Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை
25 ஜனவரி 2013
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பண்டாரநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்திஷூடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புது டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றதன் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்.
 
இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்திஷ் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், திடீரென இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திரிக்கா ஏன் சந்தித்தார் என்பது பற்றியோ என்ன விடயம் பற்றி முக்கியமாக கலந்தாலோசிக்கப்பட்டது என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும், திடீரென இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திரிக்கா ஏன் சந்தித்தார் என்பது பற்றியோ என்ன விடயம் பற்றி முக்கியமாக கலந்தாலோசிக்கப்பட்டது என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 

வேறு எதற்காக? மகிந்த கூட்டத்தை அகற்றுவது பற்றியாகத்தான்.

 

ஆனால் மகிந்தாவை அகற்றுவது என்பது சீனாவை அகற்றுவது போன்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புதுடில்லியில் சந்திரிகா ஜெனிவா காய் நகர்த்தல்; இந்திய உயர்மட்டங்களுடன் மந்திராலோசனை
 
இலங்கையின் தற்போதைய மனித உரிமை விவகாரங்கள், அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் ஆகியவை உட்பட மேலும் சில முக்கியமான விடயங்களில் அரசின் குறைநிறைகள் குறித்து மேற்படி சந்திப்புகளின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது இலங்கை விடயத்தில் எவ்வாறான வகிபாகத்தைக் கொள்வது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்துவரும் இந்தியா, இவ்விடயம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் மந்திராலோசனை நடத்தியுள்ளது.
 
இராஜதந்திர மட்டத்திலான பயணமொன்றை மேற்கொண்டு அண்மையில் இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அந்நாட்டின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து இலங்கை விடயங்கள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.
 
இந்திய அரசின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு பயணம் மேற்கொண்டார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறியமுடியவில்லை.
 
இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித் சர்மா, அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாத்தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட டில்லி நிர்வாகத்தின் உயர்மட்டப் புள்ளிகளுடனேயே அவர் இலங்கை விவகாரம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார் எனத்தெரிகிறது. 
 
இச்சந்திப்புகளின்போது இந்தியாவின் சார்பில் ஜெனிவா விவகாரங்களைக் கையாளும் உயர்மட்ட இராஜதந்திரிகளும் பிரசன்னமாகியிருந்தனர் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கையின் தற்போதைய மனித உரிமை விவகாரங்கள், அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் ஆகியவை உட்பட மேலும் சில முக்கியமான விடயங்களில் அரசின் குறைநிறைகள் குறித்து மேற்படி சந்திப்புகளின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
அரசுக்குக் கடும் அதிருப்தி
 
குறிப்பாக, இலங்கையின் தற்போதைய அரசின் செயற்பாடுகளைப் பகிரங்கமாக சாடிவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளமையானது அரசுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அங்கு சென்று இங்குள்ள நிலைமைகளைத் தெளிவுபடுத்துவதற்கு முன்னர், அவைகுறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியிடம் டில்லி நிர்வாகம் கேட்டறிந்துள்ளமை அரசுக்குச் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.
 
அதுவும் ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில், மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.
 
அதேவேளை, மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத் தொடரில் இலங்கை விடயத்தில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் ஆய்வுகளை நடத்திவரும் இந்தியா, கடந்த தடவை நடைபெற்ற 19 ஆவது மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக  வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்திருந்தாலும் கடும்போக்குடைய அந்தப் பிரேரணையை அமெரிக்காவுடன் பேச்சுநடத்தி மென்போக்கான பிரேரணையாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமையும் தெரிந்ததே.
 
இதற்கிடையில், ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இராஜதந்திரச் செய்றபாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
 
இதன் ஓரங்கமாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் உயர்மட்டப் புள்ளிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.
 
அமெரிக்காவின் திரிசூல இராஜதந்திரக் குழு கொழும்புக்கு பயணம் மேற்கொண்ட பின்னரே அதனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் கூட்டமைப்பு தனது வெளிநாட்டுப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.
26 ஜனவரி 2013, சனி 8:10 மு.ப

சந்திரிக்காவின் டெல்லி விஜயம் இலங்கை அரசுக்கு எதிரானதா?: இந்திய ஊடகங்கள் கேள்வி



chandrikambandaranayakesa.jpg



இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டெல்லி விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சில கேள்வி எழுப்பியுள்ளன.

 

 

இலங்கையின் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மார்ச் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில் எம் மாதிரியான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது குறித்து இந்தியா தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக சந்திரிகாவை டெல்லிக்கு வரவழைத்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.



எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகளை அமுல்படுத்துவதில் இலங்கை அரசு காட்டும் அக்கறை, பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கியமை, நீதித்துறையுடனான மோதல்,  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை  மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இம்முறை அதிக அக்கறை செலுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2723

 

 

அதுவும் ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில், மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.

 

இந்த வசனத்தை தவிர செய்தியில் வேறு ஒன்றும் இல்லை.

இந்த முறை இலங்கை அரசை தண்டிக்க அமெரிக்காவிடம் நிறைய காரணங்கள் இருக்கின்றன. போன முறையளவுக்கு இந்தியாவால் இலங்கையைக் காப்பாற முடியாது. அதையிட்டு இந்தியா சோர்வடைந்திருக்கிறது.

 

மேலும் போன முறை பிரேரணை நிறைவேற்றப்பட்ட போது மன்மோகன் சிங் மகிந்தாவிடம் சவுக்கடி மட்டும்தான் வாங்கினார். இந்த முறை ஏதாவது நிறைவேற்றப்பட்டால் மன்மோகன் சிங்கை நிலத்தில் இழுத்து விழுத்திவிட்டு மகிந்த அவர் மேலால் ஏறித்தான் நடந்து போவார். அந்த பீதியில்தான் இந்தியா தவிக்கிறது.

 

சந்திரிக்கா அமெரிக்க சார்பு அரசியல்வாதி. கிளின்ரன் குடும்ப நண்பி. இந்தியாவுக்கு பிடிக்காத அம்சங்கள். அவவை இந்தியா ஏற்க தயாரானால் கண்ணை மூடிக்கொண்டு ஐ.நாவில் வர இருக்கும் பிரேரணைகளுக்கு அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுக்கட்டும். மகிந்தாவை அகற்றும் கைங்கரியத்தை அமெரிக்கா பொறுப்பெடுத்துக்கொள்ளும்.

Edited by மல்லையூரான்

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் சர்வதேசமும் சிங்களமும் அந்த போர்குற்றங்களை கையில் எடுக்கும் நிலையை மகிந்த உருவாக்கி கொடுத்துள்ளார்.

 

ஆனால் அவர்கள் பயன்படுத்துவார்களா? ... காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் எவருமே தனது நாட்டுக்கு குந்தகம் செய்யமாட்டார்கள்.

அதில் அவர்களுக்கும் வேற்றுமை கிடையாது.

சிங்களவர் எவருமே தனது நாட்டுக்கு குந்தகம் செய்யமாட்டார்கள்.

அதில் அவர்களுக்கும் வேற்றுமை கிடையாது.

சந்திரிக்காவுக்கு பிள்ளைகளை மேலே கொண்டுவர ஆசை இருக்காலாம். ஆனல் அது வெளிநாடுகளில் வளர்ந்தவர்களால், நாமல், யசோதர போன்று இலங்கை அரசியலின் தீயிலும், நீரிலும் போட்டு போட்டு தடி எடுத்த அசல் உருக்கு இயல்புடன் போட்டி போட முடியாது. சந்திரிக்காவுக்கும் அது நன்கு தெரியும். எனவே அந்த கனவுக்காக இலங்கை மீது போர்குற்றம் சுமத்தி சர்வதேச விசாரணையை அழைக்க மாட்டா. (அனால் இந்த உண்மையை அமெரிக்க அரசியல் வாதிகளுக்கு எடுத்து சொல்ல தமிழர்களிடம் ஒரு துரும்பும் இல்லை.) ஒருவேளை நீதியை நிலை நாட்ட விக்கிரமபாகு போன்றொர் விரும்பலாம். ஆனால் அவர்கள் அது சர்வதேசத்தால் போர்குற்ற விசாரணை இலங்கைக்கு வெளியே வருவதை விரும்ப மாட்டர்கள்

 

மேற்குநாடுகளின் நிலைப்பாட்டை நங்கு அறிந்து வைத்திருக்க கூடிவர்தான் சந்திரிகா. அவரை வைத்து மேற்குநாடுகளை நாடிபிடித்துபார்த்தால் வரவிருக்கும் மார்சில் இலங்கை எங்கே, மேற்கு நாடுகள் எங்கே; இதை வைத்து  தனக்கு ஆதாயமான பாதை எது என்பவற்றை இந்தியா கணிக்க முயல்கின்றது என்பது உண்மைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.