Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதழ்களின் இழிவும் மீடியாக்களின் மோசடியும்!

Featured Replies

image001.jpg

‘‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே...’’

-இந்த பாடல் வரிகள் அந்த கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல... இன்றைய பத்திரிகை உலகத்துக்கும்,மீடியா உலகத்துக்கும் கூட கனகச்சிதமாக பொருந்துகின்றன.

டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை நடந்தாலும்,யுவராஜுக்கு புற்று நோய் சிகிச்சை நடந்தாலும் அதை விளையாட்டுச் செய்தியிலே போடும் நமது புத்திசாலி பத்திரிகையாளர்கள்...

ஒரு மோசடிப் பேர்வழியின் பேட்டியை ஸ்டார் என்ற பெயரில் பக்கம் பக்கமாக வெளியிட்டு, அவரை கோடானுகோடி பேர் ரசித்துச் சிரிக்கிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்திவருகின்றனர்.

ஆனால், அந்த மோசடிப் பேர்வழியால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்த் துளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டிய பத்திரிகை,ஊடகங்கள் அந்த மோசடிப் பேர்வழியை ஸ்டாராக சித்திரித்து பெரிய அளவில் பேட்டிகள், போட்டோ சூட்டுகள் என்று பிரசுரிப்பது நான்காம் தூணை ஏதோ அரித்துவிட்டதை உறுதிப்படுத்துகிறது!

ஆம்,

அந்த மோசடிப் பேர்வழிதான் பவர் ஸ்டார் எனப்படுகிற சீனிவாசன்.  தன்னை டாக்டர் என்று சொல்லும்  சீனிவாசன் சில வருடங்களுக்கு முன் ‘லத்திகா’ என்ற சினிமா படத்தை தானே தயாரித்து, தானே நடித்து அதை வெளியிட்டார். சில தினங்களுக்கு மேல் அந்த படம் ஓடாததால், சில தியேட்டர்களுக்கு தானே தினமும் டிக்கெட்டுக்கு வசூலாகும் பணத்தைக் கொடுத்து அதை ஓட்டினார். அதற்கு தினந்தோறும் செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்தார். இவரது படம் தியேட்டர்கள் ஓடியதை விட, 

 

 

image002.jpg

 

செய்தித்தாள்களிலும்,போஸ்டர்களிலும் ஓடியதுதான் அதிகம். இது எல்லாவற்றையும் சாத்தியமாக்கியது இவரிடம் இருக்கும் பணம். ஆனால், இந்த பணம் எப்படி வந்தது என்று தெரியுமா?

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 65 லட்ச ரூபாய் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 6 மாதத்திற்கு முன் சென்னை குரோம்பேட்டை கணபதிபுரம்,கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டார் சீனிவாசன்.  பாலசுப்பிரமணியன் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். ரூ.65 லட்சம் கமிஷன் பாலசுப்பிரமணியத்திற்கு வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக பிரபல அரசு வங்கி ஒன்றில் 10கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக நடிகர் சீனிவாசன் கூறினார்.

அதற்காக அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் கமிஷனாக பெற்றார். அதன் பிறகு 2 மாதமாகியும் கடனும் வாங்கி கொடுக்க வில்லை, கமிஷன் தொகையும் திருப்பிக் கொடுக்க வில்லை. பின்னர் 2தடவையாக ரூ.15 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வில்லை.

image003.jpgஇது தொடர்பாக பாலசுப்பிரமணியன் கடந்த ஜுலை மாதம் 11-ந் தேதி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி விசாரிக்குமாறு கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு ஆணையிடப்பட்டது. மேலும் 2புகார்கள் அந்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

சீனிவாசனின் மோசடி இதோ நின்றபாடில்லை!

கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாகவும்,கும்மிடிப்பூண்டி தொழிலபதிருக்கு 25 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, 25 லட்சம் கமிஷன் வாங்கி மோசடி செய்ததாகவும்,  மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும், அதுமட்டுமா, மத்திய அமைச்சர் சரத் பவாரின் குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு 100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி, பல கோடியை அபேஸ் செய்த மோசடி ஸ்டார் தான் இந்த சீனிவாசன். நடிகர் சீனிவாசன் கைது இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோ.சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் நடிகர் சீனிவாசனை தீவிரமாக தேடி வந்தனர்.

அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை போலீசார் அமைந்தகரை பகுதியில் மடக்கி பிடித்து நடிகர் சீனிவாசனை கைது செய்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 15 நாள் நீதிமன்ற காவல் விசாரணையின் போது மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும், 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் நடிகர் சீனிவாசன் கூறினார். ஆனால் புகார் கொடுத்தவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

image004.jpg

பின்னர் கீழ்ப்பாக்கம் போலீசார், அவரை எழும்பூரில் உள்ள 13-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி நடிகர் சீனிவாசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். உடனடியாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  நடிகர் சீனிவாசன் மீது, 4சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி போன்ற சட்டப்பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

-இதுதான் பவர் ஸ்டாரின பிளாஷ் பேக்.

ஆனால், பாரம்பரிய  பெருமை மிக்க பத்திரிகைகள் மாதத்துக்கு ஒருமுறையோ, இருமுறையோ பவர் ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை பெரிய அளவில் பிரசுரிக்கின்றன.

அந்த பாரம்பரிய இதழின் புலனாய்வுச் செய்திக்கு ஆளாகவேண்டிய ஒரு மோசடிப் பேர்வழி, அதே குழுமத்தின் ஜனரஞ்சக இதழின் செலிபிரேட்டியாக மாற்றப்பட்டது எப்படி?

இதுதான் இதழியல் அறமா?

பவர் ஸ்டார் ஒரு படம் தயாரிப்பதை விட, அந்த படத்துக்கு விளம்பரம் செய்வதில்தான் அதிகம் செலவிடுகிறார் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். அப்படியென்றால் பவர் ஸ்டார் என்று அவரை கலாய்த்தோ, புகழ்ந்தோ அவரைப் பற்றி பிரபல பத்திரிகைகள் எழுதுவதெல்லாம் யாருடைய ஏற்பாட்டில் என்ற சந்தேகம் வருகிறது.

இப்போது ‘கண்ணா லட்டு திங்க ஆசையா?’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் பவர் ஸ்டார். இதற்காக நடிகர் சந்தானம் இவரிடம் சில கோடிகள் வாங்கிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

சமீபத்தில் நடந்த ‘நீயா நானா’ என்ற டாக் ஷோவிலும் கலந்துகொண்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். அப்போதும் அவரை ஒரு கலாய்க்கும் பொருளாக பார்த்தார்களே தவிர, அவர் மீதான வழக்குகள்,மோசடிகள் பற்றியெல்லாம் எந்த கேள்வியும் பெரிதாக வைக்கப்படவில்லை.

ஆக... ஒரு மோசடிக்காரன் தனது பண பலத்தைப் பயன்படுத்தி தன்னைப் பற்றிய உண்மைகளை மறைத்து பொய்யான ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறார். அதற்கு பாரம்பரிய பத்திரிகைகளும், ஊடகங்களும் தலையாட்டிக் கொண்டு அவரைப் பற்றிய உண்மைகளை மறைத்து மாயலோக நாயகனாகவே அவரைப் பார்க்கின்றன.

சமூக அவலங்களுக்கு எதிராக பேனாச் சாட்டையை முறுக்கி,  அறச் சீற்றம் கொள்ளும் போன்ற இதழ்களுக்கு இது அழகா?

ஒரு வில்லனை ஹீரோவாக்கலாமா?

இந்த மீடியாக்கள் செய்யும் அசிங்கங்களால், இன்னொரு சமூக விரோத குற்றவாளியும் இதே பாணியில் வளரவே செய்வார்கள். இதை தடுக்க பாரம்பரிய இதழ்களும், எலக்ட்ரானிக் மீடியாக்களும் முன் வர வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.