Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரத் துறையில் இழப்பு : அமைச்சர் பதவியில் இருந்து அழகிரியை நீக்க பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை

Featured Replies

ec84ba0a-eb0a-44fd-a399-3ac93433601e1.jp

சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) உரத் துறையில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள அந்தத் துறையின் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமன் மன்மோகன் சிங்கிட வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உரங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிலையாக இருக்கும் வகையில், உரத்துக்கான மானியத்தை அவ்வப்போது மாற்றி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு கடைப்பிடித்து வந்தது. இதனால் உரங்கள் விவசாயிகளுக்கு ஓரளவு நியாயமான விலையில் கிடைத்து வந்தன.

2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் என்ற புதிய கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கொள்கையின்படி, உரங்களுக்கான ஆண்டு மானியத் தொகை மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்டு உர உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ஆனால், உர உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய சில்லறை விற்பனை விலையை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்கின்றன.

அரசு வழங்கும் மானியம் என்பது நிலையாகவும், உரத்தின் அதிகபட்ச சில்லறை விலை என்பது உர நிறுவனங்களால் அவ்வப்போது மாற்றியமைக்கக் கூடியவையாகவும் மாறி விட்டது. இதனால், உரங்களின் விலை தொடர்ந்து ஏறி வருகிறது.

பிரதமர் நடவடிக்கை இல்லை: மத்திய அரசின் இந்த தவறான உரக் கொள்கை காரணமாக, விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். இந்த விவசாய விரோதக் கொள்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை நிலையானதாக இருக்கும்படியான முந்தைய கொள்கையை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பிரதமருக்கு கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி கடிதம் எழுதினேன். அது குறித்து எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ஒரு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வரை உரக் கம்பெனிகள் எதிர்பாராத வகையில் லாபம் ஈட்டியுள்ளன. எம்.ஓ.பி. உரத்தைப் பொருத்தவரையில், கடந்த நிதியாண்டில் மெட்ரிக் டன்னுக்கு ரூ.16,054-ஐ அரசிடம் இருந்து மானியமாக பெற்றுக் கொண்டு உபரியாக ரூ.5,500-ஐ உரக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டு விட்டன எனவும், இது குறித்து உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரியின் கவனத்துக்கு அந்தத் துறையின் இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா எடுத்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.

உர உற்பத்தி நிறுவனங்கள் பயன்பாட்டுச் சான்றிதழை அளித்து உரம் தயாரிப்பதற்கான விலையின் விவரங்களை மத்திய உரத் துறைக்கு தெரிவிக்க வேண்டுமென இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா, துறையின் அமைச்சர் அழகிரிக்கு குறிப்பு வைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைந்து வருவதால், நடப்பாண்டுக்கான உரமானியம் குறைக்கப்பட்டுவிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவை இல்லாத காலகட்டத்திலேயே உரங்களை சந்தைக்கு அனுப்புவதற்கான ஒப்புதலை மத்திய உரத் துறையிடம் இருந்து பெற்று விட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டி இது தடுக்கப்பட வேண்டும் என மத்திய உரத் துறை இணையமைச்சர் எழுதிய குறிப்பு மீதும் அழகிரி நடவடிக்கை எடுக்கவில்லை.

இணையமைச்சரின் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர் அழகிரி நடவடிக்கை எடுக்காததைப் பார்க்கும்போது, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் தொகை வழங்கும் கொள்கை ஊழல் புரிவதற்கு தானோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

சி.பி.ஐ. விசாரணை தேவை: மு.க.அழகிரி பொறுப்பு வகிக்கும், உரத் துறை அமைச்சகத்தால் உர நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு லாபம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உர மானியம் என்ற பெயரில் அரசு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

இந்த ஊழல் விஷயத்தில் அமைச்சர் மு.க.அழகிரி அமைதியாக இருப்பது மௌனம் சம்மதம் என்பதன் அடையாளம் தானோ என மக்கள் கேட்கிறார்கள். மத்திய உரத் துறை இணையமைச்சரே தன்னுடைய துறையில் ஏற்பட்டுள்ள இழப்பை தடுப்பதற்கான குறிப்பை அளித்துள்ளார். ஆனாலும், அவற்றை உதாசீனப்படுத்தி ரூ.1,000 கோடி வரையிலான இழப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் சி.பி.ஐ., விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.

அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்டெடுப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல் அறிக்கையில் கூறியுள்ளார். (டி.என்.எஸ்)

 

http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=31a8615a-5251-4762-ba64-e2f79b0becd2&CATEGORYNAME=TCHN

Edited by வண்டுமுருகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.