Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடத்தல், கொலை, விபத்து

Featured Replies

யாழில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டார்

 

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை இன்று செவ்வாய்க்கிழமை மாலை கடத்தியுள்ளனர்.


செம்மணி பகுதியில் வைத்தே குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57946--15-.html



அடிகாயங்களுடன் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; கோப்பாயில் சம்பவம்

 

யாழ். கோப்பாய் பிரதேசத்தில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோப்பாய் மத்தி ஆசியப்பர் கோவிலடியிலுள்ள வீட்டு கிணற்றில் கமலதீபன் கயல்விழி (வயது 23) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=265041801430247169



நண்பனுக்காக உயிரை விட்ட நண்பன்..

 

கல்லடி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன மாணவன் நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

 

நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன மட்டக்களப்பு கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயது மாணவன் ஜெகநாதன் டிலுஷ்காந்; மட்டக்களப்பு மஞ்சன்தொடுவாய் கடற்கரை நீர் ஓடைக்கு அருகாமையிலுள்ள நாவற்குடா கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

 

DSC02402.JPG

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2764

  • தொடங்கியவர்

யாழில்,15 வயது சிறுமியை கடத்தியவர் பொலிஸில் சரண் 

 

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய இளைஞன் சிறுமியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்றிரவு சரணடைந்துள்ளார். பெணடிக் வீதியைச்சேர்ந்த 21 வயதான சுரேஸ் என்பவரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார்.

 

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே அருள்நேசன் ஆருனியா (வயது 15) சிறுமியை செவ்வாய்க்கிழமை மாலை செம்மணி பகுதியில் வைத்து கடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த சிறுமியுடன் பொலிஸில் இளைஞன் சரணடைந்துள்ளார.


குறித்த இளைஞன் சிறுமியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

இந்நிலையில் சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் இளைஞனை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்திவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/58012--15-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.