Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் மூலோபாய அக்கறை யாரை மையப்படுத்தியது? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் மூலோபாய அக்கறை யாரை மையப்படுத்தியது? - யதீந்திரா

 

கடந்த பத்தியில் 2009 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட, இலங்கை: யுத்தத்திற்கு பின்னரான அமெரிக்க மூலோபாயத்தை மீள்சட்டகப்படுத்துதல் (SRI LANKA: RECHARTING U.S. STRATEGY AFTER THE WAR) என்னும் அறிக்கை குறித்து பார்த்திருந்தோம். இப்பத்தியில் அது குறித்து மேலும் சில விடயங்களை பார்ப்போம். அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் சுமார் 27 வருடங்களாக ஈடுபட்டுவரும் ஜோன் கெரி தற்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பத்தி அவர் இலங்கை தொடர்பாக எத்தகைய அவதானத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ள முயல்கிறது. இலங்கையின் புவியியல் இட அமைவானது ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் சீனா ஆகியவற்றை இணைக்கும் முக்கிய கடல்பாதையில் அமைந்திருக்கிறது. இப்பிராந்தியத்தில் தீவிரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதிலும் மற்றும் கடற்கொள்ளையர்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதிலும் இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றுடன் அமெரிக்கா பொதுவான ஆர்வங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறது.

 

மேற்படி கடற்பாதைகளில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலமை, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. அதேவேளை இலங்கையில் நிகழும் வகுப்புவாத பதட்டங்கள் இந்தியாவின் குறிப்பாக 60 மில்லியன் தமிழர்களைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் பதட்டங்களை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு அமெரிக்கா இருதரப்பு உறவுகளை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிடும், மேற்படி கெரி தலைமையிலான வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையானது, அமெரிக்காவின் மூலோபாய ஆர்வங்களுக்கான முதலீட்டை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் கருத்தில்கொண்டு மேற்கொள்வதற்கு பதிலாக, சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும் செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கின்றது. இது தமிழர் தரப்பு முக்கியமாக கருத்தூன்றி வாசிக்க வேண்டிய விடயமாகும்.

 

இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கும் மேற்படி அறிக்கையானது மேலும் இவ்வாறு விபரித்துச் செல்கின்றது – சமீபத்தைய ஆண்டுகளில் இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் (geopolitical position) மாற்றமடைந்திருக்கிறது. இலங்கை சீனாவை நோக்கி முன்நகர்ந்திருக்கின்ற நிலையில், இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவை அமெரிக்கா விருத்தி செய்திருக்கிறது. இதனடிப்படையிலேயே இந்தியா, தமிழர் விவகாரத்தில் விரைவான முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டுமென்பதில் கரிசனை எடுத்துக் கொள்கிறது. தமிழர் விவகாரத்தின் மூலம் இலங்கையில் ஏற்படக்கூடிய பதட்டநிலையானது, இந்தியாவின் ஸ்திரத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் அவதானத்திலிருந்தே இந்தியாவின் கரிசனை எழுகிறது. இவ்வாறு விபரித்திருக்கும் கெரியின் அறிக்கை, இலங்கையில் அதிகரித்துச் செல்லும் சீனாவின் செல்வாக்கு குறித்தும் விபரித்திருக்கின்றது.

 

சீனா இலங்கையின் இராணுவ திட்டங்களுக்கான கடனுதவியாக ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அறிக்கையானது, காங்கிரஸ் ஆய்வுச் சேவையின் (Congressional Research Service) மதிப்பீடொன்றை மேற்கோள் காட்டியிருக்கிறது. சீனா இலங்கையில் காட்டிவரும் ஈடுபாடானது, அது இப்பிராந்தியத்தில் நண்பர்களைத் தேடுவதாகவே தெரிகிறது. இதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேற்குலகின் வர்த்தக தொடர்புகளை இணைக்கும் நீரிணைப்புக்களில் (Straits) தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முற்படுகிறது. உதாரணமாக 2007இல் சீனா ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானத்திற்காக ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது. 2008இல் ஒரு பில்லியன் டொலர் பொருளாதார மேப்பாட்டுக்கான உதவியை வழங்கியிருந்தது. 2009இல் கொழும்பு துறைமுகத்திற்கு 34 மைல்களுக்கு அப்பாலுள்ள மிரிகம தொழில் வலயத்தை நிறுவுவதற்கு உதவியது. மேலும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையில் மேற்குலகு இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முற்பட்டபோது, சீனா அதனை தடுத்திருந்தது.

 

இந்த அடிப்படையில் இலங்கையை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவை காட்டிவரும் ஈடுபாடானது, ஒரு மிகப்பெரிய விளையாட்டின் பிரதான பகுதியென்று குறிப்பிடும்படியாக அமைகிறது. இவ்வாறு சுட்டிக்காட்டிருக்கும் கெரியின் அறிக்கையானது, அமெரிக்க ஆர்வங்களுக்கு ஏற்றவகையிலான இலங்கையின் மூலோபாய முக்கியத்துவமானது, இறுதியில் இலங்கையை நிராகரிப்பதாக அமைந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது. இதனடிப்படையில் பரிசீலனையற்ற வகையில் செயலாற்றினால், அதன் விளைவாக, நீண்டகால நோக்கில் அமெரிக்க ஆர்வங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்பதையே மேற்படி அறிக்கை அடிக்கோடிட்டுள்ளது.

 

இந்த அடிப்படையில் பார்த்தால், அமெரிக்காவின் நலன்சார் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் ஒரு விடயமே அல்ல. அமெரிக்காவின் ஆர்வங்கள் நீண்டகால நோக்கில் இலங்கையை மையப்படுத்திய ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இதனை முன்னிறுத்தி சிந்திப்போமானால், அமெரிக்கா இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் கூடுதல் கரிசனையை வெளிப்படுத்தி வந்திருப்பதும், அதன் தொடர்ச்சியாக ஜெனிவாவில் ஒரு பிரேரணையை சமர்ப்பித்து வெற்றி கொள்ளச் செய்தமையையும் வெறுமனே தமிழர்களின் பிரச்சனையாக எவரேனும் கருதினால், அது ஒரு அடிப்படையான அரசியல் தவறாகவே அமையும்.

 

எனவே இங்கு அமெரிக்காவின் தமிழர் மீதான ஆர்வம் என்பது, இந்தியாவின் பிராந்திய ரீதியான பாதுகாப்பு ஆர்வங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவு அல்லது முரண் என்னும் இருசோடி அரசியல் சதுரங்க ஆட்டத்தில், தமிழர்கள் ஒரு விடயம் மட்டுமே. அந்த விடயம் என்பதன் எல்லையும், இலங்கையில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலைமை இந்தியாவின் உள்ளக அரசியலில் சலசலப்புக்களை ஏற்படுத்தலாம் என்னும் இந்திய மத்திய அரசின் கரிசனையுடன் தொடர்புபட்ட ஒன்றாகவே இருக்கிறது. எனவே இங்கு ஆழ்ந்து நோக்குவோமாயின் ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். அது- மகிந்த அரசாங்கத்தின் இறுக்கமான நடவடிக்கைகளிலேயே அனைத்தும் தங்கியிருக்கிறது. மகிந்த அரசாங்கம் இறுக்கமான அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடித்தால், இவ்வரசாங்கம் தலைமை தாங்கும் இலங்கையின் மீதான மேற்குலக அழுத்தங்களும் அதிகரிக்கவே செய்யும். இவ்வாறானதொரு அழுத்தத்தை பிரயோகிக்கும் போது, ஒரு அழுத்தத்திற்கான விடயதானமாக வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் பிரச்சனையும் கருத்தில் கொள்ளப்படும். எனவே தற்போது, தமிழர் பிரச்சனை சர்வதேச அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறதென்றால், அதன் பொருள், தற்போதைய இலங்கை மேற்கின் விருப்பங்களுக்கு ஏற்ப நகரவில்லை, மாறாக அது மேற்குலகின் விரும்பங்களின் எதிர்த்திசையில் பயணிக்க முற்படுகிறது என்பதே பொருள்.

 

எதிர்வரும் ஜெனிவா அமர்வில் அமெரிக்கா மேலும் சில இறுக்கமான அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடுமென்னும் அபிப்பிராயங்கள் உலவுகின்றன. அடுத்த ஜெனிவா அமர்விற்கு முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வோசிங்டனுக்கும் பயணிக்கவுள்ளது. இதற்கு இடையில், தென்னாபிரிக்க அனுசரணையில் தமிழர் விவகாரத்திற்கான தீர்வு முயற்சிகளை மேற்கொள்வதற்கான சில முயற்சிகள் இடம்பெறவுள்ளதான செய்திகளும் வெளிவருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எஞ்சியிருக்கின்ற ஒரேயொரு நம்பிக்கை, சர்வதேசம் கைகொடுக்கும் என்பது மட்டும்தான். இத்தகையதொரு நம்பிக்கையையே ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை ஒரு இம்மியளவு கூட முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதற்கான சான்றில்லை.

 

உண்மையைச் சொல்வதானால், இன்றைய அரசாங்கத்தின் இறுக்கமான சில நடவடிக்கைகள்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பலமாக இருக்கிறது. அரசாங்கத்தின் இறுக்கமே கூட்டமைப்பிற்கான ஒரு சர்வதேச அந்தஸ்த்தையும் கொடுத்திருக்கிறது. அரசாங்கம் தனது கடும்போக்குவாத நிலைப்பாடுகளை தளர்த்தினால், இன்றைய சர்வதேச அழுத்தங்களுக்கு என்ன நடக்கும்? இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஒரு ரணில் விக்கிரமசிங்கவாக மாறினால் இன்று எழுந்திருக்கும் அனைத்து வகையான சர்வதேச குரல்களும் அடங்கிவிடலாம். எனவே இலங்கையின் எதிர்கால அரசியல் மாற்றங்கள் அனைத்தும், அரசாங்கத்தின் இறுக்கத்திலும் தளர்விலுமே தங்கியிருக்கிறது.

 

 உண்மையைச் சொல்வதானால், இன்றைய அரசாங்கத்தின் இறுக்கமான சில நடவடிக்கைகள்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பலமாக இருக்கிறது. அரசாங்கத்தின் இறுக்கமே கூட்டமைப்பிற்கான ஒரு சர்வதேச அந்தஸ்த்தையும் கொடுத்திருக்கிறது. அரசாங்கம் தனது கடும்போக்குவாத நிலைப்பாடுகளை தளர்த்தினால், இன்றைய சர்வதேச அழுத்தங்களுக்கு என்ன நடக்கும்?

 

இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஒரு ரணில் விக்கிரமசிங்கவாக மாறினால் இன்று எழுந்திருக்கும் அனைத்து வகையான சர்வதேச குரல்களும் அடங்கிவிடலாம். எனவே இலங்கையின் எதிர்கால அரசியல் மாற்றங்கள் அனைத்தும், அரசாங்கத்தின் இறுக்கத்திலும் தளர்விலுமே தங்கியிருக்கிறது.

 

பலமான இராணுவ ஆதரவு, பலமில்லாத எதிர்க்கட்சிகள்.... இவற்றுடன் சீன + ஈரான் + பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆழமான ஆதரவு.

 

எனவே மேற்குலகம் விரும்பினாலும் மகிந்தாவை அகற்ற அவர்களுக்கு வழி இல்லை.


இதை வைத்தே தமிழர் தரப்பும் காய்களை நகர்த்த முயலவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.