Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 தமிழர்கள் படுகொலை 30 புலிகள் பலியாகவில்லை-இராணுவம் புருடா

Featured Replies

இலங்கை: வாயில் சுட்டு 4 தமிழர்கள் படுகொலை

30 புலிகள் பலியாகவில்லை-இராணுவம் புருடா

மேலும் வாசிக்க..........

http://thatstamil.oneindia.in/

இது எப்படி இருக்கு :P :P :P :P :P

  • தொடங்கியவர்

மன்னார் கடற்சண்டையின் முக்கியத்துவம்!

நேற்று சனிக்கிழமை காலை மன்னார் பேசாலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் ஏற்பட்ட கடும் சண்டையில் கடற்படையின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. 12 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடற்புலிகள் தரப்பில் இருவர் சிறு காயங்களுக்கு ஆளாகினர். கடற்புலிகளின் சண்டையிடும் திறனை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்திய சண்டையாக இச் சண்டை அமைந்தது.

ஆனால் கடற்புலிகளின் 8 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், 30 கடற்புலிகள் வரை கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா அரசு ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தது. பெரும்பாலான சர்வதேச ஊடகங்களும் சிறிலங்கா அரசின் பொய்யான செய்தியையே வெளியிட்டன. இதில் தமிழ் நாட்டு ஊடகங்களும் அடங்கும்.

சிறிலங்கா அரசு தனது தோல்வியை மூடி மறைத்து அவசர அவசரமாக ஒரு பொய்ச் செய்தியை உலகம் முழுவதும் பரப்பியதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்புக்களை சார்ந்துள்ள கடற்பரப்புக்கள் கடற்புலிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. ஆயினும் சில பகுதிகளில் சிறிலங்கா கடற்படையும் குறிப்பிடத்தக்க வலுவோடு இருக்கின்றது. வன்னியின் கிழக்கில் அமைந்துள்ள முல்லைத்தீவு கடற்பிரதேசம் விடுதலைப்புலிகளின் முற்று முழுதான ஆதிக்கத்தில் இருக்கின்ற அதே வேளை வன்னியின் மேற்கில் அமைந்துள்ள மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை குறிப்பிடத்தக்க வலுவோடு உள்ளது. மன்னார் கடற்பரப்பு கடற்படையினருக்கு சாதகாமான ஒரு பகுதி. மன்னாரில் உள்ள கடற்படை தளங்களும் யாழ் குடாவின் தீவுப் பகுதிகளில் உள்ள கடற்படைத் தளங்களும் மன்னார் கடற்பரப்பின் சிறிலங்கா கடற்படையின் பிரசன்னத்தை உறுதி செய்கின்றன. ஆனால் தற்பொழுது மன்னார் கடற்பரப்பும் முல்லைத்தீவுக் கடற்பரப்பைப் போல் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. அங்கு கடற்புலிகளின் கை ஓங்கி வருகிறது.

இவ்வாறு மன்னார் கடற்பரப்பில் கடற்புலிகள் மேலும் பலம் பெறுவது, சிறலங்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். காரணம், மன்னார் கடற்பகுதியில் இருந்து விரைவாக சிறிலங்காவின் தலைநகராகிய கொழும்பை அடைய முடியும். இது கொழும்பின் மீது கடற்புலிகள் நேரடியாக தாக்குதல் நடத்துவதற்கு வழி செய்யும். ஆகவே மன்னார் கடற்பரப்பு கடற்புலிகளின் முற்று முழுதான ஆதிக்கத்தின் கீழ் வந்தால், அது சிறிலங்காவின் பொருளாதாரத்தை அடியோடு முடக்குவதோடு, சிறிலங்காவை யுத்தத்தில் ஒரு தற்காப்பு நிலைக்கும் தள்ளும்.

ஆகவே மன்னார் கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படை கடற்புலிகளிடம் தோல்வி கண்டது என்னும் செய்தி உடனடியாகவே சிறிலங்காவின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய ஒரு செய்தி. அத்துடன் மிக முக்கியமாக இச் செய்தி மேற்குலகத்திற்கு தாம் தோற்றுக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு உதவி செய்கிறோம் என்பதையும் உணர்த்தக்கூடும். இதனாலேயே சிறிலங்கா அரசு உடனடியாகவே கடற்படையினர் கடற்புலிகளை முறியடித்து விட்டதாக ஒரு பொய்யான செய்தியை உலகம் முழுவதும் பரப்பியது.

ஆனால் மன்னார் கடலில் நடந்த சண்டை விரைவில் கொழும்பை அண்டியுள்ள கடற்பரப்பிலும் நடக்கும் என்பதுதான் உண்மை.

http://www.webeelam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.