Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் தஞ்சமடைந்தோரில் இலங்கை அகதிகளே அதிகம்பேர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தஞ்சமடைந்தோரில் இலங்கை அகதிகளே அதிகம்பேர்

பிற நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளில் அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களே என்று தமிழகப் பத்திரிகையான "தினமலர்' தெரிவிக்கின்றது.

நேற்று கடைப்பிடிக்கப்பட்ட அகதிகள் தினத்தையொட்டி "தினமலர்' நாளேடு வெளி யிட்ட ஆக்கம் ஒன்றிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1983இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்ட போதுதான் அகதிகள் இந்தியாவிற்கு வரத்தொடங்கினர். இந்தியாவில் உள்ள அகதிகளில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

1983முதல் 1987வரை ஒருலட்சத்து 34ஆயிரத்து 53 அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி 25ஆயிரத்து 885 அகதிகள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். மீண்டும் ஏற்பட்ட உள்நாட்டுப் போரால் அகதிகள் தமிழகத்தை நோக்கி வரத்தொடங்கினர். இதனால், 1989இல் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது நிறுத்தப்பட்டது.

1989முதல் 1991வரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 37பேர் அகதிகளாக வந்தனர் இவர்கள் தமிழகத்திலும், ஒரிஸாவிலும் 298 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 1992 முதல் 1995வரை தாயகம் திருப்பி அனுப்பிவைக்கப்படும் முயற்சியில் 31ஆயிரம் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 1991இல் ராஜீவ் கொலைக்குப் பின் இலங்கை அகதிகளை தாயகம் அனுப்பும் முயற்சி துவக்கப்பட்டது. இதில் 23ஆயிரம் பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2005 இல் 2700 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனர். அகதிகளுக்கான ஐ.நா.தூதரகத்தின் சமீபத்திய தகவல்களின்படி 115 நாடு களில் அகதிகளாக வாழ்வோர் மொத்த எண் ணிக்கை 1.9கோடி. இந்தியாவில் அகதிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39ஆயிரத்து 283 இதில் இலங்கை அகதிகள் எண்ணிக்கை மட்டும் 57ஆயிரத்து 274 பேராகும்.

இவர்களில் தமிழகத்தில் மட்டும் 56ஆயி ரத்திற்கும் அதிகமான இலங்கையைச் சேர்ந்த அகதிகள் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் இலங்கையில் மீண்டும் உள்நாட்டுபோர் மீண்டிருப்பதால் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 34 மாதங்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் அதி கமான இலங்கை அகதிகள் இந்தியாவில் தஞ்சம்புகுந்தனர் என்று தெரிவிக்கப்பட் டது.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமாகிவரும் உலகம்

இன்று உலகில் இரண்டு கோடியே எழுபது இலட்சம் பேர் அகதிகளாக வாழ்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அண்டை நாட்டிலுள்ள நமது ரத்த சொந்தங்களான ஈழத்தமிழர்களோ கடந்த கால் நூற்றாண்டாக உலகமெங்கிலும் அகதிகளாகப் பரவிக் கிடக்கிறார்கள். போர்ச் சூழலின் பதுங்கு குழிக்குள்ளிருந்து வெளியேறி வேற்று நாட்டு அகதியாக வாழ்தலென்பது சட்டியிலிருந்து தப்பி அடுப்பில் விழுந்த கதையாக ஆகி விடுவதும் உண்டு.

தனிமை/ பிரிவு/ அந்நியமாதல்/ காணாமல் போதல்/ கைது இப்படி மனத்தளவிலும் கல்வி பெறுவது, மொழிச் சிக்கல், தங்குமிடங்கள், காலநிலைச் சிக்கல், வேலை வாய்ப்புப் பிரச்சினைகள், நிறவெறித் தாக்குதல்கள் எனப்புறநிலைச் சிக்கல்களும் சூழ்ந்து கொள்கின்றன. வேலை வாய்ப்போ உணவு விடுதிச் சமையலறை தட்டுமுட்டுச் சாமான்கள் கழுவுதல், கண்காட்சிகளில் விளம்பரப் பொம்மையாக நிற்றல், பின்னிரவில் பேப்பர் போடுதல், கசாப்பு ஆலைகளில் இறைச்சி வெட்டுதல், உரித்தல் இப்படியான வேலைகள் அல்லது இதைவிட அடிமட்டத்து வேலைகள்.

1983 கறுப்பு ஜூலையில் வெடித்துப் பரவிய இலங்கை அகதிகள் தொகை, இடையில் சில காலம் மட்டுப்பட்டிருந்தது. தற்போது மீளவும் தொடர்ந்து தனுஷ்கோடி மண்டபம் முகாம்களுக்கு அகதிகள் வருகை அதிகரித்து வருவதான செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

ஐ.நா.சபை. மனித உரிமை பேணும் அமைப்புக்கள் பாப்பரசர், அரசியல் நோக்கர்கள் யாவரும் உலக அளவில் அகதிகள் தொகை உயர்வது குறித்து கவலை தெரிவித்தும் உலக சமாதானத்தின் கொடி அரைக் கம்பத்தில் பறப்பதுபோல் தொடர்ந்து அகதிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

துன்புறுத்தப்படுதலுக்கு எதிராக யாதொருவரும் பக்கத்து நாடுகளிடம் புகலிடம் தேடவும் அனுபவிக்கவும் உரிமை உண்டு என்று உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (பிரிவு 14) மற்றும் அகதிகள் குறித்த சர்வதேச உடன்பாடு (1951), அகதிகள் நிலை தொடர்பான விருப்ப ஒப்பந்தம் (1967) இவை எல்லாமிருந்தும் இந்தச் சட்டங்களில் ஏராளமான போதாமைகளும் இருட்டறைகளும் உள்ளன. எனவே அகதிகள் நடத்தப்படும் விதம் மிக மோசமானதாக உள்ளது. பெண்களே பெருமளவு அகதிகளாக இருக்கிறார்கள்.

ஐரோப்பிய கோட்டை மதில்களைத் (மின்சாரம் பாய்ச்சப்பட்ட) தாண்டி உள்ளே நுழைய முற்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகள் மாண்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய `வூமரா' முகாம் பாலைவனத்தின் மத்தியிலும் `கொட்டின்' முகாம் முதலைகள் உலாவும் அடர்ந்த காட்டின் மத்தியிலும் அமைந்துள்ளன.

"எனக்குப் பிடித்தது அம்மா, உனக்குப் பிடித்தது அண்ணா, அண்ணாவுக்குப் பிடித்தது அப்பா, நம் எல்லோருக்கும் பிடித்தது சோறு" என்று அகதிகள் முகாம் குழந்தையின் கூற்று உலகம் புகழ்பெற்ற கவிதையாகியிருக்கிறது. அந்த அளவு பசி பட்டினி அவர்களை ஆட்கொள்கிறது.

ஒருமுறை அகதிக் குழந்தைகளிடையே ஓவியப் போட்டி நடத்தப்பட்டபோது பெரும்பாலான குழந்தைகள் வரைந்த ஓவியம் `வீடு' அகதிகள் எப்போதும் தம் சொந்த மண்ணை, வீட்டை நினைவில் சுமந்து திரியும் அவலத்தின் வெளிப்பாடே இது.

இன்னொருபுறம் சிந்தித்தால் அகதிகள் உருவாகக் காரணம் அதிர்ச்சிகரமாகச் சுட்டப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலுமே சிறு சிறு உள் முரண்பாடுகள் கலகங்கள் அல்லது பனிப்போர்கள் இல்லாமலில்லை. அந்தப் பனிப்போர்களை ஊதிப் பெருக்கி பெரும் போர்களாகவோ. சிறு சிறு கலகங்களை நீடிக்கச் செய்யும்படியோ, செயற்கையாக போர்முஸ்தீபுகளை உருவாக்குவதையோ ஆயுத உற்பத்திப் பெருக்கம் கொண்ட ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்ய முயல்கிறது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. காரணம் அமெரிக்கா மட்டுமே 155 நாடுகளுக்கு ஆயுத விநியோகம் செய்கிறது. போர் என்பது `ஆயுத வியாபாரப் போட்டியின் சந்தை' என்கிற நிலை உருவாகியுள்ளதையும் பார்க்க முடிகிறது. சூடான் நாட்டின் ஒரு கோழி வாங்கும் விலைக்கு AK 47 துப்பாக்கி வாங்கி விட முடியுமாம்! ஆண்டொன்றுக்கு உலக இராணுவ செலவாகிய 800 மில்லியன் டொலரில் ஒரு சதவீதம் மட்டுமே பத்து ஆண்டுக்கு இந்தப் பூமியிலுள்ள குழந்தைகளைப் படிக்க வைக்கப் போதுமானது என்கிறார்கள்.

ஆனால், துரதிருஷ்டவசமாகக் குழந்தைகள் அகதிகளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகில் இன்று 102 இலட்சம் குழந்தைகள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது மிகக் கவலையளிகக்கக்கூடிய விஷயம்.

நமது காலத்தில் உருவாகிவிட்ட அகதிகளுக்கு மனித உரிமைப் பாதுகாப்பு வழங்கவும் வாழவும் வழி செய்வோம். நம் குழந்தைகள் காலத்திலாவது அகதிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வோம். ஒருபோதும் நம் தோளில் சாய்ந்தபடி நமது குழந்தைகள் கேட்க வேண்டாம் `ஏன் என்னை அகதியாக்கினீர்கள்?' என்று. - தினமணி

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.