Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் இராஜதந்திர முதிர்ச்சியின் வெளிப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோவில் புலிகள் நடந்துகொண்டவிதம்

இராஜதந்திர முதிர்ச்சியின் வெளிப்பாடு!

தமிழக சஞ்சிகை கருத்து

போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந் தம் தொடர்பான பேச்சுகளுக்காக நோர்வே சென்ற விடுதலைப் புலிகள் அங்கு நடந்துகொண்ட விதம், இராஜதந்திரத்துறையிலும் புலிகள் முதிர்ச்சி பெற்றவர்கள் என்பதையே மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் "தென்செய்தி' சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. "புலிகள் கொடுத்த பதிலடி' என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தப் பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நோர்வேயின் தலைநகரமான ஒஸ் லோவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சு முறிவடைந்துவிட்டது. கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு மற்றும் அதனது நடைமுறை தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் சிங்கள அர சும், விடுதலைப் புலிகளும் ஒஸ்லோ பேச்சுக்கு ஒத்துக்கொண்டனர். ஆனால், சிங்கள அரசு அதிகாரமுள்ள உயர்மட்டக் குழுவை இப்பேச்சுக்கு அனுப்பாததன் மூலம் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது.

விடுதலைப் புலிகளின் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன், காவல்துறைத் தலைவர் நடேசன், சமாதானச் செயலகப் பணிப் பாளர் புலித்தேவன் ஆகிய உயர்மட்டத் தலைவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார் கள்.

சிங்கள அரசு அதிகாரமற்ற ஒரு குழுவை அனுப்பியதன் மூலம் பேச் சைக் குழப்பமுடிவு செய்ததை விடுதலைப் புலிகள் மிகக்கடுமையாக ஆட்சேபித்தனர். ஆனாலும், நோர்வேயின் வேண்டுகோளை மதித்து புலித்தேவனை பேச்சுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், சிங்களத் தூதுக்குழு பேச்சைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்துவிட்டது.

இந்த உண்மையை மறைத்துப் பேச்சு முறிவுக்குப் புலிகளே காரணம் என சிங்களத் தரப்பு பொய்ப்பிரசாரம் செய்துவருகிறது.

தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்

¦¿üÈ¢ì¸ñ ¾¢ÈôÀ¢Ûõ ÌüÈõ ÌüȧÁ.....
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்டிக் நாடுகளின் பதில் யூன் 29 இல் வெளியாகும்: ஹான்ஸ் பிறட்ஸ்கர்

நோர்டிக் நாடுகளின் பதில் எதிர்வரும் வியாழக்கிழமை (29.06.06) வெளியாகும் என்று இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருதரப்பினருக்கும், யூன் 8 ஆம் திகதி நோர்வே அரசு அனுப்பிய கடிதத்திற்கு, நேற்று முன்தினம் விடுதலைப் புலிகள் பதில் அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்திற்கான பதிலை நோர்வே எப்போது வழங்கும் என்று கேட்கப்பட்ட போது, நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசித்த பின்னர், யூன் 29 இல் அதற்கான பதில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் பதில் அனுப்பியுள்ளதை உறுதிசெய்துள்ள ஹான்ஸ் பிறட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை, அனுசரணையாளர்கள் என்ற வகையில் தாம் ஏற்றுக்கொள்கின்ற போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையைக் காரணம் காட்டி, அந்நாடுகளின் பிரதிநிதிகளை கண்காணிப்பில் ஈடுபட வேண்டாமெனக் கோரியிருப்பது கவலைக்குரியதுதான் என்று குறிப்பிட்டார்.

தடை செய்த நாடுகளின் அங்கத்தவர்கள், நடுநிலைமையுடன் செயற்பட வாய்ப்பில்லை என்பதில் விடுதலைப் புலிகள் தெளிவான கருத்துடன் உள்ளனர் என்று தெரிவித்த பிறட்ஸ்கர், தடைசெய்த பின்னர், உறவை முன்போன்று பேணலாம் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை என்று விளக்கமளித்தார்.

சர்வதேச கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பணியை பொறுப்புணர்வுடன் செய்ததாகவே நாம் கருதுகிறோம். ஐந்து நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளும் கடந்த நான்கரை வருடங்களாக, மிகச் சிறப்பாக தங்கள் பணியைப் புரிந்துள்ள போதிலும், ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர், அவர்களது பணி நடுநிலைமையுடையதாக இருக்குமென விடுதலைப் புலிகள் கருதவில்லை. இருப்பினும் இது எமக்குக் கவலையளிக்கும் ஒரு விடயம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு திரும்பிய பின்னர், சிறிலங்கா அரச தரப்பினரைச் சந்திக்கவுள்ள பிறட்ஸ்கர், அவர்களது பதில் தொடர்பாக விவாதிக்கவுள்ளதாகத் தெரிவித்ததுடன், இரு தரப்பினருக்குமான பதில் யூன் 29 இல் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்.

பிறிதொரு கேள்விக்குப் பதிலளித்த பிறட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் இந்தக் கருத்துக்களால், உடனடியாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும், தொடர்ந்தும் தங்களது பாதுகாப்பை கண்காணிப்புக் குழவினருக்கு வழங்க விடுதலைப் புலிகள் பூரண சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்திருக்கும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டிய பிறட்ஸ்கர், பொதுமக்கள் மீதான பல்வேறு தாக்குதல்கள், கெப்பிட்டிக்கொல்லாவ, பேசாலை தாக்குதல்கள் மற்றும் சிறிலங்கா விமானப் படையினரின் விமானக் குண்டுத் தாக்குதல்கள் என்று அனைத்தும் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதையே காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.