Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்திரோபாய நகர்வுகளுக்கான மிக முக்கிய காலம் நெருங்குகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்திரோபாய நகர்வுகளுக்கான மிக முக்கிய காலம் நெருங்குகிறது

அமைதி முயற்சிகள் தோற்று செயலிழந்து போய், நாட்டில் மீண்டும் ஒரு பயங்கர யுத்தம் வெடிக்கும் ஆபத்து ஏது நிலை உருவாகி வருவதை இந்த நாட்டின் சாதாரண பிரஜை வரை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

விரும்பியோ, விரும்பாமலோ இந்த இலங்கைத்தீவு ஒரு கொடூர யுத்தத்துக்கு முகம் கொடுக்கும் அவலம் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. இலங்கைத் தீவில் அகோர யுத்தம் நிலவும்போது முன்னரைப் போல சர்வதேச சமூகம் வெறும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு அதனைக் கைகட்டிப் பார்த்திருக்குமா என்ற வினாவும் எழுகின்றது.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து அவர்களைத் தடை செய்தது ஐரோப்பிய ஒன்றியம். அதனால், அந்த ஒன்றியத்தில் இடம்பெற்றிருக்கும் சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள் அந்தப் பணியைச் செய்வதற்கான நடுநிலைத் தன்மையை தார்மீகத் தகைமையை இழந்துவிட்டனர் என்ற யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டியுள்ள விடுதலைப் புலிகள், அக்காரணத்தினால் அவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். அதற்கு ஒரு மாத கால அவகாசமும் அவர்கள் வழங்கியிருக்கின்றனர்.

இந்த ஒரு மாத காலத்துக்குள் அந்த இடங்களுக்கு புதிய பொருத்தமான அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கண்காணிப்பாளர்களை அனுசரணைத் தரப்பான நோர்வே தேடிப் பிடித்துக் கொண்டுவந்து பணிக்கு அமர்த்துமா என்பது சந்தேகமே. அந்நிலையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 65 வீதத்தினால் குறையும் ஆபத்து உள்ளது. அதனால், ஏற்படும் நெருக்கடி, தென்னிலங்கையில் தீவிர யுத்த வெறியில் இருக்கும் பாதுகாப்பு வட்டாரங்களுக்குச் சாதகமான ஒரு சூழ்நிலையைத் தவறாது ஏற்படுத்திக் கொடுக்கும். யுத்த நெருக்கடிக்குள் மோசமாகச் சிக்கக் கூடிய தமிழர் தாயகத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையாளர்களாக பிரசன்னப் பிரதிநிதிகளாக இருக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையிலும், பணியிலும், பொறுப்பிலும் பெருவீழ்ச்சி ஏற்படுவது தமிழர்களைப் படுகொலை செய்து, பேரழிவுக்கு உள்ளாக்கி, அதில் லாபம் தேட முயலும் பேரினவாத சக்திகளுக்கு உகந்த பொருத்தமான போர்க் களநிலைமையைத் தவறாது உருவாக்கிக் கொடுக்கும்.

அவ்வாறு தமிழர்களுக்கு ஏன் முழு இலங்கைக்குமே பேரழிவு தரக்கூடிய யுத்தம் மீள வெடிக்கும்போது அந்நிய சக்திகள் இரண்டு வடிவங்களில் இங்கு தமது மூக்கை நுழைக்கும் ஏது நிலையும் உண்டு. அதற்கான புறநிலை இப்போதே கருக்கட்டி வருவதும் நாம் கவனிக்கத்தக்கது.

அப்படி இலங்கைத் தீவுக்குள் அளவு மீறி தலையை நீட்டக் கூடிய இரண்டு சக்திகளுள் ஒன்று இந்தியா. மற்றது "உலக அமைதிக் காவலனின்" ஏவலாக வரக் கூடிய ஐக்கிய நாடுகள் சபை.

உலகில் பிணக்குகள், பூசல்கள், உள்ளூர்க் கலகங்கள் நிகழும் நாடுகளில் மனிதாபிமானத்தின் பெயரைக் கூறிக் கொண்டு ஐ.நா. நுழையும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. உலகப் பொலீஸ்காரனான அமெரிக்காவின் தலையீடு பல இடங்களிலும் ஐ.நா. படை ரூபத்தில்தான் அரங்கேறி வருகின்றது. இலங்கையில் இனப்போர் மோசமாக வெடிக்கும்போதும் அந்தத் தலையீட்டுக்கு அதிகளவில் வாய்ப்புண்டு.

ஆனால், இந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஐ.நா.வின் பெயரைப் பயன்படுத்தியோ அல்லது வேறு வடிவத்திலோ அந்நிய சக்திகள் புதிதாக வந்து காலூன்றுவதை இந்தப் பிராந்தியத்தின் ஏக வல்லாதிக்க சக்தியான இந்தியா அடியோடு விரும்பாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டாது.

எனவே, அது முந்திக் கொண்டு இப்பிராந்தியத்துக்குள் மூக்கை நுழைக்க முயலுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கான புற ஏதுநிலைகள் இப்போதே உருவாகி வருவதும் நாம் கவனிக்கத்தக்கது.

உத்தேசப் போர் தவிர்க்க முடியாததாகி வருவதை உணர்ந்துள்ள தமிழர்களின் தலைமை, அத்தகைய போர் வெடித்த பின் உருவாகக் கூடிய இத்தகைய பிற தலையீடுகளை ராஜதந்திர ரீதியில் எதிர்கொள்வதற்கான திட்டங்கள், வியூகங்கள், தந்திரோபாயங்கள் போன்றவற்றை வகுத்து வைத்துக் கொள்வதும் அவசியமாகின்றது.

இத்தகைய தலையீட்டு ஆர்வமுள்ள சக்திகளின் இலக்கை, தமிழர்களின் உரிமைப் போராட்ட இலக்குக்குக் சமாந்தரமானதாக மாற்றும் வகையில் தந்திரோபாயங்களை வகுத்துக்கொண்டு, உரிமைப் போருக்கான ஊக்க சக்தியாக அவற்றைப் பயன்படுத்தும் நகர்வைத் தமிழர்கள் தங்கள் திட்டமாக முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய மட்டத்திலும், இலங்கைத் தேச மட்டத்திலும், சர்வதேச ரீதியிலும் மிக நுட்பமாக இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய காலம் தமிழர்களின் தலைமைக்கு நெருங்கி வருகின்றது. அதைக் கவனமாக தீர்க்கதரிசனப் பார்வையோடு கையாள்வது அவசியம்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.