Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"விக்ரம்' படத்தின்போது நடிகர் கமல்ஹாசன் குறித்து எம்ஜிஆருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்

Featured Replies

"விக்ரம்' படத்தின்போது நடிகர் கமல்ஹாசன் குறித்து எம்ஜிஆருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தரத் தயாராக இருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

 

 

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:


"வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி' என்ற தலைப்பில் புதன்கிழமை கடிதம் ஒன்று எழுதினேன். அதில் கமல்ஹாசன் தொடர்பாக எம்ஜிஆருக்கு ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய கடிதம் குறித்தும் குறிப்பிட்டிருந்தேன்.

 

இது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், எம்ஜிஆருடன் தினமும் பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு இருந்ததால் எதற்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார்.


இதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தன் பேட்டியில் கூறியுள்ளார்.

 

நான் எழுதியதற்குப் போதுமான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.  முதல்வர் என் மீது வழக்கு போடும்போது, நீதிமன்றத்தில் ஆதாரத்தைக் காட்ட நான் (கருணாநிதி) தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

http://dinamani.com/tamilnadu/article1444895.ece

  • தொடங்கியவர்

கமல் குறித்து எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினேனா? கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா மறுப்பு

 

நடிகர் கமல்ஹாசன் குறித்து அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தாம் எந்தக் கடிதமும் எழுதவில்லை என முதல்வர் ஜெயலலிதா மறுப்புத் தெரிவித்துள்ளார். கடிதம் எழுதியதாகக் கூறிய திமுக தலைவர் கருணாநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

விஸ்வரூபம் படம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அளித்த பேட்டி:


விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையில், எனக்கு தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று தனியார் தொலைக்காட்சி சேனல் மீதான வர்த்தக ஆர்வத்தில் தடை விதிக்கப்பட்டதாகவும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை, பல பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன. அந்த தனியார் தொலைக்காட்சி ஜெயா டி.வி.

 

ஜெயா தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதிமுக ஆதரவுடன் அந்தத் தொலைக்காட்சி நடத்தப்படுகிறது. எனக்கோ அல்லது கட்சிக்கோ நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. தொலைக்காட்சியில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அதனுடைய தினசரி நடவடிக்கைகளில் நான் பங்கேற்பதுமில்லை. இந்தச் சூழ்நிலையில், விஸ்வரூபம் படத்தை ஜெயா டி.வி.க்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் கூறியுள்ளனர். என் மீது சுமத்தப்பட்டுள்ள மோசமான இந்த குற்றச்சாட்டைக் கூறியவர்கள் மீதும் அதை வெளியிட்ட ஊடகங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.


கமல் முடிவு செய்ய முடியாது:
வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வர வேண்டும் என கமல்ஹாசன் கூறிய கருத்துகளாலும் இந்த நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார்கள். யார் பிரதமராக வர வேண்டும் என்பது குறித்து கருத்துக் கூற கமல்ஹாசனுக்கு சுதந்திரம் உள்ளது. வேட்டி கட்டிய ஒருவர் பிரதமராக வர வேண்டும் எனக் கூறுவது அவருடைய சொந்தக் கருத்து.

 

நாட்டின் பிரதமரை கமல்ஹாசன் தேர்வு செய்ய முடியாது. நாட்டிலுள்ள 100 கோடி வாக்காளர்கள் வாக்களித்த பிறகே, வருங்கால பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இத்தகைய சூழலில், நான் எதற்கு கமல்ஹாசன் மீது தனிப்பட்ட முறையில் அவர் கூறிய கருத்துக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடிதம் எழுதவில்லை: கமல்ஹாசனைக் குறைகூறி, 1980-களில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நான் கடிதம் எழுதியதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அந்த காலகட்டத்தில், முதல்வர் எம்.ஜி.ஆரை தினமும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் எம்.பி.யாகவும், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தேன். முதல்வர் என்ற முறையில் அவர் தினமும் காலையில் தலைமைச் செயலகம் செல்வார். நான் கட்சி அலுவலகம் செல்வேன். பிற்பகலில், அவரை அவருடைய மாம்பலம் அலுவலகத்தில் மதிய உணவுக்காகச் சந்திப்பேன். அப்போது, கட்சியினர் மற்றும் பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் குறித்து எம்.ஜி.ஆரிடம் கூறுவேன்.

அவர் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பார்.

 

 

எனவே, தினமும் அவரைச் சந்திக்கும் வழக்கம் இருந்த நிலையில் எதற்காக கடிதம் எழுத வேண்டும். நடிகர் கமல்ஹாசன் குறித்து கடிதம் எழுதினேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறிய கருத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.


எனவே, அவருக்கு எதிராகவும், அதை வெளியிட்ட ஊடகங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை தடை செய்ததில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தத் தொடர்போ, ஆர்வமோ இல்லை. தனிப்பட்ட முறையில் கருணாநிதி எனக்கு எதிரியில்லை. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் திரைப்படங்களை அடிக்கடி தயாரித்து வெளியிடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் கருணாநிதியை எதிரி எனக் கருதினால், அந்தப் படங்களுக்கும் தடை விதித்திருக்கலாமே. அதைச் செய்யவில்லை.


எனவே, கமல்ஹாசன் மீது எனக்கு எந்தப் பகையும் இல்லை. படத்துக்கு தடை விதிக்கப்பட்டதில் எத்தகைய உள்நோக்கமும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

 

http://dinamani.com/tamilnadu/article1444907.ece

  • தொடங்கியவர்

01022013-md-hr-2%20copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.