கை ஊடகங்கள்

மன்னார்பேசாலை கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலை இலங்கைக் கடற்படையினருக்கும், தமீழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த உக்கிரச் சமரில் தமக்கு ஏற்பட்ட இழப்பின் வெப்பி யாரத்தை ஆற்றாமையை கடற்கரையோரத் தமிழ் மக்களுக்கு எதிராக, அப்பாவிகளுக்கு எதிராக வெறியாட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது ஸ்ரீலங்கா கடற்படை.

அப்பாவி மீனவர்கள் மீதும், யுத்தத்தில் இடையில் சிக்குவதிலிருந்து தப்புவதற்காக தேவாலயத்தினுள் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீதும் கடற்படையினர் எனக் கருதப்படுவோர் மிலேச்சத்தனமாக மேற் கொண்ட கொடூரத் தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்திருக்கின் றனர்; ஐம்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர்.

பேசாலை வெற்றி மாதா ஆலயத்துக்குள் நீலச் சீருடை யினர் வீசிய கிரனேட்டினால் அங்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்த ஐம்பதுபேர் படுகாயமடைந்து சுருண்டு வீழந்தி ருக்கின்றனர். வெற்றி மாதா ஆலயம் இரத்தக்காடாகியி ருக்கின்றது.

மன்னார் மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசெப், அரசாங்க அதிபர் விஸ்வநாதன் விஸ்வலிங்கம், உதவி அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல் மற்றும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப் பி னர்கள் போன்றோர் இந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டிருக்கின் றனர். மன்னார் மாவட்ட மேலதிக நீதிவானும் நேரடியாக சம்பவ இடங்களைப் பார்த்து விசாரணை நடத்தியிருக்கின்றார்.

இந்த அனர்த்தங்களைத் தவிர, கடற்கரையில் இருந்த 110 வாடி வீடுகளும், நாற்பது படகுகளும் கூட கடற் படையினரால் எரித்து நாச மாக்கப்பட்டன என்றும் பதினைந்துக்கும் அதிகமான வாகனங்களும் சேதப்படுத் தப்பட்டன என்றும் கூறப்படுகின்றது.

இவ்வளவு அசம்பாவிதங்களும் அனர்த்தங்களும் இலங்கை அரச கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையில் நடந்தேறி இருபது மணித்தியாலம் கழிந்த பின்னரும்

கண்காணிப்புக் குழுவினர், அரச அதிபர், நீதிவான் போன்ற அதிகாரிகள் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு உண்மைகளைக் கண்டறிந்த பின்னரும்

தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்களுக்கு சீருடையினரின் இந்த வெறியாட்டம் தெரியாமல் போனது அல்லது தெரியாதமை போல அவை நடந்து கொள்வது இந்த நாட்டின் துரதிஷ்டம்தான்.

இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு சமாதான இணக்கப்பாடு எட்டப்பட முடியாத இக்கட்டு நிலைமை உருவாகியுள்ளமைக்கு இத்தகைய பின்ன டைவுப் போக்கே ஒரு முக்கிய பிரதான காரணமாகும்.

நேற்று முன்தினம் காலையில் மன்னார் பேசாலை கடற்பரப்பில் கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற உக்கிரச் சமரில், கடற்புலிகளுக்கு அதிக சேதம் என்ற சாரப்பட இலங்கைப் பாதுகாப்பு வட் டாரங்கள் வெளியிட்ட தகவல்களை அறிந்து கொண்டு, அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட தென் னிலங்கை ஊடகங்களுக்கு, பேசாலையில் பொதுமக் களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டம் தெரி யவராமல் போயிருப்பது வியப் புக்குரியது.

கெப்பிட்டிக்கொலாவையில் அப்பாவிப் பொது மக்கள் 64 பேரை கொடூரமாகக் கொன்றொழித்து, காட்டுமிராண்டித் தனம் புரிந்தவர்கள் யார் என்பது நிரூபணமாக முன்னரே, அதைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தாம் என்று உறுதிப்படுத்தி, குற்றச்சாட்டை கற்பிதம் பண்ணி, அந்தக் கொடூரக் கொலைகளால் ஏற்பட்ட இனப்பதற்றத்தை ஊதிப் பெருப்பித்து "திருகுதாளம்' புரியும் தென்னிலங்கை ஊட கங்க ளுக்கு தமது அரசின் படைகள் புரிந்த "பேசாலைத் திருவிளையாடல்கள்' தெரியாமல் போனமை விளங்கிக் கொள்ள முடியாத புதிர்தான்.

திருகோணமலை நகரில் ஐந்து அப்பாவித் தமிழ் மாணவர்கள் அவர்களின் தலைக்கு மிக அருகில் இயந்திரத் துப்பாக்கி வைத்து படுமோசமாக சுட்டுக் கொல்லப்பட்ட சமயம், அந்த மாணவர்கள் எடுத்து வந்த கிரனேட் வெடித்தே அவர்கள் உயிரிழந்தனர் என்று கதையைத் திசை திருப்பி, கொலை அட்டூழியம் புரியும் சீருடையினரைக் காப்பாற்றும் தென்னிலங்கை ஊட கங்களே, பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்துரு வாக்கிகளாக இருக்கும் வரை தெற்கு மக்களுக்கு இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படை உண்மை கள், நிலைவரங்கள், நியாயங்கள், அநியாயங்கள் எல் லாம் தெரியப் போவதில்லை.

மொத்தத்தில் பொய்களாலும், புனைகதைகளாலும் உண்மைக்குச் சமாதி கட்டி, தமிழர் தரப்புக்கு இகழ்ச்சி ஏற்படுத்தத் திட்டமிட்டு முடுக்கி விடப்படும் பரப்புரைக ளின் ஊற்றுக் கண்ணாக தெற்கு ஊடகங்கள் செயற்படும் வரை இனச்சமர் என்ற சாபக் கேட்டிலிருந்து இலங் கைத் தீவுக்கு மீட்சியே இல்லை என்பது நிச்சயம்.

மன்னார், பேசாலைச் சம்பவங்கள் தொடர்பான உண் மைகளுக்கு தென்னிலங்கை ஊடகங்களில் காட்டப் பட்ட இருட்டடிப்பு அதை மீள உறுதிப்படுத்துகின்றன ஒரு நடவடிக்கைதான். அவ்வளவே!

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.