Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவமனையாகும் புதிய தலைமைச் செயலகம் : நீதிமன்றம் அனுமதி

Featured Replies

fed0d162-6f28-4663-be8f-2cab0fb73f541.jp

சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் புதிய மருத்துவமனையாகப் போகிறது. ஆம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த திமுக ஆட்சியின் போது சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டு, அதில் தமிழக சட்டசபை இயங்கி வந்தது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய கட்டிடத்தில் செயல்பட்ட தலைமை செயலகத்தை, மீண்டும் பழைய ஜார்ஜ் புனித கோட்டைக்கே மாற்றப்பட்டது. மேலும் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து வழக்குறிஞர் ஆர்.வீரமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் கட்டடத்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று கூறி அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் டி. முருகேசன், கே.கே. சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வு கடைசியில் இந்த வழக்கினை வேறு நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக நீதிபதிகள் கே.என். பாஷா, என். பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த புதிய அமர்வு வழக்கு குறித்து கடந்த சில மாதங்களாக விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதிகள், அரசின் முடிவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சென்னையில் ஏற்கெனவே பல மருத்துவமனைகள் இருந்தாலும்கூட, சென்னையின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டால் இந்த மருத்துவமனைகள் போதுமானது அல்ல. ஆகவே, மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்று தமிழக அரசு எடுத்த முடிவை வீணான முடிவு எனக் கூற முடியாது. தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனைகூட இன்றுவரை சென்னையில் இல்லை. இந்நிலையில், புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்று தமிழக அரசு எடுத்த முடிவு மக்கள் நலனைக் கருதியே எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முடிவுக்கு தமிழக சட்டப்பேரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டப்பேரவை ஒப்புதல் அளித்த அரசின் இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், கட்டடத்தின் வடிவமைப்பில் மாற்றம் செய்ய சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்றிதழை அரசுப் பெற்றுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அதே பிரச்னையை மீண்டும் எழுப்ப முடியாது. என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். (டி.என்.எஸ்)

 

http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=f6bb8808-b9e5-4dbc-b49a-b47ca06354cd&CATEGORYNAME=TCHN

 
 

Edited by வண்டுமுருகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.