Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தரத்திற்கு ஒரு பல்கலை., கூட இல்லையே!

Featured Replies

நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200 பல்கலை கழகங்களில், இந்திய பல்கலை கழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை மாற வேண்டும். தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலை கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:


நம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம், வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் மையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், பாடத் திட்டங்களை தயாரித்து, அதனடிப்படையில், பட்டதாரிகளை உருவாக்கும் நிலை காணப்படவில்லை. படித்த பாடம் ஒன்றாக இருக்கிறது; வேலைவாய்ப்பு வேறு மாதிரி உள்ளது. இது மிகவும் மோசமான நிலை; இதை சரி செய்ய வேண்டும்.உயர் கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றின் செயல்பாடுகள் எல்லாம், எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தியாக இல்லை. இந்நிறுவனங்கள் சரிவர செயல்படாதது கவலை அளிப்பதாக உள்ளது.

 

மேம்படுத்த வேண்டியது அவசியம் : @@உலக அளவில், சர்வதேச தர பல்கலை கழகங்கள் என, 200 பல்கலை கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலில், இந்திய பல்கலை கழகங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. பல நாடுகளில் காணப்படும், மிகச்சிறந்த தொழில் நுட்ப தரத்தையும், இங்குள்ள கல்வி நிறுவனங்களில் காண முடியவில்லை. இந்தியாவில், உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை, மேம்படுத்த வேண்டியது அவசியம்; இதற்கு ஏற்ற வகையில், இந்நிறுவனங்களுக்கு, வசதிகள் இருக்க வேண்டும். குறிப்பாக, தன்னாட்சி அதிகாரங்களும், தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் சுய அதிகாரமும், வழங்கப்பட வேண்டும். முன் எப்போதும் இல்லாத வகையில், 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மத்திய அரசு சார்பில், 51 கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.

 

ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களும் இதில் அடங்கும். கடந்த, 2004ல், 17 ஆக இருந்த மத்திய பல்கலை கழங்கள் எண்ணிக்கை, 2010ல், 44 ஆக உயர்ந்துள்ளது. கோவாவை தவிர, அனைத்து மாநிலங்களிலும், மத்திய பல்கலை கழகங்கள் உள்ளன. உயர் கல்வி துறையில், அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட, தீவிர நடவடிக்கைகளால், நாடு முழுவதும், 19 ஆயிரம் கல்லூரிகள் பயனடைந்துள்ளன. இதனால், 25.9 கோடி மாணவர்கள், உயர் கல்வி பயிலும் சூழ்நிலை உருவாகியுள்ளது; இந்த நிலை மட்டும் போதாது. இந்த உயர் கல்வி நிறுவனங்களை, உலக தரத்திற்கு இணையானதாக மாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-182700599.html

  • தொடங்கியவர்

அநேகமான அரசியல்வாதிகளும் பணக்கரார்களும் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளியே படிப்பிக்கின்றார்கள் (படிப்பில் ஓரளவு திறமை  உள்ளவர்கள் - இராகுல் இல்லை :o  ) 

  • தொடங்கியவர்

உயர் கல்வியில் தனியார் பங்கேற்பை ஊக்குவிக்கும் கொள்கை அவசியம்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

 

உயர் கல்வித்துறையில் தனியார் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.புது தில்லியில் நடைபெற்ற மத்திய பல்கலைக்கழகங்களின் மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:

 

உயர் கல்வித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பதற்கு, அதை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக நமது சமூகக் கடமைகளை ஒருபோதும் காற்றில் பறக்கவிடக்கூடாது. தரமான கல்வி வழங்கப்படுவதற்கு உரிய கொள்கைகள் வகுப்பதை பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.இத்தகைய கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் மத்திய பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்காற்ற முடியும். இப்போதைய சூழலில் உயர் கல்வியில் தனியார் பங்கேற்பு மிகவும் அவசியமானதாகும். அதேசமயம் அது சுயேச்சையாக மிகச் சிறந்த நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

 

மேலும் திறமையானவர்களைக் கண்டறிந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்துவதில் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இப்போது நம் முன்பாக உள்ள மிகப் பெரும் சவாலே அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதுதான் என்று கூறினார்.

 

http://dinamani.com/latest_news/article1451113.ece

ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்த காட்டுமிராண்டிகளின் சர்வதேச தரக் கனவு கனவாகவே தான் போகும்!

மனிதாபிமானம் இல்லாதவர்கள் கீழ்நிலை அடைவதே அனைவருக்கும் நன்மை!

  • தொடங்கியவர்

ஒரு உலகத்தர பொருள் இந்தியாவிடம் இருந்தால் - ஒரு உலகத்தர பொருள் இந்தியாவிடம் இருந்தால் - உலகத்தர பல்கலைக்கழகம் இருக்கும்.

 

இந்தியா என்றதும் என்ன நினைவிற்கு வருகின்றது?

 

ஒரு கார் ? ஒரு தொலைக்காட்சி நிறுவனம்? இல்லை வருவது துடுப்பெடுத்தாட்டமும் ஆட்களை ஏற்றுமதி செய்வதும் தான்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.