Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பகுதியில் பயணிக்கும் எந்த வாகனமானாலும் தாக்குமாறு

Featured Replies

புலிகளின் பகுதியில் பயணிக்கும் எந்த வாகனமானாலும் தாக்குமாறு எமக்கு இராணுவ அதிகாரி உத்தரவிட்டிருந்தார்

[19 - June - 2006] [Font Size - A - A - A]

புலிகளினால் கைது செய்யப்பட்ட ஆயுதக்குழு உறுப்பினர்கள் தெரிவிப்பு

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் பயணஞ் செய்யும் எந்த வாகனமாக இருந்தாலும் தாக்குதல் நடத்துமாறும் அது எந்த வாகனமாக இருந்தாலும் தயங்க வேண்டாம் எனத் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் மேலும், அம்பாறையில் இனிய பாரதியை கொலை செய்துவிட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஞான தீபனுடைய குடும்பத்தை அழித்து விட்டு வருமாறும் தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் இலுப்படிச்சேனையில் கைதான கருணா குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை இரவு செங்கலடி - பதுளை வீதியில் உள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான இலுப்படிச்சேனையில் விடுதலைப் புலிகளின் வாகனம் ஒன்றிற்கு கிளேமோர் தாக்குதல் செய்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய துணைப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட கருணா குழு உறுப்பினர்களே வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தனர்.

அகிலன் என்றழைக்கப்படும் பங்குடாவெளியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி இதயராசா (வயது 25), அனல் என்று அழைக்கப்படும் முனைக்காட்டைச் சேர்ந்த சுந்தரலிங்கம் திருநாவுக்கரசு (வயது 23) ஆகிய இரு கருணா குழு உறுப்பினர்களும் புளொட் இயக்க உறுப்பினரான புதூர் வள்ளுவர் வீதியைச் சேர்ந்த நவரெட்ணம் பிரதாபன் (வயது 29) என்பவருமே கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவர்கள் மேலும் தெரிவிக்கையில்;

மட்டக்களப்பில் பல இடங்களில் பல தாக்குதல்களை நாங்கள் மேற்கொண்டோம். அம்பாறையில் இனிய பாரதியை கொலை செய்து விட்டு புலிகளிடம் சரணடைந்த முனைக்காட்டில் உள்ள ஞான தீபனின் குடும்பத்தை அழிக்கவும் முயன்றோம். அகிலன் தலைமையில் எங்களை கொக்கட்டிச்சோலை, பழுகாமம், இலுப்படிச்சேனை, கரடியனாறு போன்ற பகுதிகளில் தாக்குதல் நடாத்த அனுப்பி வைத்தார்கள்.

அகிலன், அனல் ஆகிய நாம் இருவரும் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிவின் பின் கட்டார் சென்று இரண்டு வருடமாக தொழில் புரிந்து வந்த போது, கட்டாரில் உள்ள கருணா குழு உறுப்பினரும் ஈ.பி.டி.பி. ரவியின் மச்சானுமாகிய மோகன் கருணா குழுவுடன் இணையுமாறு வற்புறுத்தினர்.

எங்களுக்கு விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர்களான கீர்த்தி, மதன் ஆகியோர் கதைப்பதாகக் கூறி கருணா குழுவுடன் செயற்படுவதாகவும் உடனடியாக நாடு திரும்பும் படியும் திரும்பாவிட்டால் எமது குடும்பத்தை அழித்து விடுவதாகவும் பயமுறுத்தியதை அடுத்து வீட்டுக்கு வரும் போது விமான நிலையத்தில் வைத்து கருணா குழுவின் மார்க்கனால் பிடிக்கப்பட்டு தீவுச் சோலைக்கு கொண்டு செல்லப்பட்டோம். அதன் பின்பே பயந்து அவர்களுடன் இயங்கினோம். அப்போது தான் கீர்த்தி, மதன் என்று கருணா குழு உறுப்பினர்களே கதைத்துள்ளார்கள் என்று எமக்குத் தெரியும்.

தீவுச்சோலையில் இருந்த போது கொழும்பில் இருக்கும் பிள்ளையான், ருத்திரா ஆகியோரின் உத்தரவிற்கமைய, மங்களன் மாஸ்ரர் மூலம் மட்டக்களப்பில் உள்ள இராணுவ புலனாய்வு முகாமாகிய பல்பொடிக் கம்பனிக்கு அனுப்பி பல்பொடிக் கம்பனியில் உள்ள சுரேஷ் என்று அழைக்கப்படும் தமிழ் பேசக் கூடிய சிங்கள இராணுவ புலனாய்வு அதிகாரியுடன் இணைந்து அவரது கட்டளைக்கு ஏற்ப செயற்படும் படி பணித்தனர். அவரது கட்டளைக்கு ஏற்பவே செயற்பட்டு வந்தோம்.

இலுப்படிச்சேனைப் பகுதியில் தாக்குதல் நடத்துமாறு பல்பொடிக் கம்பனி முகாமில் இருந்து புதன்கிழமை இரவு சுரேஷ் எனும் இராணுவ புலனாய்வு அதிகாரி அனுப்பி வைத்தார். அங்கு வாவியூடாக சென்று வியாழக்கிழமை இரவு வரை அப்பகுதியில் மறைந்து இருந்து வியாழக்கிழமை இரவு புலிகளின் வாகனத்துக்கு தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிய போது புலிகளும் தேசிய துணைப் படையினரும் துரத்திச் சுட்ட போது அனல் காயமடைந்த நிலையில் அவரைத் தூக்கிக் கொண்டு பங்குடா வெளி கண்ணா காட்டுக்குள் இருந்து பிள்ளையானுக்கு அறிவித்ததுடன் சுரேஷுக்கும் அறிவித்தோம்.

சுரேஷ் இராணுவ கவச வாகனத்தில் ஆறு பேர் சகிதம் வந்து ஏறாவூர் 5 ஆம் குறிச்சி வாவியூடாக முஸ்லிம் ஒருவரை அழைத்துக் கொண்டு இரண்டு தோணிகளில் எம்மை காப்பாற்ற வந்தனர். அவர்களுக்கு போர்ச் மூலம் சைகை காட்ட பணிக்கப்பட்டோம்.

இதேவேளை, விடுதலைப்புலிகள் சுற்றி வளைத்து எம்மை பிடித்து விட்டனர். எம்மைக் காப்பாற்றுவதற்காக வந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்க துரைரெட்ணத்துடன் இணைந்து இயங்கி தற்போது கருணா குழுவுடன் இணைந்து கொண்ட வாசுவும் புளொட் உறுப்பினரான பிரதாபனும் ஒரு தோணியில் சுரேஷும் ஏனையவர்களும் மற்றைய தோணியில் பின்னால் வந்தவேளை, கரைக்கு வந்த முதல் தோணி மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வாசு மரணமடைந்ததுடன் புலிகள் அவரின் சடலத்தை மீட்டதுடன் புளொட் உறுப்பினர் பிரதாபன் கைதானார். சுரேஷ் வந்த தோணி தப்பிச் சென்று விட்டது என்றனர்.

இதேவேளை, அகிலன் தான் வெளிநாட்டில் இருந்து வந்து விமான நிலையம் இறங்கியதும் கருணா குழுவின் மாக்கன் பிடித்ததாகவும் அனல் தன்னை விமான நிலையத்தில் வைத்து தனது போட்டோவுடன் ஒருவர் பொலிஸுடன் நின்று பிடித்து தீவுச் சோலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர். இவர்களுக்குரிய தகவலை கட்டாரில் உள்ள மோகன் அவ்வப் போது தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதான புளொட் உறுப்பினர் பிரதாபன் தான் கருணா குழுவுடன் இணைந்து வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகத்தை உடைத்து பொருட்களைக் கொண்டு சென்று மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் வைத்தபோது சுரேஷ் வந்து தோணி ஓட்ட வேண்டும் என அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். இவர் 4 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

http://www.thinakkural.com/news/2006/6/19/...ws_page4756.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.