Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு சேறு பூச நினைப்பதெல்லாம் நேரத்தை வீணடிக்கும் செயல்; அடித்துக் கூறுகிறார் சிறிதரன் எம்.பி

Featured Replies

எமது மக்களைப் பாதுகாக்கின்ற எங்கள் மீது சேறு பூசி எங்களையும் மக்களையும் அந்நினியப்படுத்திவிட்டு மாகாணசபைத் தேர்தலில் ஓரங்கட்டி தாங்கள் ஆட்சியைக் கைப்பெற்றும் நோக்கத்தில் சிறிலங்கா அரசாங்கம் போட்ட நாடகமே எனது கிளிநொச்சி அலுவலகத்தில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

 

மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்தாவது,

 

கடந்த 12ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள அறிவகமான எனது அலுவலகம் 35 பேர் கொண்ட ரி.ஐ.டி குழுவினரால் சோதனையிடுவதாக கூறி உள்நுழைந்தவர்கள் தாங்கள் பைகளில் கொண்டு வந்தவற்றை வைத்துவிட்டு எனது அலுவலகத்தில் ஆபாசப்படங்கள், ஆணுறைகள், வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டதாக காட்டியிருந்தனர். இது அப்பட்டமான பொய் அவ்வாறு அங்கு எதுவும் இருக்கவில்லை.


இந்த சோதனை பிற்பகல் 2.30 மணியில் இருந்து இரவு 7மணிவரை இடம்பெற்றிருந்தது. எனினும் நான் அன்றைய நாள் நாடாளுமன்ற அமர்வுகள் இருந்தமையினால் கொழும்பில் இருந்திருந்தேன்.

 

எனினும் இவர்கள் அங்கு இருக்கப்பட்டதாக கூறிய பொருட்களையும் எடுத்து வந்து எனது பிரத்தியேக செயலாளர் இலட்சுமி காந்தன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் ஆகிய இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அச்சுறுத்தி எனது அலுவலகத்தில் இருக்கப்பட்டதாக கூறப்படும் பொருட்களை கையில் எடுத்து வைத்திருக்குமாறு கூறி பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்துள்ளனர்.


அத்துடன் அச்சுறுத்தி பல்வேறு இடங்களிலும் கையொப்பமும் பெற்றுச் சென்றுள்ளனர். மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதனை 3பேர் இழுத்துச் சென்று விலங்கிட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

 

அத்துடன் குறித்த சம்பவத்தையடுத்து 7.30 மணியளவில் இராணுவ புலனாய்வாளர்கள் என்று கூறி மேலும் பலர் எனது அலுவலகத்திற்குள் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும் கடந்த 22ஆம் திகதியும் கொழும்பில் இருந்து சரத்சந்திர தலைமையிலான ரி.ஐ.டி குழுவொன்று மீண்டும் எனது அலுவலகம் சோதனையிடப்பட்டு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்து விட்டு இருந்த ஒரு கணணியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.


இது குறித்து எனக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. நான் சம்பவம் தொடர்பாக பாராளுமன்றில் காட்டமான முறையில் உரையாற்றியிருந்தேன். அத்துடன் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோரும் சபாநாயகருக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

 

அத்துடன் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் பாதுகாப்பினை வழங்கும் படியும் அவர்களால் கூறப்பட்டிருந்தது.


அதனையடுத்து பொலிஸ் மா அதிபரை அழைத்து உடனடியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி சபாநாயகர் கூறியும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

 

ஒரு பாராளுமன்ற சபாநாயகர் கூறிய கருத்திற்கு அதிகாரம் இருக்கின்றது என்று கூறி முன்னாள் பிரதமநீதியரசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதே சபாநயகர் பாதுகாப்பு போடும் படி கூறிய இந்த விடயத்தினை ஏன் அவர்கள் செய்யவில்லை. இது அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி.


அத்துடன் எமது அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட பொருட்களை அச்சிட்டு பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கடைகள் என ஈ.பி.டி.யினரும் புலனாய்வாளர்களும் விநியோகித்து வருகின்றனர்.  இவ்வாறு ரி.ஐ.டியினரால் எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு நீதிமன்ற ஆதாரத்திற்கு பயன்படுத்தாமல் இவ்வாறு துண்டுப்பிரசுங்களுக்கு போனது இதிலிருந்து நன்றாக விளங்கிக் கொள்ள முடியும் மக்களையும் எங்களையும் அந்நியப்படுத்துவதற்கு போடப்படும் நாடகம் என்று.

 

இருப்பினும் மக்கள் எங்களை நன்றாக அறிவார்கள். எம்மை அவர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் இதனால் இவர்கள் எங்களையும் மக்களையும் அந்நியப்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கி எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. அத்துடன் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெளியியேற்றிவிட வேண்டும் என்பதற்காக எமது அரசியல் நடவடினக்கையினை முடக்கிக் கொள்வதற்கே முயற்சிக்கின்றனர்.


இவற்றுக்கு அடுத்த படியாக வன்னியில் நடந்தேறுகின்ற விடயங்களை நான் சர்வதேசம் வரை அம்பலப்படுத்தி வருகின்றறேன் என்பதும் அவர்களுக்கு இருக்கும் பிரச்சீனையாக உள்ளது. அதன்படி இராணுவத்திற்கு பெண்களை இணைத்துக் கொண்டு அவர்களை கொடுமைப்படுத்தியது முதல் பாடசாலைகளில் சிங்களம் கற்பிக்க ஆசிரியர்களாக வந்த இராணவத்தினரை நிறுத்தியமை என பலவிடயங்கள்.இவை அவர்களுக்கு தடையாக உள்ளன.

 

எனவே எமது மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு எங்களிடம் உள்ளது. எவ்வாறான தடைகள் வந்தாலும் நாம் எமது மக்களுக்காக பாடுபடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

DSCF8915.jpg

 

DSCF8921.jpg

 

http://onlineuthayan.com/News_More.php?id=186571803731554164

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.