Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் 15 ஆயிரம் குடிமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 15 ஆயிரம் குடிமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

அச்சம் காரணமாக பொது இடங்களில் தஞ்சம்

மன்னார் பேசாலை, வாங்காலைப்பாடு பகுதிகளில் சனிக்கிழமை கடற்படையினர் நடத்திய மிக மோசமான தாக்குதல்களையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பொது மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அச்சம் காரணமாக வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை காலை பேசாலை கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் கடற் படையினருக்குமிடையே மிக உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றன.

இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட மிகக் கொடூரமான தாக்குதல்களால் ஐந்து மீனவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் 47 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை விட பேசாலை காட்டாஸ்பத்திரி, வாங்காலைப்பாடு கடற்கரையோரங்களில் அமைந்திருந்த 300 க்கு மேற்பட்ட வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் 60 க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.

அத்துடன், பேசாலை புனித வெற்றிநாயகி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொது மக்கள் மீதும் கிரனைட் மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டன.

கடற்படையினரின் இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்தே பேசாலைப் பகுதியைச் சூழவுள்ள திருத்தோப்பு, நடுக்குடா, வங்காலைப்பாடு, காட்டாஸ்பத்ரி, துள்ளுக் குடியிருப்பு, பாவிலுப்பட்டான் குடியிருப்பு ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கரிசல், புதுக்குடியிருப்பு, தாராபுரம், எருக்கலம்பிட்டி ஆகிய முஸ்லிம் பகுதிகளிலுள்ள பாடசாலைகள், பொது நோக்கு மண்டபங்கள், பாலர் பாடசாலைகள், மீனவர் கூட்டுறவுச் சங்க மண்டபங்கள் என்பவற்றிலேயே இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.

இதேவேளை, பேசாலையைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் வீடுகளில் தங்காது அங்குள்ள வெற்றிநாயகி தேவாலயத்திலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கின்றனர்.

கரிசல், புதுக்குடியிருப்பு, தாராபுரம், எருக்கலம்பிட்டி பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அரச அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு உதவிகளையும் செய்து வருவதைக் காணக் கூடியதாகவிருந்தது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல், அரச அதிபர் வி.விஸ்வலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிஷோர் ஆகியோர் நேரடியாகச் சென்று பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதனைவிட, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பங்குக் குருமார்களும் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

அவசர வேண்டுகோள்

இதேநேரம், பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டுமென்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் ஆகியோர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடற்படையினரின் தாக்குதலில் பலியான அப்துல் ரகுமான் லதீப் (வயது 29) என்ற மீனவரின் மனைவி தமது மார்க்க முறைப்படி `இத்தா' இருக்கக் கூட முடியாத நிலையில் தனது மூன்று சிறு குழந்தைகளுடன் கரிசல் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள பரிதாப நிலைமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லொறி குடை சாய்ந்து ஆறு பேர் படுகாயம்

மேலும், கட்டாஸ்பத்திரி பகுதியிலிருந்து எருக்கலம் பிட்டி பகுதிக்கு இடம்பெயர்ந்த பொது மக்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைமன்னார் 5 ஆம் கட்டைச் சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த 6 பேரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 சடலங்கள் ஒப்படைப்பு

மன்னார் மாவட்ட மேலதிக நீதிமன்ற நீதிபதி ரி.யே.பிரபாகரன் உத்தரவின் பேரில் நேற்று நண்பகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 6 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடற் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த யேசுதாசன் யூட் நிக்சன் (வயது 24), மெனுவல் கிளேரம்மா லீயா (வயது 70), துரை ராஜா விஜயகுமார் (வயது 39), சாடலிங்கம் லிங்கநாதன் (வயது 20), சிறிலப்பர் கெனியூட் (வயது 24) ஆகிய 5 பேரின் சடலங்களே அவர்களது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

இதேநேரம், மன்னார் பொது வைத்தியசாலை ஆண்கள் பிரிவில் 25 பேரும், பெண்கள் பிரிவில் மூன்று வயதுச் சிறுவன் உட்பட 9 பேரும், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினமும் பேசாலை, வங்காலைப்பாடு ஆகிய பிரதேசங்களும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் பொது மக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

மன்னார் நகரில் வர்த்தக நிலையங்கள் திறந்திருந்த போதிலும் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்து ஒரே சோக மயமாகவே காணப்பட்டது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.