Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிந்திய நிலைமையும் தென்னிலங்கைப் போக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய நிலைமையும் தென்னிலங்கைப் போக்கும்

ஈழத்தில் குண்டுமழை பொழிந்து தமிழர்களை அழிக் கும் கொடுமை நடந்துகொண்டிருப்பது குறித்தும், அவர் களைக் காப்பாற்ற இந்திய மத் திய மற்றும் தமிழக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார்.

தமிழகத்தின் தேசிய முற்போக்குத் திராவிடக் கழ கத் தலைவரும், தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான நடிகர் விஜயகாந்த்தும் ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றார்.

ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து மீண்டும் வலுவான குரல் எழும்பத் தொடங்கியிருப்பது ஈழத் தமிழர் களுக்கு ஒரு தார்மீகப் பலமாகவும், பாதுகாப்பாகவும் உருவெடுத்து வருகின்றது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து எழுப்பப் படும் குரல்கள், வழமையாக இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்டுகின்றன. வீரமணி யின் அறிக்கை கூட அந்த இரண்டு விடயங்களைத்தான் வலியுறுத்துகின்றது.

""நாட்டால் வேறுபட்டாலும் பண்பாட்டால் ஒன்று பட்ட தமிழின உணர்வாளர்கள் ஈழத் தமிழர்கள் பந் தாடப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க லாமா? உடனடியாக மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு சுமுகத் தீர்வு ஒன்றைக் காணத் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

""இலங்கை இராணுவத்திற்கு இந்திய மத்திய அரசு எந்த உதவிகளை, எந்த ரூபத்தில் செய்தாலும் அது எரியும் நெருப்பை அணைப்பதற்குப் பதிலாக பெற் றோலை ஊற்றுவதற்குச் சமமாகி விடும்.''

என்று வீரமணி தமது அறிக்கையில் தெரிவித் திருக்கின்றார்.

அதாவது

ஈழத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய மத்திய மற்றும் தமிழக அரசுகள் உதவ வேண்டும். அத்தோடு இலங்கை அரசுக்கு இந்திய மத்திய அரசு எந்த உதவிளையும் வழங்கக் கூடாது.

இந்த இரட்டை விடயங்களே தமிழகத்திலிருந்து வலுவான குரலில் இப்போது முன்மொழியப்படுகின் றன.

அத்தோடு, ஈழத் தமிழர் தாயகம் மீது தென்னிலங் கைச் சிங்கள அரசு கண்மூடித்தனமாக விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்துவதும், தமிழகத்தில் பெரும் சீற்றத்தை உருவாக்கியிருப்பதை உணர முடிகின்றது.

""என்னதான் தீவிரவாதப் பிரச்சினை இருந்தாலும் சொந்த நாட்டுக் குடிமக்களின் குடியிருப்புகள் மீது அந்த நாட்டு இராணுவம் அது ஏதோ வெளிநாடு போலக் கருதி வான்வழித் தாக்குதல்களை, குண்டுவீச்சுக்களை நடத்து வது எந்த வகையில் நியாயம்?

""ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அதி தீவிரவாதிகளின் கண்ணி வெடி மற்றும் வன்முறைகளுக்காக இந்திய அரசு தனது இராணுவத்தை ஏவி விமானக் குண்டு வீச்சா நடத்துகின்றது? உலகில் எந்த ஒரு நாட்டிலும் நிகழாத இக்கொடுமை கொடூரம் ஈழத்தில் இடம் பெறுவது மனித நேயம் உள்ளவர்களைத் துடித்தெழ வைக்க வில்லையா?''

என்று கேள்வி எழுப்புகின்றார் வீரமணி. நடிகர் விஜயகாந்த் போன் றோரும் இதே கேள்வியைக் கேட் டிருக்கின்றனர்.

தமிழர் தாயகம் மீதான இலங்கை அரசுப் படைகளின் விமானக் குண்டு வீச்சுக் கொடூரம் தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் சீற்றமான உணர்வலைகளை எழுப்பத் தவறவில்லை.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, தனது நாட்டுக் குடிமக்களைத் தானே குண்டு வீசி அழிக்கும் வன்செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையே கிளர்ந்தெழுந்து கண்டித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மேற்படி விமானக் குண்டு வீச்சு நடவடிக்கைகள், அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகப் பிரதேசத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் வகை, தொகையின்றி நீதி, நியாயமின்றி அரச துருப்புகளாலும், ஒட்டுப்படைக ளாலும் படுகொலை செய்யப்படுவது, தமிழர்கள் தாக்கி, அடக்கி, ஒடுக்கப்படுகின்றமை போன்ற அரச தரப்பின் தமிழின விரோத அடாவடித் தனங்கள், இலங்கை விவ காரத்தில் தற்போது அமைதி பேணும் தமிழகத்தை மீண் டும் எரிமலையாக்கி விடக் கூடும் என்ற நிலைமையை உருவாக்கி வருகின்றன.

இந்த விவகாரத்தில் நீறுபூத்த நெருப்பாக அடங்கிக் கிடக்கும் தமிழகத்தை ஊதி, உசுப்பேற்றும் வேலையை கைங்கரியத்தை தென்னிலங்கை அரசுத் தரப்பு வழி நடத்துகின்றது.

தமிழின வன்முறைக்கு எதிரான இன உணர்வுத் தீ மீண்டும் தமிழகத்தில் சுலபமாகப் பற்றி, விளாசி எரியக் கூடிய சாதகமான அரசியல் சூழ்நிலை தமிழகத்தில் கருக்கட்டியுள்ள நிலைமையில், அது குறித்துப் புரிந்து கொள்ளாது தனது கைவரிசையைக் காட்ட முயல்கிறது தென்னிலங்கைச் சிங்களம்.

தென்னிந்தியாவில் தமிழகத்தில் மாறிவரும் கள யதார்த்தங்களைப் புரியாமல் தென்னிலங்கை காய் நகர்த்த முயல்வது நடவடிக்கைகளை எடுப்பது அதற் குப் பெரும் பின்னடைவான சிக்கல்களை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.

-உதயன்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11587

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=11581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.