Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதின்மத்தின் பரிதவிப்பில்………….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதின்மத்தின் பரிதவிப்பில்………….

 

பவள சங்கரி

teenagers1-300x66.jpg

குழந்தைப் பருவம் மற்றும் காளப் பருவம், ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய, நுண்ணிழைகளால் நெய்யப்பட்டதொரு மெல்லிய பருவம் இந்த ‘டீன் ஏஜ்’ என்கிற பதின்மப் பருவம்! ஆம் அதிகமாக உணர்ச்சிவயப்படுதலும், அச்சம் கொள்ளுதலும், ஊசலாடும் உள்ளமும், கோபம் கொள்ளுதலும், கை வந்த கலை இந்தப் பருவத்தினருக்கு. பெற்றோராகிய நாமும் சில காலம் முன்புதான் இப்பருவத்தைக் கடந்து வந்தவர்களாக இருப்பினும், ஏனோ பல சமயங்களில் இன்று நம் குழந்தைகளின் அப்பருவத்திற்கேயுரிய பிரச்சனைகளைக் கண்டு, அச்சம் கொண்டு, அதனை விட்டுப் பிடிக்காமல், அவர்கள் மீது மேலும் அழுத்தம் ஏற்படுத்த எத்தனிக்கிறோம். பெற்றோர் தம் குழந்தைகளுடன் நல்ல நண்பர்களாகப் பழக முயற்சிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மூத்தோர் என்ற ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். கலீல் கிப்ரான் அழகாகச் சொல்லுவார், ‘ குழந்தைகள் நம் மூலமாகத்தான் வெளி வந்தார்களே தவிர, அவர்கள் நம் உடைமைகள் அல்ல’. என்று.

http://coralsri.blogspot.com/2011/01/blog-post_24.html

அவர்கள் மீது நம் எண்ணங்களைத் திணித்தலை முதலில் நிறுத்த வேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ நாம் வழிகாட்டியாக மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து அக்கப்பலை நாம் விரும்பும் திசையில் செலுத்தும் மாலுமியாக இருக்க முயற்சிக்கக் கூடாது!

நம் வல்லமை இதழின் ‘செல்லம்’ பகுதி குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, அவர்களோடு பயணித்து அவர்களை நல் வழி செலுத்தி நல்ல மனிதர்களாக உருவாக்கும் முயற்சியின் முதல் படியேயாகும்!

பெற்றோர்கள் தங்கள் செல்லங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய இரகசியங்கள் சில!

1. நண்பர்களுக்குள் ஏதேனும் உட்பூசல் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் புகைச்சல் காரணமாக நிம்மதி இழப்பார்கள்.

2. தீய சேர்க்கைகள் கொள்ளும் வேளைகளில், நம் கண்களைப் பார்த்துப் பேசத் தயங்குவார்கள். நெருங்கி வரவும் அஞ்சுவார்கள்.

3. அடிக்கடி நண்பர்கள் வீட்டில் சென்று சேர்ந்து படிக்கப் போவதாகச் சொன்னால், அது அவசியம் கண்காணிக்கப்பட வேண்டியதாகும்.

4. முக்கியமான தேவைகளுக்காக கொடுத்த பணம் தொலைந்து போனதாக சொன்னால், அது போன விதம் ஆராயப்பட வேண்டும்.

5. காலையில் வழக்கமாக எழும் நேரம் அடிக்கடி கடந்து போனால், அது குறித்து விழிப்புணர்வு கொள்ளல் வேண்டும்.

6. வீட்டின் வெளியே நிறுத்தியிருக்கும் வாகனம், நாம் தூங்கும் நேரமோ, வெளியே சென்றிருக்கும் நேரமோ மட்டும் அடி பட்டோ அல்லது இடம் மாறியோ இருப்பதைக் கண்டால் விழித்துக் கொள்ள வேண்டும்.

7. வீட்டு சன்னலின் கண்ணாடிகள் பந்து பட்டு உடைந்திருந்தால் அவசரப்பட்டு அடுத்த வீட்டு குழந்தைகளுடன் சண்டைக்குச் சென்று விடக் கூடாது.

8. அவர்கள் தேர்ந்தெடுக்கப் போகும் பாடம் சம்பந்தமாக நம் அபிப்ராயங்களை அவர்கள் மீது திணிப்பதை விட, மேலோட்டமாக நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே நன்மையளிக்கும்.

9. வீட்டுப் பாடங்கள் செய்யும் போது பகுதியாக நிறுத்தப் பட்டிருந்தால், அது நண்பர்களுக்குள் ஒப்பந்தம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! ஆம் ஆளுக்கொரு பகுதியாகச் செய்து பின்பு மாற்றி காப்பியடித்து விடுவது!

10. மாலை பள்ளி விட்டு அடிக்கடி தாமதமாக வீடு திரும்பி தகுந்த காரணம் சொல்ல முடியாமல் தடுமாறினால், நாம் தெளிவாக வேண்டும்.

11. வீட்டில் முக்கியமான பரிசுப் பொருட்களோ அல்லது எலக்ட்ரானிக் பொருட்களோ காணவில்லையென்றால், சமீபத்தில் பரிசுப் பொருளாகத் தர வேண்டிய தேவை ஏதும் ஏற்பட்டிருக்குமோ என்பதை ஆராய்தல் நலம்.

12. செல்பேசியில் அடிக்கடி தலையை நுழைத்துக் கொண்டோ, குறுந்தகவல் பரிமாறிக் கொண்டோ இருந்தால் அவசியம் அதைப் பரிசீலிக்க வேண்டும்.

13. நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி திரைப்படம் பார்க்கப் போவதோ, வீடியோ படம் பார்க்கப் போவதோ கண்காணிக்கப்பட வேண்டியதாகும்.

14. திடீரென நம் செல்பேசியின் கட்டணம் அளவிற்கதிகமாக உயர்ந்து கொண்டு போனாலும் விழித்துக் கொள்ள வேண்டும். பத்திரமாக நம் கண் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் நலம்.

15. செல்பேசியில் இருக்கும் பெயர்கள் அனைத்தும் அதன் உண்மையான வடிவம் என்று தவறாக எண்ணக் கூடாது! அடிக்கடி குறிப்பிட்ட எண்ணிற்கு அழைப்பிருந்தால் அன்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

இளங்கன்று பயம் அறியாது ஏதேனும் மாய வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்கான பாதுகாப்பு உணர்வே பெற்றோருக்கு எப்பொழுதும் அதிகமாக இருக்கும் அல்லவா? இன்னும் நிறைய ரகசியங்கள் வரும்!

 

 

பதின்மத்தின் பரிதவிப்பில்………..(2)

 

வசந்தா சுத்தானந்தன்

coral-s-friend-247x300.jpgடீன் ஏஜ் பருவத்தினா  பற்றி பவள சங்கரி  கூறிய  “அவாகள் மீது நம் எண்ணங்களை திணித்தல் கூடாது. அவாகள் வாழ வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என்ற கூற்று முற்றிலும் உண்மை. மேலும் பதின்மத்தினரைப் பற்றி சில விசயங்களைப் பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன்.

1. பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வே இன்றி, மிகப்பெரிய பொய்யையும் அசால்ட்டாக எடுத்து வீசும் விளையாட்டுக் குழந்தைகள்!

2.    டீன் ஏஜ் பருவத்தில் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. ஏனெனில் பையன்கள் ஏதாவது சொல்லி பெண்ணின் பலவீனத்தை பயன்படுத்தி தன் வலையில் விழ வைக்கிறான். அந்தப் பெண்ணை தன் ஆசைக்கு பயன்படுத்தி விட்டு விலகி சென்று விடுகிறான். அது அவனுக்கு பொழுது போக்கு. பெண்ணுக்கு வாழ்க்கைப் பிரச்சனை.

3. 3.    ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கக் கூடிய காலம். பெண்கள் தான் விழிப்புணாவுடன் இருக்க வேண்டும். நட்புடன் இருவரும் இருக்கலாம் தவறில்லை. எல்லை மீறும் போது பெண் அந்த பையனின் நட்பைத் துண்டித்து விட வேண்டும்.

4.    தேர்வு சமயத்தில் பிட் கொண்டு வந்து தேர்வு  எழுதுவது அதிகமாகி விட்டது. பிட் எழுதும் நேரத்தில் மாணவர்கள் படித்து விட்டு வந்து தேர்வு எழுதலாம்.

5. ஆசிரியர்களின் கண்டிப்பான போக்கு தங்களின் நன்மைக்கே என்பது பிற்காலங்களிலேயே உணரப்படுகிறது……. அதாவது தாங்களும் பெற்றோர் ஆகும் காலங்களில் மட்டுமே!

6. வாகனங்கள் ஓட்டும் போது அதி வேகமாக ஓட்டத்தெரிந்தால் மட்டுமே தாங்கள் கதாநாயகர்களாக பார்க்கப்படுவோம் என்ற தவறான எண்ணம்!

7.    மாணவிகள் ஸ்டைலுக்காக சாப்பிடாமல் தங்கள் உடல் நலத்துக்குத் தேவையான சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் அவாகள் மற்ற மாணவிகளிடம் எனக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது என்று சொல்வது, கல்லூரிக்குக்  குறைந்த அளவு உணவு கொண்டு வந்து இவ்வளவு தான் நான் சாப்பிடுகிறேன் என்று சொல்வது போன்றவை அவாகள் உடல் நலத்தைக் கெடுத்து விடும்.

8.    எந்த வேலையும் செய்யாமல் படிப்பது. டீவி பார்ப்பது என்று மட்டும் இருக்கக் கூடாது. வீட்டைக் கூட்டுவது. சுத்தப் படுத்துவது கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். வெளி நாடுகளில் எல்லாம் மாணவாகள்  வீட்டைச் சுத்தமாக வைப்பது , தங்கள்  தேவைகளைத்  தாங்களே கவனித்துக் கொள்வது என்று எளிதாக பழகிக் கொள்கிறார்கள்!  நம் நாட்டில்தான் பெற்றோர்களே தம் குழந்தைகளுக்கு  பழக்காமல் விட்டு விடுகிறார்கள்.

http://www.vallamai.com/chellam/articles/64

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.