Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு
Published on January 22, 2013-2:52 pm   ·
பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கி உள்ளது.  லின்ட்சய் சன்டிபோர்ட் என்ற 56வயதுடைய பிரித்தானிய பெண் கடந்த வருடம் மே மாதம் பாலித்தீவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
இப்பகுதிக்கு உல்லாச பிரயாணியாக வருகை தந்த இவர் தனது பயண பெட்டியில் 4.8கிலோ கிரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.  இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
அரச வழக்கு தொடுநர் இவருக்கு 15ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என சிபார்சு செய்த போதிலும் நீதிபதிகள் இவருக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தனர்.  போதைப்பொருள் கடத்தல் பாரதூரமான குற்றம் என்றும் இவரது நடத்தையால் பாலித்தீவின் உல்லாச பிரயாணத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
 
இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

போதை கடத்திய குற்றத்துக்காக, பிரிட்டன் பெண்ணுக்கு, இந்தோனேசியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டும் தனக்கு மரணதண்டனை கொடுத்துள்ளனரே என்று தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்திலேயே கதறி அழுதார் அந்த பெண்.

 

 

பிரிட்டனை சேர்ந்தவர் லிண்ட்சே ஸ்டான்டிபோர்ட்,56. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு, ஐந்து கிலோ, "கோகைன்' என்ற போதை பொருளை கடத்தினார்.இந்தோனேசிய சட்டப்படி போதை கடத்தல் குற்றத்துக்கு, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

 

 

இந்தோனேசியாவுக்கு, போதை பொருள் கடத்தி வந்ததை, லிண்ட்சே, நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார்."போதை கடத்தலை ஒப்புக்கொண்டதாலும், விசாரணைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்த காரணத்தாலும், லிண்ட்சேவுக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை அளிக்கலாம்' என, அரசு தரப்பு வக்கீல், பரிந்துரை செய்தார்.ஆனால், இதை நீதிபதிகள் மறுத்து விட்டனர். "போதை கடத்தல் பெரிய குற்றம். இதற்கு தண்டனை அளிப்பதில் பாகுபாடு காட்ட முடியாது. எனவே, லிண்ட்சேவுக்கு, மரண தண்டனை விதிக்கிறோம்' என, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்

 

போதை மருந்து கடத்திய பிரிட்டன் பெண், நீதிமன்ற வளாகத்திலும், சிறையிலும் இருக்கும் புகைப்படங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.