Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குரு இன்று காலை 8 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். கடந்த 23ம் தேதி அவரது கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து அப்சல் குருவின் மரண தண்டனை இன்று காலை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் 5 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் டெல்லி காவல் துறையை சேர்ந்த 5 போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த பெண் அதிகாரி, நாடாளுமன்ற ஊழியர்கள் இரண்டு பேர் மற்றும் தோட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தனர். பத்திரிகையாளர் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. சிகிச்சை பலன் இன்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது நாடாளுமன்ற கூட்ட தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். நாட்டின் உயர்ந்த அதிகார மையமாக கருதப்படும் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக கருதப்பட்டது. இந்த வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்த சிபிஐ ஒரு சில மணி நேரத்திலேயே தீவிரவாதிகளுக்கு துணை போன அப்சல் குரு உள்பட 4 பேரை கைது செய்தது. இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என சந்தேகத்திடமின்றி விசாரணை கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 4 பேருக்கும் 2002 டிசம்பர் 18ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2003 அக்டோபர் 29ம் தேதி டெல்லி ஐகோர்ட் இதனை உறுதி செய்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 4ல் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. கடந்த 2006ம் அக்டோபர் மாதம் அப்சல்குருவை தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டது. அப்சல்குரு சார்பாக அவரது மனைவி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இதை தொடர்ந்து அப்சல் குரு மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த 6 ஆண்டுகளாக அப்சல்குருவின் கருணை மனு ஜனாதிபதி அலுவலகத்தில் நிலுவையில் இருந்தது. கடந்த ஆண்டு மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் புனேவில் உள்ள எரவாடா சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்டார். இதை தொடர்ந்து அப்சல் குருவையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என பாஜ, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. அப்சல் குரு கருணை மனு மீது விரைவில் முடிவு எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவித்தார். இந்நிலையில் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு கடந்த மாதம் 23ம் தேதி ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் கடந்த 3ம் தேதி அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நிராகரித்தார்.  இதை தொடர்ந்து அப்சல்குருவை தூக்கிலிடும் நடவடிக்கைகள் ரகசியமாக தொடங்கப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு திகார் சிறையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். அவருக்கு வயது 43. அப்சல் தூக்கிலிடப்பட்ட தகவலை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

பாரதிய ஜனதா வரவேற்பு

நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை பாரதிய ஜனதா வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக பாஜ செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், ‘‘தண்டனை தாமதமாக நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதை வரவேற்கிறோம். இதற்காகத்தான் நாட்டு மக்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டதை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வரவேற்றுள்ளார்

http://www.dinakaran.com/

உண்மையில் இவர் குற்றவாளி தானா?  :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.